என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாலிபரிடம் நகை-பணம் பறிப்பு
Byமாலை மலர்27 July 2022 9:32 AM GMT
- சேலம் சிவதாபுரம் பனங்காடு சித்தர்கோவில் மெயின் ரோடு பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
- 4 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
கொண்டலாம்பட்டி:
சேலம் சிவதாபுரம் பனங்காடு சித்தர்கோவில் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் தீனதயாளன் (வயது 28). இவர் செவ்வாய்பேட்டை பங்களா தெருவில் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கந்தம்பட்டி அருகே உள்ள ரெயில்வே தரை பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தீனதயாளனை வழிமறித்து தாக்கி ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.4800 பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தீனதயாளன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X