search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரியிடம் பணம் பறிப்பு
    X

     பிரேம்நசீர்

    வியாபாரியிடம் பணம் பறிப்பு

    • வியாபாரியிடம் பணப்பையை ஆட்டோ டிரைவர் பறித்துச்சென்றார்.
    • போலீசார் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மேலூர், கருத்தபிள்ளையம் பட்டியைச் சேர்ந்த அயூப்கான் மகன் பிரேம்நசீர் (வயது 27). இவர் அந்த பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார்.இவர் வெளியூர் செல்வதற்காக பஸ் மூலம் நேற்று அதிகாலை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தார். முதல் பிளாட்பாரத்தில் உள்ள மொபைல் கடை அருகே பணப்பையை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது பணப்பையை காணவில்லை. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் விசாரணை நடத்தினார்.

    அப்போது பிரேம் நசீரின் பணப்பையை, ஆட்டோ டிரைவர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. போலீசார் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பணப்பையை பறித்து சென்றது செல்லூர், மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த ராமபாண்டி (37) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் ராமபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×