search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtallam Falls"

    • குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமே அதிகம் காணப்பட்டது.
    • சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் ஆபரண பெட்டி இன்று மதியம் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    நேற்று காலை முதல் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமே அதிகம் காணப்பட்டது.

    குறிப்பாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் வந்திருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் ஆபரண பெட்டி இன்று மதியம் 1 மணி அளவில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெறும் சபரிமலை ஐயப்பன் ஆபரண பெட்டியினை கண்டு வழிபட்டு செல்வதற்காகவும் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் தென்காசியில் முகாமிட்டுள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அலைமோதியது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்ததால் நேற்று முழுவதும் இந்த 2 அருவிகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அலைமோதியது.

    • கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் விவசாயிகள் கலக்கம் அடைந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணை பகுதியில் சுமார் 36 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. அதன்பின்னர் ஒரு வாரத்திற்கு சற்று பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்திலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அணைகள், குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து பிசான பருவ சாகுபடிக்காக பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் விவசாயிகள் கலக்கம் அடைந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 22 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாநகர பகுதியிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, அவ்வப்போது பலத்த மழையும், சில இடங்களில் சாரலும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்திருந்தாலும், இன்னும் ஒரு மாதம் வரை பருவகாலம் இருப்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணை பகுதியில் சுமார் 36 மில்லிமீட்டர் மழை பெய்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 82 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் 123 கனஅடி நீரில் சுமார் 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

    மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் பெய்து வருகிறது. தென்காசியில் 13 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று இரவில் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இன்று காலையில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து இருப்பதால் 2 அருவிகளிலும் குளிக்க தடை நீடிக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கயத்தாறு, மணியாச்சி, கோவில்பட்டி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. ஓட்டப்பிடாரம், குலசேகரப்பட்டினம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விளாத்திகுளம், திருச்செந்தூரில் லேசான சாரல் பெய்தது.

    • தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி தவிர்த்து ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் இன்று காலை முதல் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் நீராடினர்.

    • கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
    • அடவிநயினார் அணை பகுதியில் சுமார் 30 மில்லிமீட்டர் மழை பெய்ததால் அணை நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெரும்பாலான இடங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிவகிரியில் இன்று காலை வரை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு 57 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது.

    இதன் காரணமாக இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனைத்து அருவிகளிலும் அனுமதி வழங்கப்படவில்லை. இன்று காலை மெயினருவியை தவிர மற்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    குற்றாலம் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் இடத்தையும் சேர்த்து அனைத்து கிளைகளிலும் ஐயப்ப பக்தர்கள் இன்று காலை குளித்து மகிழ்ந்தனர். மழையால் மத்தளம்பாறை அருகே உள்ள செங்குளம் முழு கொள்ளளவை எட்டியதால் அதன் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் நெல் நடவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு இன்று காலை வரை சுமார் 45 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சுமார் 72.10 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை பகுதியில் சுமார் 30 மில்லிமீட்டர் மழை பெய்ததால் அணை நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்துள்ளது.

    • மெயின் அருவியில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு விழுந்தது.
    • வனத்துறையினர் உடும்பை பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலையில் மெயின் அருவியில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு விழுந்தது. தண்ணீருடன் அடித்து வரப்பட்ட உடும்பு, பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவு மீது விழுந்தது. இதனால் பயந்துபோன பெண்கள் அலறியடித்து வெளியேறினர்.

    பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அங்கு சென்று பார்த்து, தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி உடும்பை பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொடர்மழையால் இன்று காலை மெயினருவி மட்டுமல்லாது பழைய குற்றாலம் அருவி, சிற்றருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
    • ஐந்தருவி மற்றும் புலியருவி உள்ளிட்டவற்றில் இன்று காலை தண்ணீரின் வேகம் சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் இன்று காலை மெயினருவி மட்டுமல்லாது பழைய குற்றாலம் அருவி, சிற்றருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் ஐந்தருவி மற்றும் புலியருவி உள்ளிட்டவற்றில் இன்று காலை தண்ணீரின் வேகம் சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.

    • சேரன்மகாதேவி, அம்பை, கன்னடியன், மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    • மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 87.95 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 90.58 அடியை எட்டி உள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1112 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணைகளுக்கு வினாடிக்கு 1204 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 26 மில்லிமீட்டர் மழை பெய்தது. வடக்கு பச்சையாறு அணை பகுதியில் மழை இல்லாததால் அந்த அணைக்கு நீர் வரத்து இல்லை.

    மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 13.25 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதிலும் பெரும்பகுதி சகதியாகவே உள்ளது. அந்த அணையில் தற்போது 6.47 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    சேரன்மகாதேவி, அம்பை, கன்னடியன், மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முக்கூடல், வீரவநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மாலையில் இடி, மின்னல் பயங்கரமாக இருந்ததால் முன்எச்சரிக்கையாக சிறிது நேரம் மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் நேற்று மாலை முதல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று காலை முதல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    அணைகளை பொறுத்தவரை 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 81.50 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. ராமநதி அணை பகுதியில் 28 மில்லிமீட்டரும், கடனா அணை பகுதியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது.
    • காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

    தென்காசி:

    நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை விட அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள மலை கிராமங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. பகல் நேரத்திலும் வானம் மேகமூட்டத்தால் இருண்டு காணப்படுகிறது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி காக்காச்சி பகுதியில் அதிகபட்சமாக 36 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி மற்றும் சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் மட்டும் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 2.2 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அணை பகுதிகளில் சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயர தொடங்கி உள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 2 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்துள்ளது.

    இதனால் அணை நீர்மட்டம் 83.45 அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 96.23 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1197.45 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 404.75 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாநகர பகுதியில் சில இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 2.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. மொத்தம் 36.10 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு நிரம்புவதற்கு இன்னும் 2 அடி நீரே தேவைப்படுகிறது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 99.50 அடி நீர் இருப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக இன்று காலை முதலே அருவிக்கரைகளில் குவிந்தனர்.

    • தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • சேர்வலாறு அணை பகுதியில் 39 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு தொடர்ந்து சாரல் மழை கொட்டி வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 1195.26 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 80.25 அடியாக இருந்த நிலையில் இன்று காலை மேலும் 2 அடி உயர்ந்து 82.20 அடியாக அதிகரித்தது. சேர்வலாறு அணை பகுதியில் 39 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1585 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக காலையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மதியத்திற்கு பிறகு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்கிறது.

    இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. புறநகரில் கன்னடியன், சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல் அடித்தது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    மாவட்டத்தில் செங்கோட்டை, ஆய்க்குடி, தென்காசி, சிவகிரி, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அடவிநயினார் அணையில் 12 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 8 மில்லிமீட்டரும், கடனாநதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    • நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம் அணையின் நீர் மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்தது.
    • நேற்று 95.05 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 98 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2168.17 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் அவ்வப்போது மழை பெய்கிறது.

    நேற்றும் மழை தொடர்ந்தது. அதிகபட்டசமாக கடனாநதி, அடவிநயினார் அணைப்பகுதியில் 15 மில்லிமீட்டரும், கருப்பாநதி அணைப்பகுதியில் 12 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    அதே போல் ஆய்க்குடி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் மழை பெய்தது. இன்று காலை குற்றாலத்தில் சாரல் தூறியது. இதனால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    பாதுகாப்பு கருதி மெயினருவியில் நேற்று வரை 6 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அனுமதி கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று முதல் மெயின் அருவியில் குளிக்க மாவட்டம் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் காலையில் குற்றாலம் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் 5 பேர்களாக பிரிந்து குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    நேற்று முதல் ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியில் அனுமதி வழங்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் சிறப்பு பெற்றது அகஸ்தியர் அருவி. காரையாருக்கு செல்லும் மலைப்பாதையில் சாலை பணிகள் காரணமாகவும், சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா காரணமாகவும் கடந்த 25 நாட்களாக தடைவிதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முதல் வனத்துறை குளிக்க அனுமதி வழங்கியது. இதைத்தொடந்து இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம் அணையின் நீர் மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்தது.

    நேற்று 95.05 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 98 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2168.17 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1004.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    அதேபோல் நேற்று 116.75 அடி நீர்மட்டம் இருந்த அடவிநயினார் அணையின் உயரம் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 118 அடி உயரமாக உள்ளது. கடனாநதி, ராமநதி அணைகள் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 அடியே உள்ளது.

    ×