search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
    X

    அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா

    • சிவகங்கை அருகே உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • இந்த விழாவில் நாளை இரவு கோழி பூஜை நடைபெற உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் புரவி எடுப்பு விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    தினமும் அய்யனார், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது.

    நேற்று இரவு தேவகோட்டை குலாலர் தெருவில் உள்ள மகமாயியம்மன் கோவிலில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மண்ணால் ஆன குதிரை மற்றும் காளைகளை தோளில் சுமந்து சுமார் 4 கி.மீ தூரம் ஒத்தக்கடை, ஆற்றுப்பாலம், தளக்காவயல் விலக்கு வழியாக வேம்புடைய அய்யனார் கோவில் எதிரே உள்ள திடலில் பழங்கால முறைப்படி பனை ஓலையால் அமைக்கப்பட்ட பந்தலில் கிராம மக்கள் வைத்தனர்.

    குழந்தை வேண்டியும், வீட்டுக்குள் பாம்பு, ஓணான் வராமல் இருக்க மணலால் செய்த ஆண், பெண், மிதளை பிள்ளை, பாம்பு, தேள், ஓணான் போன்றவற்றை நேர்த்திக்கடனாக வேம்புடைய அய்யனாருக்கு செலுத்தினர்.

    விழாவில் நல்லாங்குடி, வெளிமுத்தி, பாப்பான்கோட்டை, இரவுசேரி, தளக்காவயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நாளை இரவு கோழி பூஜை நடைபெற உள்ளது.

    Next Story
    ×