என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி பலியான கிணறு.
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
- பேத்திக்கு நீச்சல் கற்றுகொடுத்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 60). விவசாயி.
இவர் வழக்கம் போல் தனது மாடுகளை விவசாய நிலம் அருகில் மேய்ப்பது வழக்கம்.
இந்நிலையில் நீச்சல் கற்று கொடுக்க அருகே உள்ள கிணற்றுக்கு பூங்காவனம் பேத்தியுடன் சென்றார். தாத்தாவும் , பேத்தியும் கிணற்றின் படிக்கட்டு வழியாக இறங்கி கொண்டு இருந்தனர். அப்போது நிலை தடுமாறி பூங்காவனத்தின் பேத்தி விழுந்தார். பேத்தியை காப்பாற்றுவதற்காக பூங்காவனம் கிணற்றில் குதித்தார்.
உடனே அருகில் இருந்த உறவினர் ஒருவர் பூங்காவனத்தின் பேத்தியை கிணற்றில் இருந்து காப்பாற்றினார்.
நீண்ட நேரம் ஆகியும் பூங்காவனம் கிணற்றில் இருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர் கூச்சலிட்டு அக்கம் பக்கம் உள்ள கிராம மக்களை வர வழைத்தார். அவர்கள் கிணற்றில் விதித்து பூங்காவனத்தை தேடினர். பூங்காவனம் கிடைக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி வெகு நேரம் தேடியும் பூங்காவனம் கிடைக்கவில்லை.
பின்னர் ராட்சத மோட்டார் பம்ப் மூலமாக கிணற்று நீரை இறைத்து 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பூங்காவனத்தின் உடலை மீட்டனர்.
இறந்து போன பூங்காவனத்திற்கு தனக்கோட்டி என்ற மனைவியும் ஜெயபால் என்ற மகனும் மகேஸ்வரி தேவி என்ற 2 மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ் கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேத்திக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று கிணற்றில் குதித்து பூங்காவனம் உயிரிழந்த சம்பவம் கீழ் வில்லிவலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






