search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darshan Ticket"

    • திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • முன்பதிவு செய்த நாளில் ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    எனவே பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.
    • டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வந்தனர்.

    இதனால் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தினமும் 25 ஆயிரம் பேரும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் அலிப்பிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 66,946 பேர் தரிசனம் செய்தனர். 26,990 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
    • இன்று மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடுத்த மாதம் (நவம்பர்) திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகிறது.

    எனவே பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நவம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடுகிறது.
    • டிசம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணியளவில் முன்பதிவு செய்யலாம்.

    திருமலை

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைன் ஒதுக்கீட்டின்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடுகிறது.

    டிசம்பர் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணியளவில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் இருப்புக்கு ஏற்ப முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

    டிசம்பர் மாதத்துக்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மின்னணு டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கிடைக்கும். முன்பதிவு (திங்கட்கிழமை) காலை 10 மணி வரை நடைபெறும்.

    பக்தர்கள் இந்தத் தகவலை கவனத்தில் கொண்டு, அதன்படி தரிசன டோக்கன்கள் மற்றும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்ஜித சேவை, கல்யாணம் உற்சவம் ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.
    • அக்டோபர் மாதத்திற்கான அங்க பிரதட்சண டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.

    தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரும் நவம்பர் மாதத்திற்கான 6 லட்சம் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. இதேபோல் ஆர்ஜித சேவை, கல்யாணம் உற்சவம், சகஸ்ஹர தீப அலங்கார சேவைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    அக்டோபர் மாதத்திற்கான அங்க பிரதட்சண டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுவதால் 1 முதல் 5-ந் தேதி வரை அங்க பிரதட்சன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 73,186 பேர் தரிசனம் செய்தனர். 27,365 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
    • அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கப்பட மாட்டாது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுக்கான எலக்ட்ரானிக் குலுக்கல் முறை நாளை நடக்கிறது.

    அக்டோபர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஆனால், பிரம்மோற்சவம் நடைபெறும் தேதிகளில், அதாவது அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கப்பட மாட்டாது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு, அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை காலை 10 மணியளவில் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
    • நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.

    மேலும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மாலை 4 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்கள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

    இதனால் இந்த ஆண்டு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    எனவே பிரமோற்சவ விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் உட்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது. எனவே தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழியில் 26 நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் நாளை காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 72,851 பேர் தரிசனம் செய்தனர். 34,404 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருப்பதியில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது.
    • திருப்பதியில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. இதனால் வருகிற 7, 8, 9, 10-ந் தேதிக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூ.300 டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் ரூ.300 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    மேலும் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாமி தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.
    • தினமும் 750 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்யும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 மணிக்கு பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுவர். சுப்ரபாத சேவையின்போது அவர்கள் ஏழுமலையானை தரிசித்து விட்டு வெளியே வருவார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கோவில் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்க பிரதட்சணமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதற்கும் ஆன்லைன் முறையை தேவஸ்தானம் கையாண்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டது.

    வரும் ஆகஸ்ட் மாதம் அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை இணைத்து டோக்கனை பெற்றனர். தினமும் 750 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்யும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடப்பதால் அன்று மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,503 பேர் தரிசனம் செய்தனர். 30,884 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 27-ம்தேதி முதல் அக்டோபர் 5-ம்தேதி வரை நடக்கிறது.
    • திருமலை ஆனந்த நிலையத்துக்கு தங்க முலாம் பூசுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    திருப்பதி, ஜூலை.12-

    திருப்பதி அன்னமய்ய பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் முடிந்தபின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:-

    ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 வரை நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றத்தையொட்டி, மாநில அரசு சார்பில், ஏழுமலை யானுக்கு பட்டு வஸ்திரங்கள் வழங் கப்படும். திருமலை ஏழுமலையான் கோயில் ஆனந்த நிலையத்துக் குத் தங்க முலாம் பூசுவது குறித்து ஆகம பண்டிதர்களுடன் ஆலோ சித்து முடிவு எடுக்கப்படும்.

    நெல்லூரில் ஆகஸ்ட் 16 முதல் 20-ஆம் தேதி வரை ஸ்ரீ வெங் கடேஸ்வரா வைபவோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் டோக்கன் இன்றி நேரடியாக தரிசனத் துக்கு அனுப்பப்படுவது தொடர்கிறது. பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தரிசனம் வழங்க முயற்சித்து வருகிறோம். திருப்பதியில் டைம்ஸ்லாட் கவுன்ட்டர் கள் அமைப்பது குறித்து விரிவான ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத் தரவிட்டுள்ளோம்.

    அமராவதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ரூ.2.90 கோடியில் மலர் தோட்டங்கள் மற்றும் பசுமை வளர்ப்புக்கு ஒப் புதல் வழங்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சநேயசுவாமி மூலமூர்த் தியின் செப்புக் கவசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி ரூ.18.75 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்றார். *** ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி கோவில் கொடிமரம் சுத்தம் செய்யப்பட்டது.

    • இன்று வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் பக்தர்கள் ஆர்வம் செலுத்தவில்லை.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியி்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம் வி.ஐ.பி. தரிசனத்தை சேர்த்து கடந்த 2 மாதங்களாக சராசரியாக தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் செப்டம்பர் மாதத்திற்கான 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் அதிக அளவில் பக்தர்கள் ஆர்வம் செலுத்தவில்லை. இதற்கு முந்தைய மாதங்களில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 2, 3 மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.

    ஆனால் இன்று காலை வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் பக்தர்கள் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து வருகின்றனர்.

    ×