search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HighCourt"

    நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்துக்கு எதிராக கருணாநிதி தொடர்ந்த வழக்கை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்க முடியாது என்று ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, இதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    அந்த ஆணையம் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

    இதேபோன்று ஆணையம் அமைத்ததை எதிர்த்தும் தனியாக வழக்கு போட்டனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, “மனுதாரர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் உள்ளார். அவரிடம் கருத்து கேட்டுதான் இந்த வழக்கை வாதிட முடியும் என்பதால் விசாரணையை வருகிற 6-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

    “கருணாநிதி குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். அதேசமயம் இந்த வழக்கை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்க முடியாது. எனவே, இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படும். இருதரப்பினரும் வாதிட வேண்டும்” என்று நீதிபதி கூறினார்.
    18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் வழக்கறிஞர்களும் நீதித்துறையை விமர்சனம் செய்வது தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமமானது என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். #Highcourt #MLAsDisqualified
    சென்னை :

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்த பின்னர் டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி விதிகளை மீறிவிட்டதாகக் கூறி அவர்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இதை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சமீபத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்து இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததால், வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆயினும், நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து பரவலாக பலரும் விமர்சனம் செய்து பேட்டியளித்தனர்.

    இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கிருபாகரன், மனுதார்கள் மட்டுமல்ல வழக்கறிஞர்களும் நீதித்துறையை விமர்சனம் செய்வது தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமமானது என தெரிவித்தார்.

    மேலும், எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தீர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தங்க தமிழ்செல்வன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். #Highcourt #MLAsDisqualified 
    சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighCourt #NewJudges
    சென்னை:

    சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 56 நீதிபதிகள் பணியில் இருந்து வருகின்றனர். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு குமாரி பி.டி.ஆஷா, நிர்மல்குமார், சுப்ரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கையெழுத்திட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இன்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட 7 நீதிபதிகளை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. #ChennaiHighCourt #NewJudges
    பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது.
    சென்னை:

    பா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், சமூக வலை தளத்தில் பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறான, கீழ்தரமான கருத்துக்களை பதிவிட்டார். எஸ்.வி.சேகரின் செயலுக்கு, பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து, எஸ்.வி. சேகரும் மன்னிப்பு கோரினார். தனக்கு வந்த ஒரு பதிவை படித்துப் பார்க்காமல் அப்படியே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விட்டதாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பொதுத்தளத்தில் பகிர்வது என்ற பழக்கத்தின் அடிப்படையில், இந்த செய்தியையும் முழுமையாக படித்துப்பார்க்காமல், அப்படியே பதிவு செய்து விட்டேன். வேறு எந்த தவறையும் நான் செய்யவில்லை. இதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளேன். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    இவருக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று பத்திரிகையாளர் முரளி கிருஷ்ணன் சின்னதுரை என்பவர் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து எஸ்.வி. சேகர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. #SVeShekher
    ×