search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forest guard"

    • தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது.
    • 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அந்த மயிலை கள்ளக்குறிச்சி வனத்துறை வனவர் பாலு, மற்றும் வனக்காவலர் ஜெயபால் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    • காட்டுயானையை விரட்டும் பணியில் வனக்காவலர் குமரன், கண்காணிப்பாளர் சுனில், உள்ளூர்வாசி சனல் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
    • போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் திருமேடு வனச்சரகத்தில் வனக்காவலராக பணிபுரிந்தவர் இரிம்பன் குமரன் (வயது55). சம்பவத்தன்று திருச்சூர் மாவட்டம் வாழச்சல் வனப்பிரிவுக்கு உட்பட்ட கரடிப்பாரா அருகே உள்ள ஊலச்சேரி பகுதியில் புகுந்த காட்டுயானையை விரட்டும் பணியில் வனக்காவலர் குமரன், கண்காணிப்பாளர் சுனில், உள்ளூர்வாசி சனல் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அப்போது காட்டுயானை தாக்கியதில் அங்குள்ள குழிக்குள் குமரன் மற்றும் சுனில் ஆகியோர் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குமரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையில் வனக்காப்பாளர்கள் முழுமையாக களப்பணியாற்றுபவர்கள்.
    • வனக்காப்பாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி அடிப்படையில் விடுப்பு, மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை செய்துதர வேண்டும்.

    திருப்பூர் :

    வனத்துறையில் வனக்காப்பாளர்கள் முழுமையாக களப்பணியாற்றுபவர்கள். குறிப்பிட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் வந்தால் அவற்றை கண்காணிப்பது, யானை, புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளிடமிருந்து மீட்புப்பணி, மரம் உள்ளிட்டவை விழுந்தால் அவற்றை சீரமைப்பது உட்பட அனைத்து பணிகளையும் வனக்காப்பாளர்கள் தான் செய்வார்கள். 24 மணிநேர களப்பணியாளர்கள். வனவர்கள் 4 முதல் 5 வனக்காப்பாளர்களை கண்காணிப்பதுதான் பணி. தமிழகம் முழுவதும் 8 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றிய வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கான ஊதியமும் கிடைக்கவில்லை.

    இது தொடர்பாக வனத்துறையில் பணியாற்றும் திருப்பூரை சேர்ந்த சிலர் கூறும்போது, 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி வரை நேரடி நியமன வனக்காப்பாளர்களாக பணியில் சேர்ந்த வனக்காப்பாளர்களின் எண்ணிக்கை, சுமார் 300 ஆகும். தமிழ்நாடு வனச்சார்நிலை பணி விதிகளின்படி, தகுதிகாண் பருவம் முடித்து பணி வரன்முறைசெய்து 6 மாத வனக்காப்பாளர் பயிற்சி நிறைவு செய்து, குற்றத்தாள்கள் ஏதும் இல்லாமல் 8 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால், வனவராக பதவி உயர்வு பெறலாம் என்பது விதி.

    அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஆக. 15-ம் தேதியோடு 220 பேரும், 2020-ம் ஆண்டு ஆக. 15-ம் தேதியோடு 63 பேர், கடந்த ஆண்டு ஆக. 15-ம் தேதியோடு 10 பேர் முழுத்தகுதி பெற்றுள்ளனர். இதில் அதிகப்படியான பணியாளர்கள் பணியில் சேரும்போது, சுமார் 35 வயது மேற்பட்டவராகவும், 40 வயதுக்கு உட்பட்டராகவும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவு தேர்வு பெற்றதின் அடிப்படையில், பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் 47 வயது முதல் 52 வயதை எட்டி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது.

    தமிழக வனத்துறையில் வனக்காவலர், வனக்காப்பாளர், வனவர் மற்றும் வனச்சரக அலுவலர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் நேரடி நியமனம் மூலமாக பணியாளர்களை தேர்வு செய்வதாலும், வனவர் பணி இடமானது குறைவாக உள்ளது. வனவர் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் வனக்காப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், வனக்காப்பாளர்கள் 12 ஆண்டுகள் பணி நிறைவு செய்தும், ஒருமுறை கூட பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேபோல் இதில் பலர் 50 வயதை எட்டியதால், வனவர் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் 300 வனக்காப்பாளர்களின் நலன் கருதி, நேரடி நியமன வனவர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். ஒருமுறை விதிதளர்வின் படி, அனைவரையும் வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல் போலீசாருக்கு வழங்கியதை போல், வனக்காப்பாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி அடிப்படையில் விடுப்பு, மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும் என்றனர்.

    கோவையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மதுக்கடை வனவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட கரடி மடை பிரிவில் கண்ணன் என்பவர் வனவராக பணியாற்றி வந்தார்.

    இவர் வனச்சரக அலுவல கத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஊழியர், மாவட்ட வன அதிகாரி வெங்கடேசனிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த குழுவிசாரணைக்கு கண்ணன் ஒத்துழைக்கவில்லை. மேலும் குழுவில் இடம்பெற்ற பெண் அதிகாரி ஒருவர் மீது கண்ணன் புகார் கூறினார். இதையடுத்து அந்த அதிகாரி கூடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் விசாரணை குழுவும் கலைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் புகாருக்குள்ளான வனவர் கண்ணனை வேலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யும்படி முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா மாவட்ட வன அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கண்ணனை இடமாற்றம் செய்து வனஅலுவலர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, கண்ணன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த சேலம் சரகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட புதிய விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    ×