என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடும்பு"
- இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.
- முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 198 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது உடும்பு ஒன்று மைதானத்திற்கு நுழைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்களில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 212 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் போது உடும்பு ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்கு நுழைந்தது. இதனால் விளையாட்டு உடனடியாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. நடுவர் ஒருவரின் பெரும் முயற்சிக்கு பிறகு உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறி ஓடியது. இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது.
மற்ற நாட்டு மைதானத்துக்குள் நாய், புறா வந்து பார்த்ததுண்டு. ஆனால் இலங்கையில் மட்டும் நாய், பாம்பு, உடும்பு மைதானத்துக்குள் வந்துள்ளது. இதற்கு முன் இலங்கை பீரிமியர் லீக் தொடரின் போது பாம்பு 2 முறை மைதானத்துக்குள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
- பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் நேற்று உடும்பு ஒன்று ஒரு வீட்டுக்குள் திடீரெனப் புகுந்தது
- வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் நேற்று உடும்பு ஒன்று ஒரு வீட்டுக்குள் திடீரெனப் புகுந்தது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் அதனை பார்த்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த உடும்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடும்பை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விடுவதற்காக அங்கிருந்து எடுத்துச் சென்றனர். வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 7 கிலோ எடையுள்ள உடும்பு ஒன்று அலுவலக வளாகத்தில் நுழைந்தது.
- வனத்துறையினர் உடும்பை பிடித்து கூண்டில் அடைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் சுமார் 7 கிலோ எடையுள்ள பெரிய அளவிலான உடும்பு ஒன்று அலுவலக வளாகத்தில் நுழைந்தது. தொடர்ந்து ஒரு பகுதியில் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் படுத்துக் கிடந்துள்ளது.
இதைக் கண்ட பணியாளர்கள் அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் வனவர்கள் முனியப்பன், நாகேந்திரன் ஆகியோர் பாம்புகளை பிடிக்கப் பயன்படுத்தும் பிரத்தியேக உபகரணங்களைப் பயன்படுத்தி அந்த உடும்பை இலாவகமாக பிடித்து கூண்டில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி அந்த உடும்பை அருகில் உள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனர். தொடர்ந்து நீண்ட நேரமாக உடும்பு, அரசு அலுவலகத்தில் சுற்றி திரிந்ததால், அரசு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட முதல்மைல் மற்றும் மூலவயல் பகுதிகளில் அவ்வப்போது ராட்சத உடும்பு நடமாட்டம் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக வனத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனா். இரைதேடி வரும் உடும்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். குடியிருப்புப் பகுதியில் நடமாடும் உடும்பைப் பிடித்துசென்று வனத்தில் விட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இந்நிலையில், வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் வனத் துறையினா் உடும்பை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
- மெயின் அருவியில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு விழுந்தது.
- வனத்துறையினர் உடும்பை பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விட்டனர்.
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலையில் மெயின் அருவியில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு விழுந்தது. தண்ணீருடன் அடித்து வரப்பட்ட உடும்பு, பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவு மீது விழுந்தது. இதனால் பயந்துபோன பெண்கள் அலறியடித்து வெளியேறினர்.
பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அங்கு சென்று பார்த்து, தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி உடும்பை பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்