search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hair"

    ஆண்கள் ஸ்டைலாக்குகிறேன் என்ற பெயரில் தலைமுடிக்கு ஹேர் ஜெல், ஸ்பிரே, கலரிங் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
    பர்சனாலிட்டியை வெளிப்படுத்துவதில் முதன்மைவகிப்பது தலைமுடிதான். ஆண்கள் தலைமுடி பராமரிப்பில் பல தவறுகளைச் செய்கிறார்கள். இருக்கும்போது பத்திரமாகப் பார்த்துக்கொள்ளாமல், கொட்டிய பிறகு கவலைப்பட்டு பிரயோஜனமில்லை. அதனால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள இந்தத் தவறுகளை நீங்கள் செய்கிறீர்களா எனப் பாருங்கள். ஆம் எனில், அவற்றை உடனே திருத்திக்கொள்ளுங்கள்.

    ஆண்கள் தலைக்குக் குளிக்கும்போது, அழுக்குப் போக வேண்டும் என்பதற்காக விரல்களால் நன்கு தேய்ப்பர். அதேபோல, குளித்த பிறகும் துணியால் அழுத்தித் தேய்ப்பர். இப்படி ஈரமான முடியைக் கடினமாகத் தேய்த்தால் மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான முடி உதிர்ந்துவிடும். அதனால், எப்போதும் ஈரமான தலையைக் கடினமாகத் தேய்ப்பதைத் தவிருங்கள். அதேபோல, நிறைய ஆண்கள் சீக்கிரம் குளிக்கிறேன் என்ற பெயரில், தலைக்கு ஷாம்பு போட்டு நீரில் சரியாக அலசாமல், நுரை போகும் அளவில் மட்டும் தலையை அலசிவிட்டு வருவார்கள். இந்தப் பழக்கம் இப்படியே நீடித்தால், ஷாம்புவில் உள்ள கெமிக்கல் ஸ்கால்ப்பில் படிந்து, ஆரோக்கியமான முடிக்கு ஆப்புவைத்துவிடும்.

    ஸ்டைலான தோற்றத்துக்காக, ஆண்கள் தினமும் தலைக்குக் குளிப்பர். இப்படித் தினமும் தலைக்குக் குளிப்பதால், ஸ்கால்ப்பில் உள்ள ஈரப்பசை முற்றிலும் வெளியேறி, அதிக வறட்சியைச் சந்திக்கும். இது இப்படியே தொடரும்பட்சத்தில், தலை இருக்கும். ஆனால், முடி இருக்காது.



    இன்று பெண்களைவிட ஆண்களுக்குத்தான் அதிகமான ஹேர்ஸ்டைல்கள் டிரெண்டாகிக்கொண்டிருக்கின்றன. அடிக்கடி ஸ்மார்ட்போனை மாற்றுவதுபோல் ஹேர்ஸ்டைலையும் டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அது பொருத்தமாக இருந்தால் பிரச்சனையில்லை. பொருத்தமில்லாத ஹேர்ஸ்டைலைச் செய்துகொண்டால், அது முடி உதிர்வதை அதிகப்படுத்திவிடும். குறிப்பாக, சில்கி ஹேர் தன்மையுள்ளவர்கள், நீளமான ஹேர்ஸ்டைல்களை வைக்காமல் இருப்பது நல்லது. தற்காலிக அழகுக்கு ஆசைப்பட்டு, முடியை மொத்தமாக இழக்க வேண்டாமே!

    ஸ்டைலாக்குகிறேன் என்ற பெயரில் தலைமுடிக்கு ஹேர் ஜெல், ஸ்பிரே, கலரிங் போன்றவற்றை சிலர் பயன்படுத்துவார்கள். இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, கண்ட கண்ட பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

    ஒருசில ஆண்கள் எப்போதும் தலையை சீப்பால் வாரிக்கொண்டே இருப்பார்கள். இது, முகத்தின் தோற்றத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம், முடிக்கு நல்லதல்ல. சீப்பை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினாலும், முடி பாதிப்புக்குள்ளாகி உதிர ஆரம்பிக்கும். எனவே, ஒரு நாளைக்கு ஓரிரண்டு முறைக்குமேல் சீப்பு பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். வேண்டுமெனில், விரல்களால் அழகுப்படுத்திக்கொள்ளுங்கள். தலைக்குக் குளிப்பதற்கு முன்பு சீப்பினால் முடியைத் திருத்தம் செய்துகொள்வது, குளிக்கும்போது முடி உதிர்வதைத் தடுக்கும்.

    கூந்தலை சுத்தமாக பராமரித்தால் பொடுகு, பேன், கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து.

    வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், பாசிப்பயிறு மூன்றையும் சேர்த்துத் தடவி வந்தால் தலைமுடிக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், தலைமுடி நன்கு பளபளப்பாக இருக்கும்.

    வேப்பிலை, துளசி, புதினா மூன்றையும் நன்கு அரைத்து தலையில் பேக் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    வால்மிளகை பாலில் ஊற வைத்து நன்கு அரைத்து அதை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் பொடுகுத் தொல்லை போய்விடும்.

    மருதாணி, டீ டிகாஷன், எலுமிச்சைச் சாறு மூன்றையும் தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால், உடல் சூடு தணிவதுடன் முடிக்கும் நல்ல வலு கிடைக்கும்.

    வெயில் காலங்களில் முடி வறண்டு காணப்படும். அதைத் தவிர்க்க செம்பருத்தி இலை, வெந்தயம், கறுப்பு உளுந்து, தயிர், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் தேவையான அளவில் அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் குளிக்க வேண்டும். இதனால் முடி உலர்ந்து போகாமல் இருப்பதோடு பொடுகுத் தொல்லை, நுனி முடியில் வெடிப்பு ஏற்படுதல் என எல்லா முடி பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.

    தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் 4 டீஸ்பூன் அளவு எடுத்து மிதமாக சூடாக்கி தலையின் முடிக் கால்களில் விரல் நுனியால் நன்கு தேய்த்த பின்னர் வெந்நீரில் டவலை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டினால் கூந்தல் வறட்சியின்றி காணப்படுவதோடு, முடியும் செழித்து வளரும்.

    கோடைக்காலங்களில் தலை சருமம் வறண்டு காணப்படுபவர்கள் வால்மிளகு, வெந்தயம் (4:2) என்ற விகிதத்தில் இரண்டையும் பசும்பாலில் ஊற வைத்து இதனுடன் கசகசாவையும் கலந்து அரைத்து தலையில் ஊற வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, கூந்தல் சாஃப்ட்டாக மாறும்.
    கருமையான, நீளமான கூந்தலை விரும்பாத பெண்ளே இருக்க முடியாது. கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்கான வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.
    கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்…

    * நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

    * இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.

    * தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

    * விளக்கெண்ணெயைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

    * கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.



    * அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.

    * தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.

    * பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

    * தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.

    * தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

    இளநரையை கண்டு அதிர்ச்சி அடையாமல் பாரம்பரியமான உணவு முறைகளையும், பழக்க வழக்கத்தையும், தேவையான சத்துக்களையும் எடுத்து கொண்டால் இளநரை இல்லாமல் நம்மை காத்து கொள்ளலாம்.
    நரைமுடி என்பது மூப்பு எனும் வயது முதிர்ச்சியின் தொடக்கம். இளவயதில் நரை முடி என்பது பெரிய குமுறல். 40 வயதை கடந்து வரும் நரை முடி இப்போது 20 வயதாகும் போதே வந்து விடுகிறது. இளநரை முடி வயதான தோற்றம் அளிப்பதால் வருத்தம் அளிக்கிறது. அறிவியல் பூர்வமாக பார்த்தால் மெலனின் எனும் கருப்பு நிறத்தை தரும் நிறமிசத்து குறைவாவதே இளநரைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இன்றைய நவீன உலகில் உணவு முறைகளால் அதிகமாக இளநரை ஏற்படுகிறது. மன அழுத்தம், வளர்சிதை மாற்றக்கோளாறுகள், மறந்த எண்ணெய் குளியல், மறக்கப்படும் பாரம்பரிய உணவு முறைகள், நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள் இவைகளே இளநரை ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.

    புதிது புதிதாக சந்தைகளில் விற்கப்படும் செயற்கை வேதி பொருள்கள் நிறைந்த சோப்பு கட்டிகளும், ஷாம்புகளும் முடியின் இயற்கை அழகினை சிதைக்கின்றன. பரம்பரை காரணத்தாலும், தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாததாலும் ரத்த சோகையாலும், அதற்கு காரணமான வைட்டமின்கள் பி 12, சி, ஏ இவற்றின் குறைபாட்டாலும், மெலனின் நிறமியை உற்பத்தி செய்யும் மெலனோசிட்ஸ் எனும் செல்கள் பாதிக்கப்படுவதால் இளநரை தோன்றுகிறது.

    இள நரையிலிருந்து மீள்வது எப்படி?

    வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பித்தத்தை தூண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டும். முக்கியமாக காரசாரமான, மசாலா சேர்ந்த உணவினை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கபட்ட தின்பண்டங்களை தொடக்கூடாது. நேரத்துக்கு சரியாக சாப்பிட வேண்டும். வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

    வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய், கொய்யா, நார்த்தை, மாதுளை, வைட்டமின் ஏ அதிகம் உள்ள பப்பாளி, இரும்பு சத்துக்கு முருங்கை கீரை, கறிவேப்பிலை, பேரிச்சம் பழம், அத்தி பழம், சர்க்கரைக்கு பதில் இரும்பு சத்து நிறைந்த பனை வெல்லம், வைட்டமின் பி 12 அதிகம் உள்ள பால் மற்றும் மாமிச சூப் போன்ற சத்தான உணவுகளை, உட்கொள்ள வேண்டும். கல்லீரலை பலப்படுத்தும் கரிசலாங்கண்ணி கீரை, வைட்டமின் ஏ நிறைந்த சிறுகீரை, பொன்னாங் கண்ணிகீரை இவற்றை உணவில் அதிகம் சேர்த்துகொள்ளலாம். டீ காபி இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக புரதச்சத்து நிறைந்த பாதாம் பருப்பு அல்லது முளைகட்டிய தானியங்கள் இவற்றில் பனைவெல்லம் சேர்த்து உண்ணும் போது நல்ல பலன் கிடைக்கும்.

    பயோட்டின் எனும் வைட்டமின் பி-7 உள்ள மீன், உப்பு சேர்த்து வறுத்த பாதம், காலி பிளவர், முட்டை கரு, காளான், பாலாடைக்கட்டி போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம். இள நரையை போக்குவதில் செம்புச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. சிறுகீரை, மூக்கிரட்டை, கரிசாலை, அவுரி இலைபோன்ற மூலிகைகள் செம்புச்சத்து நிறைந்தது. இவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதுடன் இவை சேர்ந்த உள் - வெளி மருந்துகளை பயன்படுத்தலாம். செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து குடிக்கலாம். உள் மருத்துவதோடு வெளி தடவும் தைலங்களை பயன்படுத்த நல்ல பயன் தரும். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள கையான் தைலம், நீலி பிருங்காதி தைலம், மருதாணி தைலம், அவுரி தைலம், அரைகீரை விதை தைலம் இவற்றில் ஒன்றை வாங்கி பயன்படுத்தலாம்.

    கறிவேப்பிலையை அல்லது அவுரி இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்து தலை முடி தைலமாக பயன்படுத்தலாம். நிலாவரை இலை, மருதாணி இலை, கடுக்காய் பொடி இவற்றை வெந்நீரில் ஊற வைத்து பசையாக்கி தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம். மன அழுத்தத்தையும், பித்தத்தையும் குறைக்கும் சீரக தைலம், வில்வாதி தைலம், தாமரை தைலம், நெல்லிக்காய் தைலம் இவற்றில் ஒன்றை எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறாக இள நரையை கண்டு அதிர்ச்சி அடையாமல் மேற்கூறிய பாரம்பரியமான உணவு முறைகளையும், பழக்க வழக்கத்தையும், தேவையான சத்துக்களையும் எடுத்து கொண்டால் நரை மட்டுமல்ல திரை, மூப்பு, பிணி போன்ற அனைத்திலும் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.

    மரு. சோ.தில்லை வாணன் அரசு சித்த மருத்துவர், பேர்ணாம்பட்டு
    தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தின் பயன்கள், உபயோகிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தின் பயன்கள், உபயோகிக்கும் முறைகள்:

    கருஞ்சீரகம், கரிசலாங்கண்ணி, நெல்லி, வல்லாரை, செம்பருத்தி, ஆவாரம்பூ, வெந்தயம், வலம்புரி, இடம்புரி, தேவதாரு, சந்தனம், வெட்டிவேர், கார்போக அரிசி, ரோஸ் மேரி இலை, போன்ற மூலிகைகளை இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ கண்ணாடி குப்பியில் நிறைத்து நல்ல வெயிலில் வைத்து நிறம் நன்றாக மாறிய பிறகு தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி மிகவும் நேர்த்தியாக வளரவும் உதிராமலும் இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம்.

    இந்த எண்ணெயுடன் திருநீற்று பச்சிலை, தைலமர எண்ணெய், இஞ்சி, பூண்டு எண்ணெய்களை சிறிது கலந்து தேய்த்தால் பேன், பொடுகு, புழுவெட்டு தொல்லைகள் சரியாகிவிடும். இளநரையை தடுக்க இத்துடன் பாதாம், ஆப்ரிகாட், முருங்கை எண்ணெய்களை கலந்து பயன்படுத்தினால் முழுமையான பலன் கிடைக்கும்.


    அக சுரப்பிகளின் குறைகளால் முடியில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய: கருஞ்சீரகம், திரிகடுகம், கரிசலாங்கண்ணி, வல்லாரை, முருங்கை, கருவேப்பிலை, வெந்தயம் இவைகளை கலந்து கசாயம் செய்து அல்லது இத்துடன் தேங்காய், பேரிச்சை, திராட்சை கலந்து சாறு செய்து சாப்பிட்டால் இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து கிடைப்பதுடன், முடி நன்றாகும். மூளை நன்றாக வேளை செய்யும், மனம் அமைதியுறும். செரிமான உறுப்புகள் மிகச்சரியாக இயங்கும்.

    கருஞ்சீரக எண்ணெயுடன் சிவனார் வேம்பு, கிரந்தி நாயகம் சுத்தமான மஞ்சள் கலந்து உடல்முழுவதும் பூசி குளித்தால் தோல் சுத்தமாக மினுமினுப்புடன் தோற்றமளிக்கும். தோல் அரிப்பு, கொப்புளங்கள் முற்றிலும் குணமாகும். கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது பரங்கி விதை எண்ணெய் கலந்து தோல்மீது குறைவாக பூசினால் தோல் வறட்சி சரியாகும்.

    கருஞ்சீரக எண்ணெய் (அ) பொடியில் சுத்தமான மஞ்சள், சந்தனம், கார்போக அரிசி, வெந்தயம், தேன் இவைகளை சேர்த்து சுத்தமான பன்னீரில் கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தி பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள் உங்கள் முகப்பொலிவை பார்த்து. இந்த கலவையுடன் குப்பைமேனி, கோரைக் கிழங்கு பொடிகளை சிறிது சேர்த்து பயன்படுத்தினால் முகத்திலும் மற்ற இடங்களிலும் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும் மீண்டும் வளராமலும் இருக்க பெரிதும் பயன்படுவதை உணரலாம்.
    கூந்தல் வளர்ச்சிக்கும் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. வலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    கூந்தல் வளர்ச்சிக்கும் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. வலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானது. முட்டையில் புரதம் அதிகம் நிறைந்திருக்கிறது. அது கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு தூண்டுகோலாகவும் விளங்குகிறது.

    ரோம கால்களின் வளர்ச்சிக்கு இரும்பு சத்து அவசியமானதாக இருக்கிறது. உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்வு தவிர்க்கமுடியாததாகிவிடும். அதை தவிர்க்க இரும்பு சத்து அதிகம் கொண்ட கீரை வகைகள், பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    தினமும் ஒரு எலுமிச்சை பழத்தில் உள்ள சாறு பருகுவதும் நல்லது. அதில் இருக்கும் வைட்டமின் சி, ஜொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது. அது தலைமுடியை வலுவாக்க உதவும். கூந்தல் வளர்ச்சியையும் மேம்படும்.

    ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் முடி வளரவும், கூந்தலை வலுப்படுத்தவும் உதவும். பாதாம் மற்றும் வால்நட் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது. ஆளி விதைகளை மதிய உணவுடன் சேர்த்து கொள்வதும் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.

    முழுதானிய வகைகளில் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி போன்றவை நிறைந்திருக்கின்றன. மேலும் அதில் இருக்கும் பயோட்டினும் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    தினமும் கேரட் ஜூஸ் பருகுவதும் கூந்தல் வளர்ச்சிக்கு வித்திடும். அதில் இருக்கும் வைட்டமின் ஏ ரோமக்கால்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    அவகோடாவும் வைட்டமின் ஈ நிரம்பப்பெற்றது. காலை உணவுடன் சாலட்டாக அதனை சாப்பிடலாம்.
    உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    இந்த காலத்தில் பெண்கள் நீண்ட நேரம் வேலை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் அவர்களின் கூந்தல் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. உங்களுக்கு தகுந்த பிராண்ட் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே வேலைக்கு போகும் பெண்களின் கூந்தல் பராமரிப்புக்காக மிகவும் அத்தியாவசியமான சில பொருட்களை பற்றி பார்ப்போம்.

    * ஹேர் கன்டிஷனரை நீங்கள் ஷாம்பு பயன்படுத்தினால் முடியில் இருக்கும் எண்ணெய் பசை மட்டும் தான் போகும். ஆனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கன்டிஷனர் தேவை. தினமும் ஷாம்பு போட்டு குளித்த பிறகு கன்டிஷனர் பயன்படுத்தினால் மிருதுவான மற்றும் அலங்கரிக்க ஏதுவான கூந்தல் கிடைக்கும். நீங்கள் கன்டிஷனரை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் ஷாம்பு பிராண்ட் கன்டிஷனரை அல்லது உங்கள் கூந்தல் ஸ்டைல்லிஸ்ட் இடம் ஆலோசனை பெற்று தேர்ந்தெடுக்கலாம்.

    * நீங்கள் நீண்ட நேரம் வேலை பார்ப்பவரா இருந்தால் கண்டிப்பாக அந்த நாள் இறுதியில் கூந்தல் கலைந்து போகும். இந்த பிரச்சினை நிறைய பெண்களிடம் உள்ளது. எனவே இதற்கு நீங்கள் ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் நல்ல வித்தியாசத்தை காண்பீர்கள். கொஞ்சம் ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் போதும் உங்கள் கூந்தல் அதிசயிக்கும் படி அழகாக கலையாமல் இருக்கும்.



    * உங்களது முகம் மற்றும் கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டால் அது எண்ணெய் பசையுள்ள கூந்தலாகும். இதற்கு நீங்கள் தனியாக பராமரிப்பு செய்ய நேரம் கிடைக்காது. இதற்கு ஒரே தீர்வு வறண்ட கூந்தல் ஷாம்பு இதை நீங்கள் நேரடியாக பயன்படுத்தினால் கூந்தல் அழகாக மாறும். நீங்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது கூட கைக்கு அடக்கமான ஷாம்பு பாட்டில் வாங்கி கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    * நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் காலநிலை மாற்றம் உங்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் நாளுக்கு நாள் அதிகரித்து விடும். இதை சரி செய்ய ஹேர் வாளியுமரைசரை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த வாளியுமரைசர் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கிறது. ஷாம்பு போட்ட பிறகு இதை பயன்படுத்தினால் கூந்தல் அழகாக அடர்த்தியாக காணப்படும். மேலும் இது வறண்ட சிக்கலான கூந்தலை சமாளிக்கவும் உதவுகிறது.

    * உங்களது நீளமான கூந்தல் என்றால் அதை முழுமையாக பராமரிக்க நீண்ட நேரம் தேவைப்படும். ஆயில் மற்றும் ஷாம்பு அதன் வேரை சென்றடைய நீண்ட நேரம் ஆகும். எனவே இதற்கு ஹேர் மாஸ்க் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தினால் எளிதில் முடியின் வேருக்கு சென்று நல்ல பலனை தரும். மேலும் மூலிகை மாஸ்க் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தினால் அதிகமான பலனை பெறலாம்.
    இளம்வயது நரைக்கு என்ன செய்ய வேண்டும்? ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்…
    சிகிச்சையினால் குணப்படுத்த முடியாத இளநரைக்கும் மற்றும் வயதானால் இயற்கையாக ஏற்படும் நரைத்த முடிக்கும் ஹேர் டை உபயோகத்தை தவிர்க்க முடியாத கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிக இளம் வயதிலேயே ஸ்டைலுக்காக கலர் கலராக ‘டை’ அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது சரிதானா? இளம்வயது நரைக்கு என்ன செய்ய வேண்டும்? ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்…

    ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் முன் அவற்றை வகைப்படுத்தி இனம் கண்டுகொள்வது அவசியம். Para phenylene diamine என்பதின் சுருக்கம்தான் PPD. டை உபயோகிப்பவர்களுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் காரணியாக இருப்பது இதுதான். பொதுவாக பாதுகாப்பு கருதி PPD-யின் அளவு டையில் 2% க்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்கு எல்லா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் பின்பற்றுகிறார்கள் என்பது சந்தேகமே.

    2002ல் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில் 1-64% சதவீதம் வரை ஹேர் டைகளில் PPD இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் விலை மலிவான, தரமில்லாத டையை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

    காதுக்கு பின்பு அல்லது முன்னங்கையில் இந்த ‘டை’ கலவையை பஞ்சினால் கொஞ்சமாக தடவி விட்டு காய விட வேண்டும். 2-3 நாட்கள் வரை எந்தவித பக்கவிளைவும் ஏற்படாவிட்டால் பின்பு அந்த ‘டையை’ தலையில் தைரியமாக உபயோகப்படுத்தலாம்.

    இந்தியா முழுவதும் பல்வேறு ஹெர்பல் மற்றும் ஆயுர்வேதிக் டைகள் விற்கப்படுகின்றன. Para dyes அலர்ஜி உள்ளவர்களுக்கு இது உதவும். இவை மருதாணி இலையை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. 2- Hydroxy 4-Napthaquinone என்னும் வேதிப்பொருட்கள் மருதாணியில் உள்ளது. அதுதான் நமக்கு நிறத்தை கொடுக்கிறது.

    இவ்வகை பவுடர்களோடு டீ டிகாஷன் அல்லது காபி டிகாஷன் கலந்து 2-3 மணி நேரம் ஊற வைக்கும்போது ஒரு கருஞ்சிவப்பு நிறம் கிடைக்கிறது. அதனை தலையில் 2-3 மணி நேரம் வைக்க வேண்டும். இது செய்வது கொஞ்சம் சிரமம். மற்றும் ஸ்ட்ராங்கான வாசனை சிலருக்கு ஏற்றுக் கொள்ளாது. டை-அலர்ஜி இருப்பவர்கள், அதை தவிர்த்துவிட்டு இந்த மருதாணி இலை துகள்களை (ஹென்னா) பயன்படுத்திக் கொள்ளலாம்.
    இளம் வயதில் இளநரை வருவதற்கு முக்கிய காரணம் உணவுமுறை மற்றும் தரமற்ற கூந்தல் பொருட்களை பயன்படுத்துவது தான். இன்று இளநரையை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பார்க்கலாம்.
    இளமையிலேயே ஏற்படும் இளநரை தோன்றுவதற்கான காரணங்கள் என்னவென்றால், தாதுப்பொருள்களும் அடங்கிய  ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது கூட, உடல்நலத்துக்குக் கேடு விளைவித்து, அதன் காரணமாக தலைமுடிக்கும் கேடு விளைவிக்கலாம்.

    தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும்.

    * வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.

    * மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி கருமையாக வளரும்.

    * மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கறுப்பாகும்.

    * ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம்.

    * கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்திப்பூ, திரிபலா சூரணம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
    பலருக்கு என்னதான் செய்தாலும் தலையில் உள்ள எண்ணெய் பசை போகாது. முடியில் உள்ள எண்ணெய் பசையை இயற்கை முறையில் எளிதாக சரி செய்து விடலாம்.
    தலை முழுக்க எண்ணெய் பசையா இருக்கிறதா..? என்னதான் செய்தாலும் தலையில் உள்ள அழுக்குகள் பிசுக்குகள் குறையவே இல்லையா..? இதற்கெல்லாம் காரணம் பயன்படுத்தப்படும் ஷாம்பூவும், கால மாற்றமும், ஹார்மோன் குறைபாடும், ஊட்டசத்து குறைபாடும் தான். இந்த பிரச்சினைக்கு ஆயுர்வேதத்தில் ஒரு அருமையான வழி உள்ளது.

    முடியின் எண்ணெய் பசையை குணப்படுத்த ஒரு அருமையான தீர்வு தான் இந்த கற்றாழை. கற்றாழை அருமையான பலனை தரும்.

    தேவையான பொருட்கள் :

    கற்றாழை ஜெல் - 1 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை - 3 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    முதலில் கற்றாழையின் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் எண்ணெய் பிசுக்குகள் முற்றிலுமாக போய் விடும்.

    முடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை பெரிதும் உதவும். எண்ணெய் பசையுள்ள முடியை சரி செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

    தேவையான பொருட்கள் :

    முட்டை 2
    எலுமிச்சை 2 ஸ்பூன்

    செய்முறை :

    முட்டையில் உள்ள வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சேர்த்து கலந்து கொண்டு தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். இதன் பின் தலைக்கு தேய்த்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடியில் உள்ள எண்ணெய் பசை விலகி விடும்.
    கைரேகை மட்டுமல்ல, மனிதர்களின் ஒவ்வொரு தோற்றமும் அவர்களது குணத்தை சொல்லும். இதோ உங்கள் கூந்தல் அலங்காரத்தையும், உங்கள் குணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்களேன்...
    கைரேகை மட்டுமல்ல, மனிதர்களின் ஒவ்வொரு தோற்றமும் அவர்களது குணத்தை சொல்லும். உங்கள் கூந்தல் அலங்காரம்கூட நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை காட்டிக் கொடுக்கும். இதோ உங்கள் கூந்தல் அலங்காரத்தையும், உங்கள் குணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்களேன்...

    கூந்தல் தோள்பட்டையை தொட முயற்சிக்கும் ‘பாப் கட்டிங்’, பெண்ணாக நீங்கள் இருந்தால், பாசி்ட்டிவ்வான எண்ணம் கொண்டவர். எதிலும் இருக்கும் நிறைகளை அலசுவீர்கள். குறைகளை சொல்லமாட்டீர்கள். பண்பாளராக திகழ்வீர்கள். உண்மை பேசுபவராகவும், மற்றவர்களைவிட தனித்துவம் பெற்றவராகவும் இருப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் நிலைகுலைந்து போகாமல் நிதானமும், பொறுமையும் மிக்கவராக வாழ்க்கையை நடத்திச்செல்வீர்கள். மற்றவர்களைப் போல வழக்கமான வாழ்க்கையை வாழ விரும்பாதவராக, புதுமை படைப்பவராக வித்தியாசமான எண்ணங்களுடன் வலம் வருவீர்கள். காதலில்கூட உங்கள் எண்ணம் புதுமையானதாக இருக்கும். ஜொள்ளுப் பார்ட்டிகள் உங்களிடம் வழிந்து காதலைச் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அதே நேரத்தில் பண்பான ஒருவரைப் பார்த்தால் நீங்களாக காதலைச் சொல்லவும் தயங்கமாட்டீர்கள்.

    ‘பிக்சி கட்’ எனப்படும் இந்த குட்டையான கூந்தல் தோற்றம் உங்கள் உருவத்திற்கு கச்சிதமாகப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா? நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர் என்பதை காட்டுகிறது இந்த தோற்றம். உங்களுக்கு சமூக அக்கறையும் அதிகம். கொஞ்சம் ஜாலிப் பேர்வழியும்கூட. காதல் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் காதலுக்கு மேல் எல்லைமீற மாட்டீர்கள் என்று சொல்லலாம்.

    உங்களுக்கு நிறைய நண்பர்களும், பிரியமானவர்களும் இருப்பார்கள். அந்த அளவுக்கு எளிமையாக, பண்பாக பழகும் ஆற்றல் கொண்டவர். வேலையிலும் இன்பம் காண்பவர். சுய உள்ளுணர்வால் தூண்டப்பட்டு எதையும் புதுமையாகச் செய்யும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அதே நேரத்தில் சுய கட்டுப்பாடு மிகுந்தவராகவும் விளங்குவீர்கள். எவரும் உங்களைப் பாராட்டவும் பழகவும் விரும்புவார்கள். உங்களுடன் இணைந்து செயல்படவும் ஆசைப்படுவார்கள்.

    கூந்தல் உங்கள் தோள்பட்டையை தொட்டுக் கொண்டிருக்கும் இது ‘லோப் கட்டிங்’ எனப்படுகிறது. நீங்கள் பெண்ணிய கருத்துக்கள் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் இயற்கை அழகு உங்களை கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் ஈர்க்கும். பழகிப் பார்ப்பவர்களுக்கு உங்கள் பண்பாடும், கலாசாரமும் பிடித்துப் போகும். சவால்களை ஏற்றுச் செய்வதில் உங்களுக்கு விருப்பம் அதிகம். நண்பர்களை அதிகமாக உருவாக்கிக் கொள்வீர்கள். நண்பர்களுக்கு உதவுவதில் முன்னணியில் இருப்பீர்கள். நீங்கள் ஆண்களிடம் கனிவாகப் பேசுவீர்கள். ஆனால் அவ்வளவு எளிதாக காதல்வலையில் விழுந்துவிடமாட்டீர்கள். மற்றவர்கள் உங்களை அதிகமாக பேசுபவராக கருதுவார்கள். நிஜத்தில் நீங்கள் பேச்சைவிட செயலிலே அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    பின்னே புஜத்திற்கு கீழே, முன்னே மார்பகத்தை மறைக்கும் அளவுக்கு தொங்கும் இது ‘லாங் ஹேர் கட்’ எனப்படுகிறது. அதிகமாக வளரும் கூந்தலை நுனியில் மட்டும் கத்தரித்து அழகு செய்துகொள்ளும் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பவர். பொறுமை மிக்கவர். உங்களுக்கு மிகப்பெரிய கனவுகள் இருக்கும். நீங்கள் எதற்கும் கலங்குவதில்லை. அதை மற்றவர்களும் அறிவார்கள். உறவை பேணுவதிலும் வல்லவர். கடினமான மனிதர்களிடம்கூட நட்பு பாராட்டி உறவை பேண உங்களால் முடியும். ஆனால் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் மட்டும் கறாராக இருப்பீர்கள். ஏனோதானோ என்று செயல்பட மாட்டீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேற போராடுவீர்கள், பாடுபடுவீர்கள். இலக்கை அடையாமல் ஓயமாட்டீர்கள்.
    கூந்தல் வளர்ச்சிக் குறைபாட்டிற்கு சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். மேலும் கூந்தல் உதிர்வை தவிர்க்க சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
    தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச்சிக் குறைபாடுகளுக்குச் சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். நாம் உண்ணும் உணவில் இரும்பு, புரதம், துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நாம் இத்தகைய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோமா என்பது சந்தேகமே.

    நாம் சாப்பிடும் உணவுகளில் போதிய புரதச் சத்து இல்லாததால் முடி வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்திலும் குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் பெண்களில் பலருக்கு முடி உதிர்வது என்பது இயல்பான ஒன்றாகும். இந்த முடி பிரச்னை ஹார்மோன் மாற்றங்களால் நிகழக்கூடியது. இது சிறிது காலத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும்.

    இன்றைய பெண்களில் பலர் நீளமாக முடி வளர்க்க விரும்புவதில்லை. அப்படியே வளர்த்தாலும் ஹேர் கலரிங், `ஸ்ட்ரெய்ட்டனிங்' செய்கிறார்கள். சிலர்  ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இதனாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு முடி உதிரக்கூடும்.

    பூஞ்சைத் தொற்று (Fungal infection), வட்ட வடிவில் ஏற்படும் புழுவெட்டு (Ring infection) போன்றவை சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடும். இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், பாய், தலையணை, சீப்பு, டவல் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். பூஞ்சைத் தொற்று, புழுவெட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்தினால் நம்மையும் அது பாதிக்கலாம்.



    சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகக்கூட இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிகரித்துவிட்ட வாகனங்களின் புகையால் காற்று மாசுபட்டு முடி கொட்டக்கூடும். முதலில் தலையில் பொடுகு ஏற்பட்டு அதன்பிறகு முடி கொட்டத் தொடங்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலையில் பொடுகு வர வாய்ப்பு உள்ளது. சூரியஒளியில் அதிக நேரம் நிற்பதால் அல்ட்ரா வயலட் கதிர்கள் தலையை நேரடியாகப் பாதிப்பதால் தலைமுடி உடைந்து முடி கொட்டத் தொடங்கும்.

    இன்றைக்கு இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டன. ஹெல்மெட்டில் வியர்வை தேங்குவதால் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து அது தலைமுடியைப் பாதிக்கிறது. இதனால் சிலருக்கு அளவுக்கதிகமாக முடி கொட்டுகிறது. இதைத் தவிர்க்க ஹெல்மெட்டில் ஆன்டி பாக்டீரியல் சொல்யூஷன் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறையோ 10 நாள்களுக்கு ஒருமுறையோ ஹெல்மெட்டை சூரியஒளி படும்படி வைத்துப் பயன்படுத்தினால் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். அதேபோல் ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும்.

    குளிக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமிருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது. தலைமுடியைப் பராமரிக்க உணவுப் பழக்கவழக்கங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். உணவில் அதிகம் புரதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், சோயா, தேங்காய்ப்பால், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பப்பாளி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. அதேபோல் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இரவில் இரண்டு பேரீச்சம்பழம், 10 உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன்மூலம் போதிய இரும்புச்சத்து கிடைக்கும். அத்திப்பழம், பீட்ரூட், மாதுளை, சப்போட்டா போன்ற பழங்களிலும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. எள் மிட்டாய், எள்ளுருண்டை சாப்பிடுவதன்மூலமும் போதிய இரும்புச் சத்து கிடைக்கும்.

    வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும். கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துகள் கிடைக்கும். துத்தநாகம், வைட்டமின் ஈ, ஒமேகா 3 சத்துகள் நிறைந்த பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். கேரட், கிர்ணி, மாம்பழம், சீனிக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    முடி கொட்டுதலுக்கு மனஅழுத்தம் காரணமாக இருப்பதால் யோகா சிறந்த தீர்வு தரும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு குறையும். சூடு காரணமாக முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.

    ×