search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer dies"

    • பேத்திக்கு நீச்சல் கற்றுகொடுத்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 60). விவசாயி.

    இவர் வழக்கம் போல் தனது மாடுகளை விவசாய நிலம் அருகில் மேய்ப்பது வழக்கம்.

    இந்நிலையில் நீச்சல் கற்று கொடுக்க அருகே உள்ள கிணற்றுக்கு பூங்காவனம் பேத்தியுடன் சென்றார். தாத்தாவும் , பேத்தியும் கிணற்றின் படிக்கட்டு வழியாக இறங்கி கொண்டு இருந்தனர். அப்போது நிலை தடுமாறி பூங்காவனத்தின் பேத்தி விழுந்தார். பேத்தியை காப்பாற்றுவதற்காக பூங்காவனம் கிணற்றில் குதித்தார்.

    உடனே அருகில் இருந்த உறவினர் ஒருவர் பூங்காவனத்தின் பேத்தியை கிணற்றில் இருந்து காப்பாற்றினார்.

    நீண்ட நேரம் ஆகியும் பூங்காவனம் கிணற்றில் இருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர் கூச்சலிட்டு அக்கம் பக்கம் உள்ள கிராம மக்களை வர வழைத்தார். அவர்கள் கிணற்றில் விதித்து பூங்காவனத்தை தேடினர். பூங்காவனம் கிடைக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி வெகு நேரம் தேடியும் பூங்காவனம் கிடைக்கவில்லை.

    பின்னர் ராட்சத மோட்டார் பம்ப் மூலமாக கிணற்று நீரை இறைத்து 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பூங்காவனத்தின் உடலை மீட்டனர்.

    இறந்து போன பூங்காவனத்திற்கு தனக்கோட்டி என்ற மனைவியும் ஜெயபால் என்ற மகனும் மகேஸ்வரி தேவி என்ற 2 மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ் கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேத்திக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று கிணற்றில் குதித்து பூங்காவனம் உயிரிழந்த சம்பவம் கீழ் வில்லிவலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விபத்தில் விவசாயி பலியானார்
    • வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை அருகே உள்ள முதுகுளம் பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது 52), விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை கந்தர்வகோட்டையில் வாங்கி கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நமச்சிவாயம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    படு காயம் அடைந்த ஆதிசங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மேமாளூர் கிராமத்தை சேர்ந்தவர் சி உத்திரியநாதன்(வயது40). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லவாடி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே செங்கணாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஆதிசங்கர்(34) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உத்திரியநாதனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சை க்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    படு காயம் அடைந்த ஆதிசங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.
    • இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மண்டக மேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் விவசாயி. இவர் கடந்த 23-ந் தேதி கடலூர், சித்தூர் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு  பலத்த படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரை மீட்டு முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் இன்று காலை இறந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. மகன் முனுசாமி (வயது 45). விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையையும் எடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நோயின் தீவிர தாக்கத்தால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற விவசாயி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சமுதாயம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (48) விவசாயி.

    இவர் சூளமேனி அருகே செங்கரையில் உள்ள காட்டு செல்லி அம்மன் கோவிலுக்கு செல்ல ஊத்துக்கோட்டை வந்தார். இங்கிருந்து புறப்பட்ட ஆட்டோவில் ஏறினார்.

    சூளமேனி கிராம எல்லையில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவிலிருந்து தவறி கீழே விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து ஆந்திராவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (69). கூலி தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் கூலி வேலை செய்வதற்காக சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மோதியது.

    இதில் படுகாயம்அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெரியபாளையம் அருகே பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள செங்காத்தாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தனன் (வயது 40) விவசாயி .

    இவர் தனது நிலத்தில் போர் போடுவதற்காக கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆறாவதுமையில் என்ற இடத்தில் உள்ள மேஸ்திரியிடம் பணம் கொடுத்துவிட்டு நேற்று காலை ஆரணி வழியாக பெரியபாளையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    ஆரணியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். கோவர்தனன் அப்பெண் மீது மோட்டார் சைக்கிளை மோதி விட்டு நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கோவர்தனன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவர்தனன் பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த பெண் ஆரணி இருளர் காலனியை சேர்ந்த ரமிஜா (வயது 40) என்று தெரியவந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அலி மற்றும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே விளமல் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் செல்வராஜன் (வயது 65). விவசாயி.

    இவர் நேற்று திருவாரூர் பஸ் நிலையம் கடைவீதிக்கு சென்று விட்டு பழைய தஞ்சை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வராஜன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து பற்றி திருவாரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக அலிவலம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கருணாகரனை போலீசார் கைது செய்தனர்.
    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே ஆயுத பூஜை கொண்டாடியபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 42).

    இவர் நேற்று வீட்டில் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள மோட்டார் அறையில் பூஜை செய்ய சென்றார். அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் மோட்டாருக்கு சந்தன பொட்டு வைத்துக் கொண்டிருந்த போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த முருகேசனுக்கு பூங்கொடி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
    பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது47). விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே தென்காசியில் இருந்து நெல்லையை நோக்கி பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த சோபன் பாபு (25) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேராக மோதியது.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். சோபன்பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே வேன் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் ஆசிரியர் படுகாயமடைந்தார்.
    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பில்லு வெட்டு விடுதி காலனி தெருவைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 48). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 6 மாதமே ஆன ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு மதியழகன் வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கறம்பகுடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார்.

    பின்னர் பொருட்கள் வாங்கி கொண்டு பில்லு வெட்டு விடுதிக்கு திரும்பினார். கறம்பகுடி மூவர் ரோடு அருகே மதியழகன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் சின்ன அம்மன்குடி பகுதியை சேர்ந்த வின்சென்ட்(52) என்பவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இவர் பின்னையூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கறம்பக்குடியை நோக்கி வேன் ஒன்று மரக்கட்டைகளை ஏற்றி கொண்டு மூவர் ரோடு அருகே வந்து கொண்டிருந்தது. இதில் வேன் நிலை தடுமாறி எதிரே வந்து கொண்டிருந்த மதியழகன் மற்றும் வின்சென்ட் ஆகியோர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே திருவோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மதியழகன் பரிதாபமாக இறந்தார்.

    வின்சென்ட் தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோதிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகன மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மேக்கூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 75). விவசாயி.

    இவர் இன்று தனது மொபட்டுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார். விஜயமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்குக்கு செல்ல அவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பழனிச்சாமி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பழனிசாமி பரிதாமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பழனிசாமிக்கு 3 மகள்கள் உள்ளனர்.
    ×