search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consecrated"

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அடுத்த வயலூர், கிராமத்தில் ஐம்பொன் ஐயப்ப சிலை நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. வயலூர் கிராமத்தில் உள்ள திரௌ பதி அம்மன் கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து நவகிரக, மற்றும் ஐயப்ப, விநாயகர், உள்பட 12 புனித நீர் கலசங்களை வைத்து. பல்வேறு மூலிகைகள் மூலம் யாகம் வளர்க்க ப்பட்டு, புனித நீர் கலசங்களை கோவிலை சுற்றி வந்து கோவில் வளாகத்தில் ஐம்பொன் ஐயப்பன் சிலை மீது புனித நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு 18 படி கன்னிசாமி பூஜை மற்றும் தெய்வீக நாடகம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை வயலூர் கிராம ஐய்யப்ப சாமிகள், மற்றும் ஊர் பொதுமக்கள், செய்திருந்தனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்,

    திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், அன்னம், வெள்ளி பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (5-ந் தேதி) மாலை 7 மணி அளவில் கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. 6-ந்தேதி காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.

    இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சிறிய வைர தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடிக்க சுவாமி ரத வீதிகள் வழியாக தேர் சுற்றி வந்து நிலைைய அடையும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • 3 கால யாக பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அடுத்த புதுப்பட்டி, கிராமத்தில் கூழ் மாரியம்மன், விநாயகர், முருகர், சிவன், நவகிரக, கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன்மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு 108 கலசம் வைத்து ஆனந்த் ஷர்மா, அய்யர் குழுவினர் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து, 3 கால யாக பூஜைகள் செய்தனர்.

    பின்னர் புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தில் நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். பின்னர் சூரிய பகவானுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.

    • புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா கருப்பனூர் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோவில் மகா கும்பாபிஷேகம் நகராட்சி கவுன்சிலர் குட்டி என்கிற சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஷ்வர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்துபுண்யாஹம், வாஸ்து சாந்தி, கலசஸ்தாபிதம், அங்குரார்பனம், முதல் கால கலச பூஜை, விசேஷ திரவ்ய ஹோமங்கள். பூர்ணாஹுதி, வேதம், கீதம் தீபாராதனை, 2, கால பூஜை, புண்யாஹம், 3 ம் கால கலச பூஜை, மஹா சாந்தி ஹோமங்கங்கள தம்பதிகள் சங்கல்பம், மஹா பூர்ணாஹுதி, மேளதாளங்களுடன் கலசம் புறப்பாடு நடைபெற்றது.

    தொடர்ந்து முக்கிய நிக ழ்வாக கோபுரகலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    அப்போது கூடி இருந்த பக்தர்கள் நாராயணா, கோவிந்தா, என கோஷமிட்டனர், நிகழ்ச்சியில் எம் எல்ஏ க்கள், ஏ. நல்லதம்பி, மதியழகன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம், ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் லட்சுமி நாராயணர் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சாமி திருக்கல்யாணம் வானவேடிக்கைகள் நடைபெற்றது.

    • விநாயக பெருமானுகுகு பிம்ப சுத்தி, அதிவாச கிரியைகள், சயனாதி வாசம் ,மதியம் 2மணிக்கு கரியுருவான அண்ணலுக்கு யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது.
    • கும்பஸ்தாபனம், கணபதிக்கு கலாகர்ஷனகனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    வீரபாண்டி:

    திருப்பூர் தெற்கு வட்டம் வீரபாண்டி கிராமம் ஏ. பி. நகர் கிழக்கில் ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூர்த்திகளாக விளங்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை அம்மன், ஸ்ரீ மகாவிஷ்ணு ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நாளை 7-ந்தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி இன்று 6ந்தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அனுக்ஞை, விக்னேஷ்வர பூைஜ, தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. 9 மணிக்கு மூஷிகவாகனனுக்கு முளைப்பாரி எடுத்து உலா வருதல் , காலை 11 மணி முதல் 12 மணிக்குள் சுவாமி கணேசருக்கு கோபுர கலசம் நிறுவுதல், விநாயக பெருமானுகுகு பிம்ப சுத்தி, அதிவாச கிரியைகள், சயனாதி வாசம் ,மதியம் 2மணிக்கு கரியுருவான அண்ணலுக்கு யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது.

    மாலை 4மணி முதல் விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, ம்ருத் சங்கிரஹணம், முளைப்பாரிக்கு பாலிகாஸ்தாபனம், சோமகும்ப ஆவாஹனம், ரக்‌ஷாபந்தனம், காப்பு கட்டுதல், கும்பஸ்தாபனம், கணபதிக்கு கலாகர்ஷனகனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    மாலை 6மணி முதல் யாகசாலபிரவேசம், த்வஜ, த்வார, தோரண, கும்ப ஆராதனம், ஆனைமுகனுக்கு அக்னி பிரதிஷ்டை, பிள்ளையாருக்கு முதல் கால ஹோமம், மூலமந்த்ர,தத்வ,நியாச, ஹோமங்கள், திரவியா ‌குதி,பூர்ணா‌ஹூதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், த்வஜ, த்வார, தோரண, கும்ப ஆராதனம், நான்மறைகள் போற்றும் நாயகனுக்கு இரண்டாம் கால ஹோமம், பிராண பிரதிஷ்டா ஹோமம், நாடிசந்தானம், ஸ்பர்ஸாஹூதி, மகா பூர்ணா ஹூதி, க்ரஹப்ரீதி, யாத்ராதானம் நடக்கிறது.

    காலை 9மணி முதல் ஸ்ரீசெல்வசித்தி விநாயகர் மூலவர், விமானம், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீமகா விஷ்ணு, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, மூஷிகர், பலி பீடம் ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் அபிஷேகம், மகா தீபாராதனை, தசதரிசனம், சங்கடங்கள் தீர்க்கும் சங்கரன் புதல்வனுக்கு சதுர் அன்ன மகா நைவேத்யம்,கஜகர்ணனின் திருச்செவிகளுக்கு கற்கண்டு ,தமிழில் திருமறை விண்ணப்பம், மகா தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10-30மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறும். யாகசாலை பூஜைகளை தொட்டம்பட்டி ஜெகநாத அய்யங்கார் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர்.

    • பல்வேறு பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் சுண்ணாம்புப்பேட்டையில் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோபூஜைகள் விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட இந்நிகழ்ச்சியில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ், ரோட்டரி சங்க ஆளுநர் ஜே.கே.என்.பழனி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை மாயகேசவலுநாயுடு குடும்பத்தினர்கள், விழா குழுவினர் பிரதர்ஸ் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

    • கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள சுண்டிவாக்கம் கிராமத்தில் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலை ஊர் மக்கள் சார்பாக புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத 3 கால யாகசாலை பூஜை செய்து, பின்னர் யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் கலசங்களை சுமந்து கொண்டு மேள வாத்தியம் முழங்க வலம் வந்த சிவாச்சாரியார்கள் முத்து மாரியம்மன் கோவில் கோபுரத்தில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    நிகழ்ச்சியை காண சுற்று வட்டார கிராம மக்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பாலாபிஷேகம் செய்து வழிபாடு
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி,

    வாணியம்பாடி தொகுதி புல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த மேல்பள்ளத்தூர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜை நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊர் கவுண்டர் டி.தங்கவேல், தர்மகர்த்தாக்கள் பி.கே. ரவி, மகேந்திரன், ரமேஷ், பூஜாரி பெரிய மாணிக்கம், கோல்கார் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அருள்நாதன், துணைத் தலைவர் செல்லப்பன், வார்டு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்து விழாவை நடத்தினர்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • விழாவையொட்டி ரூ.4½ கோடியில் திருப்பணிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பெருமாள், பிள்ளையார், சிவன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி கோபுரங்கள் கட்டப்பட்டது.
    • இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எஸ்.வி.எஸ்.பி.சந்திரராஜா மற்றும் கடம்பூர் ஜமீன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    கயத்தாறு:

    கடம்பூரில் சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிசேக விழா நடைபெற்றது. இதையொட்டி ரூ.4½ கோடியில் திருப்பணிகள் நடைபெற்றது.

    இதன் ஒரு பகுதியாக பெருமாள், பிள்ளையார், சிவன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி கோபுரங்கள் கட்டப்பட்டது.

    கடந்த 5 நாட்களாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பட்டர்கள், சென்னை அகலோம் பட்டர்கள் கும்பகோணம் பட்டர்கள் உள்பட 51 பட்டர்கள் பல்வேறு யாகங்கள், ‌ஹோமங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை 11 கும்பங்களுக்கு அபிேஷகத்துடன் கவசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கயத்தாறு யூனியன் தலைவர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்மண்டல பொறுப்பாளரும், தலைமை க்கழக செயலாளருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, கடம்பூர் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் நாகராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எஸ்.வி.எஸ்.பி.சந்திரராஜா மற்றும் கடம்பூர் ஜமீன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • அம்மன்களுக்கு சிருறப்பு பூஜை நடந்தது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா சுந்தரம் பள்ளி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன், குண்டி மாரியம்மன், முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக நடை பெற்றது.

    விழா நிகழ்ச்சியை ஒட்டி கணபதி ஹோமம், முதல் கால பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, கலச பூஜை, தம்பதியர்கள் சங்கல்பம், தொடர்ந்து முக்கிய நிகழ்வாக கலசங்களில் உள்ள புனித நீர் பூஜை செய்து ஊர்வ லமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர்.

    தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதேபோல திருப்பத்தூர் தாலுகா பேராம்பட்டு அடுத்த சகாதேவன் கொட்டாய் பகுதியில் உள்ள ஸ்ரீ விநாயகர் மூலவர் பாலமுருகன் உற்சவர் சுப்பிரமணிய வள்ளி தேவசேனா நவகிரக கோவில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    கோபுர கலச பிரதிஷ்டை தொடர்ந்து ஸ்ரீ கணபதி பூஜை பூர்ணக்க்ஹுதி, தீபாரதனை இரண்டாம் கால பூஜை தம்பதி சங்கல்பம் நடைபெற்றது

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ, நல்லதம்பி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே எஸ் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தா சண்முகம் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆவல்நா யக்கன்பட்டி கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் சுகுமார் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தன.

    • பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19-ந்தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் தொடங்கியது.
    • விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம், 2 நாட்கள் யாகசாலை பூஜைகள், காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19-ந்தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் தொடங்கியது. விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம், 2 நாட்கள் யாகசாலை பூஜைகள், காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    நேற்று காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா ஓம் சக்தி சரண கோஷத்துடன் நடைபெற்றது. கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினார்கள். பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. 2 கருட பகவான்கள் கோயில் மேல் பகுதியில் வட்டமிட்டது பக்தர்களை பரவசமடைய செய்தது.

    பெரிய மாரியம்மன் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், சாலுரு புருஹன் மாதா, நகரமன்ற சேர்மன் விஜய்கண்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் தனசேகரன், நாட்டாண்மைக்காரர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • இரண்டாம் கால யாகபூஜைகள் நடந்தது
    • ஆரணி எம்.எல்.ஏ கலந்து கொண்டார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் கிராம தேவதை செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு அம்மன் கரிக்கோலம் நடைபெற்றது மாலை முதல் கால யாகபூஜைகளும். இரண்டாம் கால யாகபூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதேபோல் ராமசாணிக்குப்பம் கன்னியப்பன் நகரில் பாலசுப்பிரமணியர், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாணிக்குப்பம் மகேஸ்வரிபார்த்தீபன், புதுப்பாளையம் நந்தினிகண்ணன், ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு, குண்ணத்தூர் செந்தில், ஆரணி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×