search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை தாக்கி செல்போன் -பணம் பறிப்பு
    X

    வாலிபரை தாக்கி செல்போன் -பணம் பறிப்பு

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோழிகால்நத்தம் பகுதியில் வாலிபரை தாக்கி செல்போன் -பணம் பறித்து சென்றனர்.
    • 2 வாலிபர்கள் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலால் மண்டையில் தாக்கினர்.

    கொண்டலாம்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோழிகால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சீனிவாசன் (வயது 27). நேற்று மாலை சேலத்திற்கு வந்த இவர் புதியதாக செல்போன் வாங்கி கொண்டு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலால் மண்டையில் தாக்கி அவரிடம் இருந்து புதிய செல்போன் மற்றும் 2500 ரூபாய் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.படுகாயமடைந்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×