search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Training"

    • விருதுநகரில் 26-ந் தேதி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
    • தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC - CGL Group – B மற்றும் Group – C ) ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 20 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நேரடி வகுப்புகளாக வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள நகலுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு (04562-293613) முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ஆய்வாளர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி நடைபெற உள்ளது
    • 24-ந் தேதி தொடங்குகிறது.

    அரியலூர்:

    மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மெய்நிகர்கற்றல் இணையதளம் https://tamilnaducareerservices.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி. மற்றும் யு.பி.எஸ்.சி. போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிக்கப்பட்டுள்ள நில ஆய்வாளர், வரைவாளர், நில ஆய்வாளர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு 24-ந் தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். எனவே அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது."

    • 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமத்தின் மூலம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 15-ந் தேதியாகும். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 1-ந் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு இன்று (புதன்கிழமை) முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த பயிற்சியின் இறுதியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான இலவச பயிற்சி முகாம் 5 நாட்கள் நடக்கிறது.
    • பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிறு, குறு, நடுத்தர தொழிலில் நிறுவனங்களின் வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் பற்றி 5 நாட்கள் மேலாண்மை மேம்பாட்டு திட்டம் குறித்து சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டியில் இயங்கி கொண்டிருக்கும் நறுமண பூங்கா ( ஸ்பீசிஸ் பார்க்) அலுவலகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருக்கிறது.

    தொழில் முனைவோ ருக்கான சான்றிதழ் (உத்யம்) பெற்றுள்ளவர்கள் மற்றும் ஏற்றுமதி தொழிலில் விருப்பமுடைய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த நிகழ்வில் இலவசமாக பங்கேற்று பயனடையலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்ய விரும்புப வர்கள் புகைப்படம், தொழில் முனைவோருக்கான சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் எண்:11, கோ.புதூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கிக் கொண்டிருக்கும் MSME-DFO மதுரை கிளையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிந்து கொள்ளலாம். முதலில் வரும் 25 பேருக்கே முன்னுரிமை வழங்க ப்படும்.

    இந்த 5 நாட்களில் ஏற்றுமதி, இறக்குமதி வழி முறைகள், ஆவண தேவைகள், ஏற்றுமதி மேம்பாட்டிற்காக கிடைக்கும் பல்வேறு அரசு சலுகைகள் பற்றிய தகவல் மற்றும் அதைப் பெறுவதற்கு தேவையான வழிமுறைகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள், ஏற்றுமதி மேம்பாட்டு அதிகாரி களுடன் ஆலோசனை, பேக்கேஜிங் ரூ லேபிளிங் சிக்கல்கள், சர்வதேச தரத்தின் தயாரிப்புக்களை எவ்வாறு உருவாக்குவது? ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான சட்டஉதவிகள் போன்றவை குறித்து விளக்கமாக பயிற்சி வழங்கப்படும்.

    பயிற்சியில் பங்கேற்ப வர்களுக்கு வங்கிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி சிவகங்கை மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்க ளை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும். பயிற்சியில் கலந்து கொள்ப வர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

    நேரில் வர இயலாதவர்கள் மேற்கண்ட ஆணை விவரங்களை கைபேசி வாட்ஸ் அப் வழியாக உதவி இயக்குநர் MSME-DFO மதுரை, 98420 35441 எணணிற்கு தொடர்பு கொண்டு நிகழ்விற்கு பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • பயிற்சி மையம் மிக சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றது.
    • இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தின் உதவி இயக்குநர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    இந்திய அரசாங்கத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் பயிற்சி மையம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையம் மிக சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றது.

    புதிய அறிவிப்பு

    இந்த நிலையில் 2022-2023 -ம் ஆண்டுக்கான கூடைப்பந்து, தேக்வோண்டா ஆகிய பயிற்சியில் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் (ஆண்கள் மட்டும்) சேர்த்துக்கொள்வதற்கான அறிவிப்பு இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு வருகிற 18-ந்தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு நடைபெறும் நாட்கள் வருகிற 20 மற்றும் 21-ந்தேதி ஆகும்.

    தகுதி

    தனிநபர் விளையாட்டில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் 8 இடங்களை பெற்றவர்கள், மாவட்ட அளவிலான சாம்பி யன்ஷிப் போட்டி–களில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விண்ணப்பிகலாம்.

    அணை விளையாட்டு பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளில் (2020-2021, 2021-2022) நடைபெற்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் விளையாட்டு அணிகளில் தேசிய அளவில் முதல் 4 இடங்களை பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற–வர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விளையாட்டு சான்றிதழ் நகல், பிறந்த தேதி சான்றிதழ் நகல், மருத்துவ சான்றிதழ் அசல், ரேசன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் புகைப்ப டங்கள்-4, சாதி சான்றி தழ் நகல் ஆகிய 7 சான்றிதழ்கள் இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பத்துடன் சான்றி–தழ்களின் நகல்களை மட்டும் இணைத்து சான்றோப்பம் அளிக்க தகுதியுடைய அரசு அதிகாரியின் கையோப்பம் பெற்று அனுப்ப ப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது.

    கல்வி கட்டணம் வழங்கப்படும்

    வயதிற்கேற்ற உயரம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதாவது விண்ணப்பிக்க வயது வரம்பு 1.1.2004-க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 13 வயது 172 செ.மீ, 14 வயது 174 செ.மீ, 15 வயது 181 செ.மீ, 16 வயது 186 செ.மீ. என்ற அளவில் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இந்திய அரசு சார்பில் தங்கும் வசதி, உணவு நாள் ஒன்றுக்கு ரூ.275 வீதம், மருத்துவ காப்பீட்டு வசதி ரூ.1000, விளையாட்டுக்களில் கலந்து கொள்ள பயணப்படி ரூ.3000, விளையாட்டு சீருடை ரூ.5000, கல்வி கட்டணம் ரூ.2000 வீதம் ஆண்டுேதாறும் வழங்கப்படும் என இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தின் உதவி இயக்குநர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

    மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. #NEETExam #CentralGovernment
    புதுடெல்லி:

    மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு கட்டாயம் ஆகும். இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உயர்கல்வி துறையில் நுழைவு தேர்வுகளை நடத்துவதற்கு தேசிய போட்டி தேர்வு முகமை என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,697 மையங்கள் இதற்காக செயல்பட்டு வருகின்றன.



    இந்த மையங்களை நீட் பயிற்சி மையங்களாக மாற்றி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த பயிற்சி மையங்கள் செப்டம்பர் 8-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான மொபைல் ஆப்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் செப்டம்பர் 1-ந் தேதியில் (நாளை) இருந்து தொடங்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு மே மாதம் முதல் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சிகள் தொடங்க உள்ளன.   #NEETExam #CentralGovernment
    ×