search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College Student Molested"

    • விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் மாணவி இரவு பணி முடிந்து கத்தாரி குப்பம் வரை பஸ்சில் வருவார்.
    • கத்தாரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது தந்தை பைக்கில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து மேல்அரசம்பட்டு செல்லும் சாலையில் உள்ள கத்தாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). ஊசூர் அடுத்துள்ள தார் வழியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கடந்த வாரம்தான் பெண் குழந்தை பிறந்தது.

    இதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மீது சரத்குமாருக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. மாணவி குடியாத்தம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள ஒரு துணிக்கடையில் மாணவி வேலை பார்த்து வந்தார். அதில் வரும் சம்பள பணத்தை படிப்பு செலவிற்கு பயன்படுத்திக் கொண்டார்.

    இந்த நிலையில் சரத்குமார் மாணவி தனியாக செல்லும் நேரத்தில் அவரிடம் ஆபாசமாக பேசி உள்ளார். தனது ஆசைக்கு இணங்குமாறு மாணவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டுகளாக சரத்குமார் மாணவியை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தார்.

    தனக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை பிறந்த பொறுப்பு கூட இல்லாமல் மாணவியை அடைவதில் சரத்குமார் குறியாக இருந்தார்.

    விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் மாணவி இரவு பணி முடிந்து கத்தாரி குப்பம் வரை பஸ்சில் வருவார். கத்தாரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது தந்தை பைக்கில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு மாணவி துணிக்கடையில் வேலை முடிந்து இரவு 8.30 மணிக்கு ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கத்தாரி குப்பத்திற்கு பஸ்சில் சென்று இறங்கினார்.

    ஆனால் அவரது தந்தை அங்கு அழைத்துச் செல்ல வரவில்லை. அந்த நேரத்தில் மாணவியின் வருகைக்காக சரத்குமார் முன்கூட்டியே அங்கு காத்திருந்தார்.

    ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து சென்ற மாணவியை சரத்குமார் தன்னுடன் வருமாறு கையை பிடித்து இழுத்து வற்புறுத்தினார்.

    இதனை சற்றும் எதிர்பாராத மாணவி கத்தி கூச்சலிட்டார். அப்போது சரத்குமார் மாணவியின் வாயில் துணியை கட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மாணவியை வேகமாக அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றார். கை, வாய் ஆகியவற்றை துணியால் கட்டி வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் கட்டாயப்படுத்தி மீண்டும் மீண்டும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து இரவு 10 மணி அளவில் மாணவி வீட்டுக்குச் சென்றார்.

    தனக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து தனது தாயிடம் அழுது கொண்டே கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் போக்சோ சட்டத்தின் கீழ் சரத்குமாரை கைது செய்தார். அவர் இன்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிறந்து ஒரு வாரமே ஆன தனது மகளை கொஞ்ச வேண்டிய சரத்குமார் பொறுப்பில்லாத தன்னுடைய வக்கிர புத்தியால் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

    பாதிக்கப்பட்ட மாணவிக்கு இன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. வீட்டிற்கு தனியாக சென்ற மாணவியை மிரட்டி வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒடுகத்தூர் மேல்அரசம்பட்டு சாலை இருபுறமும் விவசாயம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி நிறைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் அந்தப் பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    • போலீசார் தேடுவதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாக இருந்தார்.

    கோவை:

    சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    நான் 2019-ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். எனக்குள் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த சமயத்தில் கரூர் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவர் புதிய சினிமா ஒன்று தயாரிக்கப் போவதாகவும், அதற்கு கதாநாயகி தேர்வு நடப்பதாகவும் கூறி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    சமூக வலைதளங்களில் வந்த அறிவிப்பை பார்த்து நான் பார்த்திபனை தொடர்பு கொண்டேன். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கதாநாயகி தேர்வு நடப்பதாகவும், அங்கு வருமாறும் என்னை அழைத்தார்.

    நானும் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் அவர் சொன்ன பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றேன். அங்கு பார்த்திபன் இருந்தார். அவர், தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என கூறி என்னிடம் கேள்விகள் கேட்டார். சிறிது நேரத்தில் குளிர்பானம் கொடுத்தார். அதனை வாங்கி குடித்ததும் நான் மயங்கி விட்டேன்.

    இதனை பயன்படுத்தி பார்த்திபன் என்னை கற்பழித்து விட்டார். மயக்கம் தெளிந்து விழித்ததும் அவரை நான் கண்டித்தேன். என்னை சமாதானம் செய்து உன்னை நிச்சயம் கதாநாயகி ஆக்குவேன் என்றார். இப்படி ஆசைவார்த்தைகள் கூறியே மீண்டும், மீண்டும் என்னை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். குழந்தை பிறந்தால் சினிமாவில் நடிக்க முடியாது என்று கூறி கருவையும் கலைக்கச் செய்தார்.

    நான் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியபோது மறுத்தார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் எனக்கு பின்னர் தெரியவந்தது. இதேபோல் மேலும் பல பெண்களை அவர் ஏமாற்றியதையும் நான் அறிந்தேன். என்னை ஏமாற்றி கற்பழித்த பார்த்திபன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் பார்த்திபனை கைது செய்தனர். கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பார்த்திபன், பின்னர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கரூரைச் சேர்ந்த பார்த்திபன், சமீப காலமாக கோவை சரவணம்பட்டி கே.புதுப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இங்கும் ஒரு பெண்ணை அவர் ஏமாற்றி திருமணம் செய்து நகைகளை மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. அந்த பெண் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

    கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்த ராஜ்குமார் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்தவர் 24 வயது கல்லூரி மாணவி. இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    நான் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றேன்.

    அப்போது அதில் பங்கேற்ற கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நட்பாக பழகி வந்தோம். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதனை மறைத்து அவர் என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து விட்டார். ஆனால் நான் மறுத்து விட்டேன்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எனக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த என்னுடைய ஆபாச படத்தை எனக்கு அனுப்பி அவரது அசைக்கு இணங்குமாறு அழைத்தார்.

    நான் மறுத்தால் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்த நான் சென்னையில் அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றேன். அங்கு வைத்து ராஜ்குமார் என்னை மிரட்டி கற்பழித்தார்.

    பின்னர் குன்றத்தூரில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து என்னை கற்பழித்தார். அப்போது நான் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டார். இதனை வைத்து அவர் தொடர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    ராஜ்குமாரின் வீடு கோவையில் இருப்பதை அறிந்த நான் என்னுடைய ஆபாச படங்களை பெற்றுக்கொள்வதற்காக கோவைக்கு வந்தேன். அவர் என்னை கொடிசியா அருகே வர சென்னார். அங்கு சென்று நான் புகைப்படங்களை கேட்டேன். அதற்கு அவர் தர மறுத்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். எனவே என்னை மிரட்டி கற்பழித்த ராஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்த ராஜ்குமார் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மல்லி பள்ளி, விஜய் நகர் காலனியில் ஆதரவற்றோருக்கான கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது
    • இந்த விடுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தோழியின் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற 17 வயது சிறுமி, காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    சிறுமியை கற்பழித்த 5 பேரும் பள்ளி மாணவர்கள் என்பதும் அவர்களில் அரசியல் பிரமுகர்களின் மகன்களும் உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

    இதில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தியும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி கற்பழிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் மேலும் 12 வயது சிறுமி காரில் கடத்தி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் மேலும் ஒரு கல்லூரி மாணவி பலாத்கார சம்பவம் ஐதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மல்லி பள்ளி, விஜய் நகர் காலனியில் ஆதரவற்றோருக்கான கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    மாணவி படிக்கும் கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடையில் சுரேஷ் (23) என்பவர் வேலை செய்து வருகிறார். மாணவி அடிக்கடி ஜெராக்ஸ் கடைக்கு சென்று வந்ததால் சுரேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சுரேஷ் மாணவிக்கு புதியதாக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இந்நிலையில் தன்னுடன் விடுதியில் தங்கியுள்ள தோழியின் காதலன் ராகுல் பிறந்தநாள் விழா கடந்த மாதம் நடந்தது.

    பிறந்தநாள் விழா ஐதராபாத் நெக்லஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. பிறந்தநாள் விழாவில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மற்றும் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விழா நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைந்தது.

    சுரேஷ், ராகுலின் காரில் மாணவியை ஏற்றிக்கொண்டு ராம் கோபால் பேட்டையில் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கல்லூரி மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்தார்.

    பின்னர் மாணவியை கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு சென்றார்.

    பலாத்காரம் விவகாரம் குறித்து மாணவி விடுதி காப்பாளரிடம் தெரிவித்தார். விடுதி காப்பாளர் உமாயூன் நகர் போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் ராம்கோபால் பேட்டை என்பதால் புகார் மனுவை அந்த போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

    ×