search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் அருகே லாரி மோதி விவசாயி பலி
    X

    திருவாரூர் அருகே லாரி மோதி விவசாயி பலி

    திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே விளமல் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் செல்வராஜன் (வயது 65). விவசாயி.

    இவர் நேற்று திருவாரூர் பஸ் நிலையம் கடைவீதிக்கு சென்று விட்டு பழைய தஞ்சை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வராஜன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து பற்றி திருவாரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக அலிவலம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கருணாகரனை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×