search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமனம்
    X

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமனம்

    சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighCourt #NewJudges
    சென்னை:

    சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 56 நீதிபதிகள் பணியில் இருந்து வருகின்றனர். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு குமாரி பி.டி.ஆஷா, நிர்மல்குமார், சுப்ரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கையெழுத்திட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இன்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட 7 நீதிபதிகளை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. #ChennaiHighCourt #NewJudges
    Next Story
    ×