search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harvesting"

    • அங்கு வந்து நெல் அறுவடை எந்திரம் கொண்டு நிஜாமுதீன் வயலில் நெல்லை அறுவடை செய்துள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது வயலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.

    கும்பகோணம்: மீது போலீசார் வழக்கு

    கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரம் பகுதி சதாம்உசேன் தெருவை சேர்ந்தவர் நிஜாமுதீன் (வயது 52). இவருக்கு சொந்தமான நஞ்சை நிலம் மருத்துவகுடி கிராமத்தில் உள்ளது.

    இதில் நிஜாமுதீன் விவசாயம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக கடன் வாங்கி குறுவை சாகுபடி செய்து வந்தார். தற்போது குறுவை நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று காலை வயலுக்கு சென்ற நிஜாமுதீன் நெல் அறுவடைக்கு தயாராக இருப்பதை கண்டு அதற்கான பணிகளில் ஈடுபட்ட நினைத்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில் நேற்று மதியம் மேலமருத்துவக்குடி பட்டவெளி தெருவை சேர்ந்த பழனிச்சாமி(38) என்பவர் சிலருடன் அங்கு வந்து நெல் அறுவடை எந்திரம் கொண்டு நிஜாமுதீன் வயலில் நெல்லை அறுவடை செய்துள்ளார்.

    இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இதுபற்றி நிஜாமுதீனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது வயலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.

    அங்கு எந்திரத்தை கொண்டு தனது வயலில் தன் உழைப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெல்லை பழனிசாமி மற்றும் சிலர் மும்முரமாக அறுவடை செய்தது தெரியவந்தது.

    இதுபற்றி நிஜாமுதீன் பழனிச்சாமி யிடம் சென்று எப்படி என் வயலில் நீங்கள் அறுவடை செய்யலாம் என்று தட்டிக் கேட்டுள்ளார்.

    அப்போது பழனிசாமி மற்றும் அவருடன் வந்த கும்பல் நிஜாமுதீனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் செய்வதறியாது தவித்த நிஜாமுதீன் உடனடியாக சென்று திருநீலக்குடி போலீசில் புகார் செய்தார்.

    இதுபற்றி போலீசார் பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மற்றொருவர் உழைப்பில் விளைந்த நெல்லை ஒரு கும்பல் அறுவடை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் ஆயிரம் அடிக்கு மேலாகத்தான் நீர் கிடைக்கும் நிலை இருந்து வந்தது.
    • நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நகரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் முதலிபாளையம் பிரிவு அருகே பெம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் எனும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2014ம் வருடம் இரு ஆழ்துளை கிணறுகள் 1100 அடி மற்றும் 800 அடி ஆழத்திற்கு நீர் தேவைக்காக அமைக்கப்பட்டது‌.ஆனால் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் கோடை காலத்தில் வறண்டு போவதும் மழை காலத்தில் மட்டும் தண்ணீர் இருந்ததால், இதனை மூடிவிட பள்ளி நிர்வாகம் முடிவெடுத்தது.

    இப்பள்ளி அமைந்துள்ள சுற்று வட்டாரப் பகுதி மிக மேடான பகுதியாகவும்,ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் ஆயிரம் அடிக்கு மேலாகத்தான் நீர் கிடைக்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் முடிவு குறித்து அறிந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன்,இந்த ஆழ்துளை கிணறுகளை மழை நீரை சேமிக்க பயன்படுத்தலாம் என எடுத்துரைத்தார்.

    இதனை அடுத்து மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் பயன் குறித்து செய்முறையாக அளிக்கும் வகையில் திட்டம் ஒன்றை அப்பள்ளி செயல் படுத்தியது.அதன்படி பள்ளி வளாகத்தில் உள்ள சுமார் ஆயிரம் அடி ஆளமுள்ள இரு ஆழ்துளை கிணற்றையும் மழை நீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக பள்ளிக் கட்டிட கூரைகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் விழும் மழை நீரை ஆழ்துளை கிணற்றில் சேகரமாகும் வகையில் மாற்றி அமைத்தது.மேலும் மழைநீர் மட்டும் சென்று சேரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்‌.

    கடந்த 2015 முதல் இரண்டு ஆழ்துளை கிணறுகளிலும் மழைநீர் முழுமையாக சேகரிக்கப்பட்டது‌.இதனால் பள்ளி வளாகத்தில் பெய்யும் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் ஆழ்துளை கிணற்றில் சேகரிக்கப்பட்டது‌. தொடர்ச்சியாக இவ்வாறு மழை நீர் பல வருடமாக உரிய வழிமுறைகளுடன் சேகரிக்கப்பட்டதால் இன்று அப்பள்ளியை சுற்றி உள்ள சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    இது பள்ளி மாணவர்களால் ஆதாரப்பூர்வமாக ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அருகாமையில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணறு ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு கோடையில் வெறும் 5 அடிக்கு மட்டுமே தண்ணீர் மட்டம் இருந்தது.தற்போது அந்த கிணற்றில் தற்போது 40 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.மேலும் நீர் மாசடையாமல் கண்ணாடி போல் தெளிவாகவும்,உப்புத்தன்மை முற்றிலும் இன்றி உள்ளது.இதேபோல் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லிலும் கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும்,3 ஆண்டாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக குடியிருப்பு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த 7 ஆண்டுக்கு மேலாக பல கோடி லிட்டர் மழை நீரை இப்பள்ளியில் கைவிடப்பட இருந்த ஆழ்துளை கிணற்றில் சேகரிக்கப்பட்டதால் இன்று பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.இப்பள்ளியின் மாணவர்கள் இந்த திட்டம் குறித்து மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் அறிவியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்து பரிசுகளையும் பெற்றுள்ளனர்.

    இதை பின்பற்றி தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் கண்டறிந்து, நிலத்தடி நீர் சேமிப்பு மையங்களாக மாற்றி,வருடம் ஒரு முறை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் என்.எஸ்.எஸ் முகாம் மூலம்,இந்த கட்டமைப்புகளை பராமரித்து மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

    ×