search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female employee"

    தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை அப்பாசாமி கார்டன் தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி லட்சுமி (58).

    இவர் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கணவர் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 15 நாட்களாக வேலைக்கு வராத லட்சுமி இன்று ஆஸ்பத்திரிக்கு வந்தார். உடன் பணிபுரிவர்களிடம் “எனக்கு 2 மகன்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை. அவர்கள் என்னை கவனிப்பதே இல்லை” என்று கூறி வேதனைப்பட்டார்.

    இந்த நிலையில் பகல் 11 மணியளவில் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் லட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு நின்றவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

    பலத்த காயம் அடைந்த லட்சுமி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சேதராப்பட்டு:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ் வெள்ளைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வைரசாமி. இவரது மகள் நீலவேணி (வயது 19). இவர், புதுவை நெட்டப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப ஊழியராக கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்தார்.

    அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் பணிக்கு சென்று வந்தார். இன்று காலை முதல் ஷிப்டு பணிக்கு காலை 5.30 மணிக்கு சென்றார். அங்குள்ள கேண்டீனில் காலை சிற்றுண்டி சாப்பிட சென்ற நீலவேணி திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நீலவேணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நீலவேணியின் மர்ம மரணம் குறித்து அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கோவையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மதுக்கடை வனவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட கரடி மடை பிரிவில் கண்ணன் என்பவர் வனவராக பணியாற்றி வந்தார்.

    இவர் வனச்சரக அலுவல கத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஊழியர், மாவட்ட வன அதிகாரி வெங்கடேசனிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த குழுவிசாரணைக்கு கண்ணன் ஒத்துழைக்கவில்லை. மேலும் குழுவில் இடம்பெற்ற பெண் அதிகாரி ஒருவர் மீது கண்ணன் புகார் கூறினார். இதையடுத்து அந்த அதிகாரி கூடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் விசாரணை குழுவும் கலைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் புகாருக்குள்ளான வனவர் கண்ணனை வேலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யும்படி முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா மாவட்ட வன அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கண்ணனை இடமாற்றம் செய்து வனஅலுவலர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, கண்ணன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த சேலம் சரகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட புதிய விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    ரூ.300 லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆத்துக்கடை தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது40). இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இரு பெண் குழந்தைகள் பிறந்தால் அரசின் நிதி உதவி கிடைக்கும் திட்டத்துக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உமாசங்கர் விண்ணப்பித்துள்ளார்.

    கால தாமதம் ஆனதால், அரசு விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரி (51) என்பவரை அணுகி அரசின் நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுள்ளார். அதற்கு ராஜேஸ்வரி விண்ணப்பத்தினை விருதுநகரில் உள்ள மாவட்ட அதிகாரிக்கு பரிந்துரைக்க ரூ.300 லஞ்சம் கேட்டார்.

    அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத உமாசங்கர், விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் முறையிட்டார். அவர்களின் ஆலோசனையின் பேரில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த ராஜேஸ்வரியிடம், உமாசங்கர் லஞ்சப் பணம் ரூ.300 கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    வழக்கை நீதிபதி சம்பத்குமார் விசாரித்து, ராஜேஸ்வரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 
    ×