search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே வீட்டுக்குள் புகுந்த உடும்பு
    X

    வீட்டிற்குள் புகுந்த உடும்பை படத்தில் காணலாம். 

    பல்லடம் அருகே வீட்டுக்குள் புகுந்த உடும்பு

    • பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் நேற்று உடும்பு ஒன்று ஒரு வீட்டுக்குள் திடீரெனப் புகுந்தது
    • வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் நேற்று உடும்பு ஒன்று ஒரு வீட்டுக்குள் திடீரெனப் புகுந்தது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் அதனை பார்த்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த உடும்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடும்பை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விடுவதற்காக அங்கிருந்து எடுத்துச் சென்றனர். வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×