search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோவில் கும்பாபிஷேகம்

    • இரண்டாம் கால யாகபூஜைகள் நடந்தது
    • ஆரணி எம்.எல்.ஏ கலந்து கொண்டார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் கிராம தேவதை செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு அம்மன் கரிக்கோலம் நடைபெற்றது மாலை முதல் கால யாகபூஜைகளும். இரண்டாம் கால யாகபூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதேபோல் ராமசாணிக்குப்பம் கன்னியப்பன் நகரில் பாலசுப்பிரமணியர், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாணிக்குப்பம் மகேஸ்வரிபார்த்தீபன், புதுப்பாளையம் நந்தினிகண்ணன், ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு, குண்ணத்தூர் செந்தில், ஆரணி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×