search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி சாவு"

    • தருமபுரியில் கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.
    • குடிப்பழக்கத்தால் விபரீதம்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேந்தவர் நரசிம்மன்(55) விவசாயி. இதே பகுதியில் இருந்து கொண்டு 15 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று 3 மதியம் 2 மணியளிவில் மது அருந்து விட்டு நடந்து வந்துள்ளார்.

    அப்போது நிலைமடுமாறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார். இதனை கண்ட அவரது மனைவி ராணி உறவினர்களுக்கு தகவல் அளித்தார். அவர்கள் தீயணைப்புத்து றையினருக்கு தகவல் தெரி வித்தனர். அவர்கள் விரைந்து கிணற்றில் தேடி இறந்த நிலையில் இருந்த நரசிம்மனை மீட்டனர். இது குறித்து ராணி அளித்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தருமபுரி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலியானர்.
    • துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பும்போது விபத்து

    தருமபுரி மாவட்டம் சோகத்தூர் அருகேயுள்ள கீழ்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(36) விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி(32) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் வாசுதேவன் பச்சினம்பட்டியில் உள்ள தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு தனது மனைவி ராஜேஸ்வரியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மனைவியே அங்கு இருக்க சொல்லி விட்டு மீண்டும் தனது ஊரான கீழ்நாயக்கன்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தருமபுரி- பாப்பாரப்பட்டி சாலையில் உள்ள தனியார் பேட்ரொல் பங்க் அருகில் வந்தபோது பாப்பாரப்பட்டியில் இருந்து வந்த அரசு பஸ், வாசுதேவன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் துக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த வாசுதேவனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு வாசுதேவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வாசுதேவன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தருமபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

      ராசிபுரம்:

      ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 72). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலையில் அவரது மொபட்டில் நாமகிரிப்பேட்டையில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

      இந்த நிலையில் அரியாக்கவுண்டம்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த வாலிபர் சண்முகம் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தெய்வசிகாமணி மீது மோதியது. இதில் இரண்டு பேரும் காயம் அடைந்தனர். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து தெய்வசிகாமணி மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

      அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வசிகாமணி பரிதாபமாக இறந்தார். இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வாலிபர் சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சண்முகம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

      • மது அருந்திய கோதண்ட மூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
      • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ஈரோடு:

      ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முடுக்கன் துறை சந்தை பகுதியில் சேர்ந்தவர் கோதண்ட மூர்த்தி (வயது 48). இவரது மனைவி வனிதா (40). இவ ர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வருகின்றனர்.

      இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ள னர். கோதண்ட மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

      இந்நிலையில் சம்பவ த்தன்று மது அருந்திய கோதண்ட மூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை சக்தியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

      பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்திய அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோத ண்டமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

      பின்னர் இது குறித்து அவரது மனைவி வனிதா பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • பாம்பு ஒன்று கனகராஜை கடித்து விட்டது.
      • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

      ஈரோடு:

      ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவா னிசாகர் ரோடு மாமரத்து தோட்டம் அய்யன் சாலை பகுதியைச் சே ர்ந்தவர் கனகராஜ் (வயது 53). இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கனகராஜ் அவருக்கு சொந்தமான நிலத்தில் சம்பங்கி, வாழை பயிரிட்டுள்ளார்.

      இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மாலை அவரது சம்பங்கி தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று ள்ளார். அப்போது வர ப்பில் நடந்து சென்ற போது பாம்பு ஒன்று கனகராஜை கடித்து விட்டது. இதை யடுத்து அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

      அங்கு முதலுதவிக்குப் பின்னர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் கனகராஜ் குடும்பத்தினரின் விருப்ப த்தின் பேரில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும், கோவையில் உள்ள தனியார் மருத்து வமனையில் கனகராஜ் சிகி ச்சை பெற்று வந்துள்ளார்.

      இந்த நிலையில் அவரது உடலில் விஷத்தின் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் நேற்று அதிகாலை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனகராஜ் சேர்க்கப்பட்டார்.

      அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து சத்தியமங்கலம் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      • கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது விபரீதம்
      • போலீசார் விசாரணை

      போளூர்:

      போளூரை அடுத்த சனிக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 70). விவசாயி. இவருக்கு போளூர் சி.சி. ரோட்டில் 2 கடைகள் உள்ளன. இவர் அவ்வப்போது எலக்ட் ரிக்கல் வேலையும் செய்வார். நேற்று காலையில் போளூர் வந்த அவர் தனக்கு சொந்தமான கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

      அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இறந்து விட்டார். இது குறித்து அவருடைய மகன் கார்த்திகேயன் புகார் அளித்தார். அதன்பேரில் போளூர் போலீசார் விசாரணை

      வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கூட்டை கலைக்க முயன்றபோது பரிதாபம்
      • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

      செய்யாறு:

      செய்யாறு அடுத்த மோரணம் ஏ காலனியை சேர்ந்தவர் பாலு (வயது 70).விவசாயி. இவரது மனைவி முருகம்மாள் (64). இவர்களுக்கு வாணி என்ற மகளும், சரவணன், நாராயணன் என்ற மகன்களும் உள்ளனர்.

      இவர்களது வீட்டு மாடியில் குளவி கூடு கட்டி இருந்தது. அதனை அழிப்பதற்காக கடந்த 15-ந் தேதி பாலு உள்பட குடும்பத்தினர் வீட்டு மாடிக்கு சென்று குளவி கூட்டை கலைக்க முயன்றனர். அப்போது குளவி அனைவரையும் கொட்டி உள்ளது. இதில் பாலு படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த பாலுவை மீட்டு குடும்பத்தினர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

      மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வரும் வழியில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் பாலுவை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

      இதுகுறித்து பாலுவின் மகன் சரவணன் மோரணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணவன், மனைவி மீது மோதியது.
      • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      கள்ளக்குறிச்சி:

      உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநாவலூர் செஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 41). விவசாயி. நேற்று இரவு மழை பெய்த போது இவரும், இவரது மனைவி ஜெயாவும் குடை பிடித்தவாறு நடந்து சென்றனர். அப்போது கெடிலம் கூட்ரோடு அருகே சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணவன், மனைவி மீது மோதியது. இதில் வேலாயுதம் பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

      அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த அவர் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
      • சிகிச்சை பலனின்றி இன்றுகாலை சுப்பிரமணி உயிரிழந்தார்.

      தருமபுரி,

      தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்துள்ள ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

      இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

      அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை சுப்பிரமணி உயிரிழந்தார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • முனியப்பன் நேற்று தனது தோட்டத்தில் உள்ள குடியசை கொட்டாகையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
      • சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

      தருமபுரி,

      தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது63). விவசாயியான இவருக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியடைந்து வந்தார். இந்த நிலையில் முனியப்பன் மனைவியை மாடு முட்டியதில் காயம் அடைந்து எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டில் இருந்து வந்தார்.

      இதனால் மனவேதனையில் இருந்த முனியப்பன் நேற்று தனது தோட்டத்தில் உள்ள குடியசை கொட்டாகையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

      இந்த சம்பவம் குறித்து முனியப்பன் மகன் குமார் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
      • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்

      செய்யாறு:

      செய்யாறு அடுத்த பண்ணையெச்சூர் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

      பிரகாஷிற்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

      கடந்த 17-ந் தேதி பிரகாசுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விவசாயத்திற்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

      மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பிரகாஷ் இறந்தார்.

      • விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சூளகிரிக்கு சென்றார்.
      • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

      ராயக்கோட்டை, 

      கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே குட்டுகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது39).

      விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சூளகிரிக்கு சென்றார்.

      அப்போது அவர் பாலனம்பட்டி அருகே ராயக்கோட்டை-சூளகிரி சாலையில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

      இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாய மடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராயக் கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×