என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆபாச படம் எடுத்து மாணவியை மிரட்டி கற்பழிப்பு- கோவை வாலிபர் மீது வழக்கு
கோவை:
ஈரோட்டை சேர்ந்தவர் 24 வயது கல்லூரி மாணவி. இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
நான் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றேன்.
அப்போது அதில் பங்கேற்ற கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நட்பாக பழகி வந்தோம். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதனை மறைத்து அவர் என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து விட்டார். ஆனால் நான் மறுத்து விட்டேன்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எனக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த என்னுடைய ஆபாச படத்தை எனக்கு அனுப்பி அவரது அசைக்கு இணங்குமாறு அழைத்தார்.
நான் மறுத்தால் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்த நான் சென்னையில் அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றேன். அங்கு வைத்து ராஜ்குமார் என்னை மிரட்டி கற்பழித்தார்.
பின்னர் குன்றத்தூரில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து என்னை கற்பழித்தார். அப்போது நான் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டார். இதனை வைத்து அவர் தொடர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
ராஜ்குமாரின் வீடு கோவையில் இருப்பதை அறிந்த நான் என்னுடைய ஆபாச படங்களை பெற்றுக்கொள்வதற்காக கோவைக்கு வந்தேன். அவர் என்னை கொடிசியா அருகே வர சென்னார். அங்கு சென்று நான் புகைப்படங்களை கேட்டேன். அதற்கு அவர் தர மறுத்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். எனவே என்னை மிரட்டி கற்பழித்த ராஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்த ராஜ்குமார் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்