என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை- மதுக்கரை வனவர் அதிரடி இடமாற்றம்
Byமாலை மலர்1 Sep 2018 10:26 AM GMT (Updated: 1 Sep 2018 10:26 AM GMT)
கோவையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மதுக்கடை வனவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
கோவை:
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட கரடி மடை பிரிவில் கண்ணன் என்பவர் வனவராக பணியாற்றி வந்தார்.
இவர் வனச்சரக அலுவல கத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஊழியர், மாவட்ட வன அதிகாரி வெங்கடேசனிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த குழுவிசாரணைக்கு கண்ணன் ஒத்துழைக்கவில்லை. மேலும் குழுவில் இடம்பெற்ற பெண் அதிகாரி ஒருவர் மீது கண்ணன் புகார் கூறினார். இதையடுத்து அந்த அதிகாரி கூடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் விசாரணை குழுவும் கலைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புகாருக்குள்ளான வனவர் கண்ணனை வேலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யும்படி முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா மாவட்ட வன அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கண்ணனை இடமாற்றம் செய்து வனஅலுவலர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, கண்ணன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த சேலம் சரகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட புதிய விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட கரடி மடை பிரிவில் கண்ணன் என்பவர் வனவராக பணியாற்றி வந்தார்.
இவர் வனச்சரக அலுவல கத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஊழியர், மாவட்ட வன அதிகாரி வெங்கடேசனிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த குழுவிசாரணைக்கு கண்ணன் ஒத்துழைக்கவில்லை. மேலும் குழுவில் இடம்பெற்ற பெண் அதிகாரி ஒருவர் மீது கண்ணன் புகார் கூறினார். இதையடுத்து அந்த அதிகாரி கூடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் விசாரணை குழுவும் கலைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புகாருக்குள்ளான வனவர் கண்ணனை வேலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யும்படி முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா மாவட்ட வன அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கண்ணனை இடமாற்றம் செய்து வனஅலுவலர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, கண்ணன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த சேலம் சரகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட புதிய விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X