search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "extortion"

    • வியாபாரியிடம் பணப்பையை ஆட்டோ டிரைவர் பறித்துச்சென்றார்.
    • போலீசார் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மேலூர், கருத்தபிள்ளையம் பட்டியைச் சேர்ந்த அயூப்கான் மகன் பிரேம்நசீர் (வயது 27). இவர் அந்த பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார்.இவர் வெளியூர் செல்வதற்காக பஸ் மூலம் நேற்று அதிகாலை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தார். முதல் பிளாட்பாரத்தில் உள்ள மொபைல் கடை அருகே பணப்பையை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது பணப்பையை காணவில்லை. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் விசாரணை நடத்தினார்.

    அப்போது பிரேம் நசீரின் பணப்பையை, ஆட்டோ டிரைவர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. போலீசார் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பணப்பையை பறித்து சென்றது செல்லூர், மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த ராமபாண்டி (37) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் ராமபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

    • சேலம் சிவதாபுரம் பனங்காடு சித்தர்கோவில் மெயின் ரோடு பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • 4 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சிவதாபுரம் பனங்காடு சித்தர்கோவில் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் தீனதயாளன் (வயது 28). இவர் செவ்வாய்பேட்டை பங்களா தெருவில் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கந்தம்பட்டி அருகே உள்ள ரெயில்வே தரை பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தீனதயாளனை வழிமறித்து தாக்கி ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.4800 பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தீனதயாளன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடுகிறார்கள்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோழிகால்நத்தம் பகுதியில் வாலிபரை தாக்கி செல்போன் -பணம் பறித்து சென்றனர்.
    • 2 வாலிபர்கள் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலால் மண்டையில் தாக்கினர்.

    கொண்டலாம்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோழிகால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சீனிவாசன் (வயது 27). நேற்று மாலை சேலத்திற்கு வந்த இவர் புதியதாக செல்போன் வாங்கி கொண்டு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலால் மண்டையில் தாக்கி அவரிடம் இருந்து புதிய செல்போன் மற்றும் 2500 ரூபாய் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.படுகாயமடைந்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×