search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cold"

    குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் அத்தகைய உணவுகள் உடலை மேலும் பலவீனப்படுத்தும். உடல் உபாதைகள் ஏற்படவும் வழி வகுத்துவிடும். துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பவை. அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்துவிடும்.

    தொண்டை எரிச்சல் பிரச்சினையும் அதிகமாகிவிடும். தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் குளிர்காலத்துக்கு உகந்ததல்ல. மார்புச்சளி இருக்கும் போது உணவில் தயிர் சேர்த்துக்கொண்டால் அது சளியை இறுக வைத்துவிடும். குளிர் பானங்கள் பருகுவதும் தொண்டை வலியை அதிகப்படுத்திவிடும்.

    வறுத்த உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது. அவையும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும். காபின் கலந்த பானங்கள், மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த திராட்சை பழம், மிளகுத்தூள், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, அன்னாசிபழம், கொய்யா போன்றவற்றையும், வைட்டமின் இ சத்துக்களை கொண்ட கீரை வகைகள், பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள், ப்ரோக்கோலி, நெல்லிக்காய், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

    அதுபோல் செலினியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்திருக்கிறது. அந்த சத்து நிறைந்த இறால், முட்டை, இறைச்சி வகைகளை சாப்பிடலாம். சிக்கன் சூப் பருகுவதும் சளிக்கு இதமாக இருக்கும். கிரீன் டீ பருகுவதும் சளித்தொல்லைக்கு நிவாரணம் தரும். அதில் சளி பிரச்சினைக்கு காரணமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. குறைந்தபட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகுவதும் அவசியமானது.
    சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.
    இருமல்: கடந்த ஒரு மாத காலமாக பலருக்கும் சளி, இருமல் பிரச்சனைதான். மருந்து சாப்பிட்டு சளி கூட நீங்கி விட்டது. இருமல் தான் நிற்கவே இல்லை என பலரும் கூறுகின்றனர். பல இருமல் மருந்துகளை சாப்பிட்டும் குறையவில்லை என்பதும் தொடர் இருமல் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.

    * தேன் மிகச் சிறந்தது வறட்டு இருமலுக்கு என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1-2 டீஸ்பூன் தேனினை வெதுவெதுப்பான நீரில் 2-3 முறை அன்றாடம் குடித்து வர இருமல் கட்டுப்படும். இதனை சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

    * பைன் ஆப்பிள்: அன்னாசி பழமானது மூக்கு, சைனஸ் பகுதிகளில் உள்ள வீக்கத்தினை குறைக்க வெகுவாய் உதவுகின்றது. இருமல் இருக்கும் பொழுது அன்னாசி பழ ஜூஸ் சிறிதளவு அவ்வப்போது குடிப்பது சளியினை வெளியேற்றி இருமலைக் குறைக்கும்.

    * அதிமதுரம்: இதற்கு பல நாடுகளில் இன்று வரவேற்பு வெகுவாய் கிடைத்துள்ளது. அதிமதுர பொடி வாங்கி 2 கப் நீரில் 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் இறக்கி 15-20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பின் இதனை வடிகட்டி காலை-மாலை இரு வேளை அருந்துங்கள். இருமல் வெகுவாய் கட்டுப்படும்.

    * வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு கொப்பளியுங்கள்.

    நெஞ்செரிச்சல்: அசிடிடி-நெஞ்செரிச்சல் என்ற இந்த இரு வார்த்தைகளை கேட்காதவர், அனுபவிக்காதவர் மிகக் குறைவு எனலாம். இதற்கு தானே மருந்து கடையில் மருந்து வாங்கி எடுத்துக் கொள்பவர்கள் ஏராளம். ஆனால் இது அடிக்கடி அவர்களை தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

    மிக அதிகமாகவும், அடிக்கடியும் இந்த ஆசிட் கட்டுப்படுத்தும் மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

    விடாமல் அசிடிடி நிவாரண மருந்தினை பாக்கெட்டிலேயே வைத்து உணவு போல் அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது

    * தேவையான சத்துக்களான பி12, கால்ஷியம், இரும்பு மற்றும் மக்னீஷிய சத்துக்கள் உறிஞ்சப்படுவது வெகுவாய் குறைகின்றது.

    * உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.



    இயற்கை முறையில் அசிடிடி பாதிப்பினை தடுக்க சில முறைகள் இருக்கின்றன.

    * குளிர்ந்த பால் அருந்துவது அசிடிடி பாதிப்பினை வெகுவாய் குறைக்கும். நீக்கும். உங்களுக்கு சளி பாதிப்பு ஏற்படாது எனில் ஐஸ்கிரீம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

    * மோர் குடிக்கலாம். இதனை அன்றாடம் அடிக்கடி கூட குடிக்கலாம்.

    * சிகரெட், மது இரண்டினையும் அடியோடு தவிர்த்து விடவேண்டும்.

    * பாதாம் வயிற்றிலுள்ள ஆசிட் சக்தியினை குறைத்து விடும். சாப்பிட்ட பிறகு 3-4 பாதாம் மென்று சாப்பிடுங்கள்.

    * மசாலா, எண்ணெய், காரம் இவைகளை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

    * போதுவான தூக்கமின்மை நெஞ்செரிச்சல், ஆசிட் எதிர்ப்பு ஆகியவற்றினை உருவாக்கும். எனவே குறைந்தது 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் இரவில் தேவை.

    * ஆப்பிள், வாழைப்பழம் உண்ணலாம்.

    * சோற்றுக்கற்றாழை ஜூஸ் மிக நல்ல சிகிச்சை ஆகும்.

    * அரிசி உணவும் நெஞ்செரிச்சல், ஆசிட் இவற்றுக்கு நல்ல தீர்வாகும்.

    இன்னும் ஒரு 30 நாட்கள் லேசான குளிர் இருக்கலாம்.

    ஆனால் பலருக்கு இந்த குளிர் நாட்கள் சளி, ஜீரம், ஆஸ்துமா என பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம், தோய்க்கும் துணிகளை வீட்டுக்குள்ளேயே அதுவும் சூரிய ஒளி இல்லாத இடத்தில் ஈரத் துணிகளை காயப் போடுவது தான். நம்மில் அநேகருக்கு பல கிருமி, பூஞ்ஞைகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. சிலருக்கு இந்த ஈர துணிகளை உள்ளே காயப்போடும் பொழுது அந்த ஈரம் அவரைத் தாக்குவதால் சளி, ஆஸ்த்மா பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மிக அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான தகுந்த பாதுகாப்பினை இவர்கள் மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
    அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்றதா? நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
    அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்றதா? நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
    சாப்பிடும் முன் கை கழுவும் பழக்கம் இன்று எல்லோரிடமும் இருக்கின்றது. ஆனால் அதனை முறையாய் செய்கின்றோமா என்றுதான் கவனிக்க வேண்டும். வலது கையை குழாயின் கீழ் நீட்டி ஒரு நொடியில் ‘நானும் கை சுத்தம் செய்து விட்டேன்’ என்று வருவது கை கழுவாது உண்பதற்கும் சமம். இரு கைகளையும் நீரில் நனைத்து சோப் கொண்டு 20 நொடிகளாவது நன்கு கை, நகங்களை தேய்த்து கழுவுதே கிருமிகளை நீக்கும் முறையாகும்.

    இல்லையெனில் கிருமிகள் பாதிப்பு உடனே ஓடி வந்து விடும். இளம் வயதினருக்கு இன்று ஒரு பழக்கம் உள்ளது. செல்போனை தன் தலையணை அருகேயே வைத்திருப்பார்கள். தூக்கத்தில் அவ்வப்போது எழுந்து தன் செல்போனில் வாட்ஸ்அப் செய்திகளை படித்துக் கொண்டும், செய்தி அனுப்பிக் கொண்டும் இருப்பார்கள். இப்படி தூக்கம் கெடுவது அதிக தீய பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்துகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது. வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் குறைகின்றன. அதனால் இவர்கள் எளிதில் வைரஸ் மற்றும் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றீர்களாம்.

    * அதிக மனஉளைச்சல் உங்களை ஆட்கொள்ளாது தவிருங்கள். இவைகளை கவனத்துடன் செய்தாலே வைரஸ், கிருமிகள் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். கூடவே பொது கைப்பிடிகளில் டிஷ்யூ பேப்பரை கொண்டு உபயோகிப்பதும், கடன் வாங்காததும், கொடுக்காததும் உங்கள் பேனாவினை பயன்படுத்துவதும் கூடுதல் நம்மை பயக்கும்.

    * கை குலுக்குவதனைக் காட்டிலும் வணக்கம் சொல்வது சுகாதார வெளிப்பாடும் கூட.
    * வேலை செய்யும் டேபிளிலேயே உணவையும் வைத்து சாப்பிடாதீர்கள்.
    * அன்றாட காலை இளம் வெய்யில் உடலுக்கு அவசியம்.
    * யோகா பழகுங்கள்.
    * மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
    * காலை உணவை கண்டிப்பாய் எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஆக மேற்கூறியவற்றில் முறையான கவனம் கொடுக்கும் பொழுது ஜலதோஷ பாதிப்பு வெகுவாய் குறையும்.

    தலைவலி சில சமயங்களில் ஆபத்தானதாகக் கூட இருக்கலாம்.

    * மூளைக்கும் அதனை படர்ந்து இருக்கும் மெல்லிய ஜவ்வு படலத்திற்கும் இடையே சில சமயங்களில் ரத்த கசிவு ஏற்படலாம். இதனால் ஏற்படும் தலைவலி ஆபத்தானது.
    * உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலி உடனே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
    * மூளையில் கட்டி.
    * மூளையில் கிருமி தாக்குதல் இதனால் ஏற்படும் தலைவலி உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது அவசியம்.
    * மண்டைக்குள் நீர் சேர்ந்து மூளை வீக்கம் ஏற்படுதல்.
    * விஷவாயு தாக்குதல்.
    * மூளையில் ரத்தக் குழாய் உடைந்து ரத்தப் போக்கு ஏற்படுதல்.

    இவற்றினால் ஏற்படும் தலைவலியினை உடனடி மிக அவசர சிகிச்சையாக கவனிக்க வேண்டும். இதற்கான அறிகுறிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * திடீரென ஏற்படும் தாங்க முடியாத தலைவலி.
    * எப்பொழுதும் வரும் தலைவலியினைக் காட்டிலும் வித்தியாசமான கடும் தலைவலி.
    * தலைவலியுடன் குழறிய பேச்சு, பார்வை மங்குதல், கை, கால் அசைப்பதில் கடினம், மறதி ஏற்படுதல்.
    * தலையில் அடிப்பட்டு ஏற்படும் தலைவலி.
    * 50 வயதிற்கு மேல் இருந்து ஏற்படும் தலைவலி.
    * கண் வலி, கண் சிகப்பு ஒரு கண்ணில் இருந்து ஏற்படும் தலைவலி இப்படிப்பட்ட அறிகுறிகள் இருக்கும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    மருத்துவ தந்தை என்று அழைக்கப்படும் ‘ஹிப்போக்ரேட்ஸ்’ பல காலங்களுக்கு முன்னாள் கூறியுள்ள ஒரு மருத்துவ செய்தினை நினைவு கூர்ந்து பார்ப்போம். ‘எல்லா நோய்களும் உணவுப் பாதையிலே ஆரம்பிக்கின்றது’ என்பதுதான். மருத்துவ உலகில் எண் சான் உடம்பிற்கு உணவு பாதையும், ஜீரண உறுப்புகளுமே பிரதானம்’ எனலாம்.

    குடலின் உள் சுவரில் மெல்லிய படலம் உள்ளது. இந்த படலம் நல்ல சத்துக்களை உடலுக்குள் செலுத்தி தீய, நச்சுகளை வெளியேற்றி விடுகின்றது. இப்படலத்தில் மிக நுண் துளைகள் ஏற்படும் பொழுது நச்சுகளும் ரத்தத்தில் கலந்து விடுகின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பல விதத்தில் பாதிக்கப்படுகின்றது என்பதனை சிலர் நீண்ட ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றனர். சரி இந்த பாதிப்பு ஏன் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது?

    * பரம்பரை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம்.
    * முறையில்லாத உணவுகள் குடலை பாதிக்கின்றன. நல்ல பாக்டீரியாக்களை அழிக்கின்றன. கெட்ட பாக்டீரியாக்களை பெருக்குகின்றன. குடல் வீக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
    * உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள், குடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    * மிக அதிக மனஉளைச்சல் ஜீரண மண்டலத்தினையே அதிகம் பாதிக்கின்றது.
    * சுத்தமில்லா நீர் காரணமாக இருக்கலாம்.

    பொதுவில்

    * குடலில் புண் ஏற்பட்டாலோ
    * கிருமிகள் தாக்குதலால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ
    * உடலில் சத்து குறைபாடு இருந்தாலோ
    * குடல் வீக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டாலோ
    * நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலோ
    * எடை கூடுதல், நீரிழிவு நோய் 2-ம் பிரிவு என தாக்குத்ல ஏற்பட்டாலோ
    முதலில் உங்கள் உணவுப் பாதை, கல்லீரல், பித்தப்பை என உணவு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இதற்கு உங்கள் மருத்துவர் உதவியினை உடனடி பெறுவது பல்வேறு நோய்களில் இருந்து உங்களைக் காக்கும்.
    ஊட்டியில் பலத்த மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் சேற்றில் விழுந்து நாசம் அடைந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் கனமழை வெளுத்து வாங்கியது. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. அடர்ந்த மேக மூட்டமும் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றன. பள்ளி, கல்லூரி மாற்றும் வேலைக்கு செல்வோர் கம்பளி ஆடை அணிந்து சென்றனர். பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நொண்டிமேடு, குன்னூர், பர்லியார் ஆகிய பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குன்னூர் பகுதி நிலச்சரிவு ஏற்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரம் அதிகமாக உள்ளதால் இந்த பகுதி மக்கள் நிலச்சரிவு அபாயத்தில் தூக்கத்தை தொலைத்து விடியவிடிய அச்சத்தில் இரவை கழித்தனர். இதில் பலியார் பகுதி ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியாகும். குன்னூர் சாலைகள் மழைவெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களின் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறினர். தொடர்ந்து 3 நாட்கள் கனமழை நீடிக்கும் என்பதால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வாழை விவசாயம் முக்கியப்பங்கு வகிக்கிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை மற்றும் பிற வாழை ரகங்களை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே யுள்ள வெள்ளிப்பாளையம், வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம், பாலப்பட்டி, வேடர்காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் உள்ள வாழைகள் பாதியில் முறிந்து நாசம் அடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் சேற்றில் விழுந்து நாசம் அடைந்தன.

    இந்த சூறாவளிக்காற்றில் 50 ஆயிரம் வாழைகள் நாசம் அடைந்திருக்கும் என்று தெரிகிறது.

    ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம்.
    ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம். அடிக்கடி சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சில உணவுகளை சேர்த்து கொள்வதன் மூலம் சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் அவை சளி, இருமலை அதிகரித்து விடக்கூடும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    சேர்க்கவேண்டியவை: இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம். இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.

    தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.

    பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால், தவிர்க்கவும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது. இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.
    ஆயுர்வேதத்தில் ஜலதோ‌ஷம் வராமலிருக்கவும், வந்துவிட்டால் விரைவில் குணமாக்கவும் வழிகள் இருக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஜலதோ‌ஷம் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். மருந்து எதுவும் சாப்பிடாவிட்டால் ஏழு நாட்களில் போய்விடும் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஜலதோ‌ஷத்துக்கென்று உடனடி தீர்வு கிடையாது. ஜலதோ‌ஷம் உடலை சமநிலைக்குக் கொண்டு வரும் தற்காப்பு. ஆகவே உடல் சரியானால்தான் ஜலதோ‌ஷம் சரியாகும்.

    பெயரிலேயே இருப்பது போல (ஜலம்) குளிர்ந்த நீர், மழை, குளிர் காற்று ஆகிய காரணங்களால் ஜலதோ‌ஷம் உடனே வருகிறது. ஏறத்தாழ 200 வகை வைரஸ் கிருமிகள் ஜலதோ‌ஷத்தை உண்டாக்குகின்றன என்பது வியப்பாக இருக்கும். ஜலதோ‌ஷம் இருப்பவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் கிருமிகள் காற்றில் பரவி, வேறு பொருட்கள் மீதும் படிந்து விடுகின்றன.

    காற்றிலிருந்தோ அப்பொருட்களைத் தொடும்போதோ நம் உடலில் புகுந்து விடுகின்றன. நல்ல ஓய்வும், நல்ல உணவும், சுத்தமான சூழலும் இருந்தாலே ஜலதோ‌ஷம் சரியாகி விடும். ஆனால் மிகுந்த துன்பப்படுத்தி விடும். ஆயுர்வேதத்தில் ஜலதோ‌ஷம் வராமலிருக்கவும், வந்துவிட்டால் விரைவில் குணமாக்கவும் வழிகள் இருக்கின்றன.

    மூக்கடைப்பு

    * ஓமத்தைக்கசக்கி, பருத்தித்துணியில் கட்டி, தலையணை அருகே வைக்கலாம்.

    * ஏலக்காய் விதைகளை தணலில் போட்டு புகையை உறிஞ்சலாம்.

    இருமல்

    தூசு மற்றும் கிருமிகள் மூக்கு வழியாக உள்ளே வரும்போது, அவற்றை வெளியே அனுப்ப உடல் எடுக்கும் முயற்சி தும்மல். தும்மல் மூலம் வெளியே அனுப்ப முடியாதபோது, ஜலதோ‌ஷம் வருகிறது. இந்த சளியை வெளியே அனுப்ப நமது உடல் எடுக்கும் நடவடிக்கையே இருமல்.

    இருமலே ஒரு நோய் என்று, அதை தடுக்க மருந்து சாப்பிடுகிறோம். உண்மையில் வெளியில் இருந்து உடலுக்குள் வந்த ஒவ்வாதபொருட்களை வெளியில் அனுப்பும் நல்ல காரியமே இருமல் என்பதைப்புரிந்து, சளியைக்குணமாக்க முயல வேண்டும்.

    இருமலுக்கான சில வீட்டு முறை வைத்தியங்கள்

    * 10 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலுடன், 1 டேபிள் ஸ்பூன் கசகசா, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் இரவில் தூங்கும் முன்பு குடிக்க வேண்டும்.

    * தேன், இஞ்சி சாறு இரண்டையும் சம அளவு கலந்து தினமும் 2, 3 முறை 1 டீஸ்பூன் வீதம் குடிக்கலாம்.

    * 3 மிளகு, ஒரு துளி கருஞ்சீரகம், ஒரு துளி உப்பு சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.

    * சம எடை அளவு மிளகுத்தூள், கற்கண்டு சேர்த்து கலந்து, தேவையான அளவு நெய் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, தினமும், 3,4 முறை ஒவ்வொரு உருண்டையாக உட்கொள்ள வேண்டும்.

    * குழந்தைகளுக்கு 1 டீஸ்பூன் துளசி சாறை, தினமும் 2,3 முறை கொடுக்கலாம்.

    * வெதுவெதுப்பான பாலில் ஒரு துளி மஞ்சள்தூள் சேர்த்து இரவில் குடிக்கலாம்.

    கக்குவான் இருமல்

    * 10 கிராம் துளசியையும், 10 கிராம் மிளகையும், அரைத்து, தேன் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, தினமும் 4 முறை சாப்பிடவும். இதை அப்படியே விழுங்காமல், மெதுவாக சாப்பிட வேண்டும்.

    * வறண்ட இருமலுக்கு துளசி, இஞ்சி, வெங்கா யம் இவற்றின் சாற்றுடன் தேன் சேர்த்து எடுக்க வேண்டும்.

    * சளியுடன் வரும் இருமலுக்கு கற்கண்டையும் சேர்க்க வேண்டும்.



    சளியுடன் கூடிய இருமல்

    * தினமும் 3,4 முறை சம அளவு வெங்காயச் சாறும், தேனும் கலந்து குடிக்க வேண்டும். குளிர்காலத்தில் சளித்தொல்லை வராமலிருக்க, முன் எச்சரிக்கை மருந்தாக எடுக்கலாம்.

    இப்பிரச்சினையால் சிரமப்படும் குழந்தை களுக்கு, கபத்தை உண்டாக்கும். பால், நெய், இனிப்புகள், அரிசி, மைதாவால் செய்யப்பட்ட பொருட்கள், சர்க்கரை ஆகிய பொருட்களைக் கொடுக்கக் கூடாது.

    சில வீட்டு முறை சிகிச்சைகள்:

    * கிராம்பை, ஒரு துளி உப்புடன் மெல்லலாம். தொண்டையிலிருக்கும் கரகரப்பு நீங்கும். சளி அகலும்.

    * இஞ்சிப்பொடி, கிராம்புப் பொடி, பட்டைப் பொடி மூன்றும் ½ ஸ்பூன் அளவு எடுத்து அதன் மீது 1 கப் கொதிக்கும் நீரை ஊற்றி, சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி, 1 ஸ்பூன் தேன் கலந்து கொடுக்க வேண்டும்.

    தொண்டை கட்டுவது, குரல் கம்முவது

    * இவை இரண்டுக்குமே மா விலை நல்ல மருந்து, மாவிலைக் கொழுந்தை சுத்தமான தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, வடித்து, அதில் சில துளி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

    * மாம்பூவை நெருப்பில் போட்டு, அந்தப் புகையைச் சுவாதித்தாலும், தொண்டைக் கட்டு சரியாகும்.

    மூக்கடைப்பு

    * பச்சை ஏலக்காய், பட்டை, மிளகு, சீரகம் இவற்றையும் சம அளவு எடுத்துப் பொடியாக்கி, அதை அடிக்கடி மூக்கில் உரிஞ்ச வேண்டும்.

    மூக்கில் நீர்வடிதல்:

    * ஜாதிக்காயைப் பொடியுடன் சேர்த்து கல்லில் அரைத்து, நெற்றியிலும், மூக்கிலும் பற்றாகப் போடலாம்.

    தும்மல்

    வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன் 1 கப் நீரில் கொதிக்க விட்டு, பாதியாகக்குறைந்ததும், வடிகட்டி, காலை, மாலை இரு வேளையும், 1 டேபிள் ஸ்பூன் அளவு தினமும் சில நாட்களுக்கு அருந்தவும்.

    ×