search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கும்பாபிஷேகத்தையொட்டி சிவாச்சாரியார் புனித நீரை கலசத்தின் மீது ஊற்றியதையும், திரளான பக்தர்கள் பங்கேற்றதையும் படத்தில் காணலாம்.

    குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19-ந்தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் தொடங்கியது.
    • விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம், 2 நாட்கள் யாகசாலை பூஜைகள், காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19-ந்தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் தொடங்கியது. விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம், 2 நாட்கள் யாகசாலை பூஜைகள், காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    நேற்று காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா ஓம் சக்தி சரண கோஷத்துடன் நடைபெற்றது. கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினார்கள். பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. 2 கருட பகவான்கள் கோயில் மேல் பகுதியில் வட்டமிட்டது பக்தர்களை பரவசமடைய செய்தது.

    பெரிய மாரியம்மன் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், சாலுரு புருஹன் மாதா, நகரமன்ற சேர்மன் விஜய்கண்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் தனசேகரன், நாட்டாண்மைக்காரர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×