search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fainted"

    லாலாப்பேட்டை சுடுகாட்டில் மயங்கி விழுந்த முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    லாலாப்பேட்டை:

    திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாலாப்பேட்டையில் சுடுகாடு உள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இங்கு எதற்காக வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி திடீரென பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை இழந்த இவர் அரசு விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் சுபிக்ஷா (வயது 14). இவர் திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சுபிக்ஷாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது சுபிக்ஷா திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் உடனே ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் மாணவியை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாலுகா போலீசார் மாணவியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×