search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courses"

    • அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசை, நாட்டியம், நுண்கலை துறைகளில் இளங்கலை படிப்புகள் நடத்தப்படுகிறது.
    • இந்த ஆண்டு முதல் முதுகலை பட்டப்படிப்பை தொடங்க புதுவை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசை, நாட்டியம், நுண்கலை துறைகளில் இளங்கலை படிப்புகள் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு முதல் முதுகலை பட்டப்படிப்பை தொடங்க புதுவை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. முதுகலை படிப்பில் சேர பல்கலைக்கூட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 12-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கூட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பாரதியார் பல்லைக்கூடத்தில் காலியாக உள்ள இளங்கலை படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை நடக்கிறது.
    • பி.எப்.ஏ நுண்கலை படிப்பில் கூடுதலாக 10 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் பாரதியார் பல்லைக்கூடத்தில் காலியாக உள்ள இளங்கலை படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை நடக்கிறது.

    பிஎப்ஏ நுண்கலை படிப்பில் கூடுதலாக 10 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இளங்கலை பி.பி.ஏ, ஆர்ட்ஸ், இசை, நடன படிப்புகளில் சேர விருப்பம் உள்ள பிளஸ்-2 முடித்த மாணவர்கள் வரும் 4-ந் தேதிக்குள் பல்கலைக்கூடத்தில் நேரில் அணுகி விண்ணப்பித்து சேரலாம்.

    மேலும் விபரங்களுக்கு 0413-2600935 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கூட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • விருதுநகரில் 26-ந் தேதி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
    • தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC - CGL Group – B மற்றும் Group – C ) ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 20 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நேரடி வகுப்புகளாக வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள நகலுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு (04562-293613) முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு 2 நாட்கள் நடைபெற உள்ளது.
    • தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கட்டணம் அன்றே செலுத்த வேண்டும்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை முதலாமாண்டு பாடப்பரிவுகளுக்கு அரசு கலைக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பாடப்பரிவிலும் கூடுதலாக 20 சதவீத இடங்களை அதிகரித்து, மாணவர்கள் சேர்க்கை நடத்த அரசு அனுமதித்துள்ளது. அதனடிப்படையிலும் பல்கலைக் கழக அனுமதி பெற்று கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் ஏற்கனவே நிரப்பப்படாத பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுகான காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு (இணைய வழியில்) விண்ணப்பித்தவர்களுக்கு இனச்சுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் 26 -ந்தேதி மற்றும் 27- ந்தேதி ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.

    கலந்தாய்வு தேதி மற்றும் விபரம்: 26.09.2022- பாடப்பிரிவுகள் பி.எஸ்.சி. கணிதம் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி, புள்ளியியல், இயற்பியல், பொது வேதியியல், தொழில் வேதியியல், சுழற்சி & 2 கணினி அறிவியல் சுழற்சி-1 & 2, பி.சி.ஏ. கணினி பயன்பாட்டியல், தாவரவியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி. விலங்கியல் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி. 27-9-2022 கலந்தாய்வு: B.A.தமிழ், B.A,ஆங்கிலம் கழற்சி-1 & ×2} பி.ஏ. பொருளியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி பி.காம் , சுழற்சி-1 & -2 மற்றும் பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல். இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்கள் அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ். சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ்களின் நகல் 5 பிரதிகள் நிழற்படம் 5 பிரதிகள் மற்றும் 2 எடுத்து. வரவேண்டும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கட்டணம் அன்றே செலுத்த வேண்டும். இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இனச்சுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் .மேலும் காலை 10.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கல்லூரி முதல்வர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    ×