என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஐதராபாத்தில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற மேலும் ஒரு கல்லூரி மாணவி பலாத்காரம்
- தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மல்லி பள்ளி, விஜய் நகர் காலனியில் ஆதரவற்றோருக்கான கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது
- இந்த விடுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தோழியின் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற 17 வயது சிறுமி, காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
சிறுமியை கற்பழித்த 5 பேரும் பள்ளி மாணவர்கள் என்பதும் அவர்களில் அரசியல் பிரமுகர்களின் மகன்களும் உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.
இதில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தியும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி கற்பழிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் மேலும் 12 வயது சிறுமி காரில் கடத்தி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் மேலும் ஒரு கல்லூரி மாணவி பலாத்கார சம்பவம் ஐதராபாத்தில் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மல்லி பள்ளி, விஜய் நகர் காலனியில் ஆதரவற்றோருக்கான கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
மாணவி படிக்கும் கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடையில் சுரேஷ் (23) என்பவர் வேலை செய்து வருகிறார். மாணவி அடிக்கடி ஜெராக்ஸ் கடைக்கு சென்று வந்ததால் சுரேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சுரேஷ் மாணவிக்கு புதியதாக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இந்நிலையில் தன்னுடன் விடுதியில் தங்கியுள்ள தோழியின் காதலன் ராகுல் பிறந்தநாள் விழா கடந்த மாதம் நடந்தது.
பிறந்தநாள் விழா ஐதராபாத் நெக்லஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. பிறந்தநாள் விழாவில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மற்றும் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விழா நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைந்தது.
சுரேஷ், ராகுலின் காரில் மாணவியை ஏற்றிக்கொண்டு ராம் கோபால் பேட்டையில் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கல்லூரி மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்தார்.
பின்னர் மாணவியை கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு சென்றார்.
பலாத்காரம் விவகாரம் குறித்து மாணவி விடுதி காப்பாளரிடம் தெரிவித்தார். விடுதி காப்பாளர் உமாயூன் நகர் போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் ராம்கோபால் பேட்டை என்பதால் புகார் மனுவை அந்த போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்