search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess Olympiad"

    • மாமல்லபுரம் சுற்று வட்டார கடலோரப்பகுதி மீனவர்கள் ஓய்வு நேரத்தில் சமூகநல கூடங்களில் கற்களை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடுவது வழக்கம். தற்போது அவர்கள் செஸ் விளையாட துவங்கியுள்ளனர்.
    • சிறுவர்கள் பலரும் வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமல் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி துவங்கிய நாளில் இருந்தே ஆன்லைன் வழியாக நுழைவுச்சீட்டு வாங்கியவர் போட்டியை நேரில் பார்க்க முழு நேரம், ஒரு மணி நேரம் என அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் பள்ளி மாணவர்கள், செஸ் ஆர்வலர்கள், போட்டி தேர்வானவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்த்து ரசித்து வருகிறார்கள். நாளையுடன் முடிவடைவதால் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் "போர் பாய்ண்ட்ஸ்" அரங்கத்தில் செஸ் ரசிகர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

    இதனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் செஸ் விளையாட்டு பிரபலமாகி உள்ளது. நகரம் மற்றும் பட்டிதொட்டி எங்கும் "செஸ் ஒலிம்பியாட்" பற்றி பேசப்பட்டு வருவதுடன் செஸ் விளையாட்டு தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்ளும் நிலை தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.

    மாமல்லபுரம் சுற்று வட்டார கடலோரப்பகுதி மீனவர்கள் ஓய்வு நேரத்தில் சமூகநல கூடங்களில் கற்களை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடுவது வழக்கம். தற்போது அவர்கள் செஸ் விளையாட துவங்கியுள்ளனர். அப்பகுதி சிறுவர்கள் பலரும் வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமல் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் கடைசி சுற்று நாளை நடக்கிறது.
    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடக்கிறது.

    சென்னை:

    186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் நேற்று வரை 9 சுற்றுகள் முடிவடைந்துள்ளது.

    10-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஒபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் தலா மூன்று அணிகள் விளையாடி வருகின்றன.

    ஒபன் பிரிவில் இந்திய 'பி' அணி 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் 10-வது சுற்றில் இந்திய 'பி' அணி முதலிடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானுடன் மோதுகிறது.

    இந்திய 'பி' அணியில் டி.குகேஷ், பிரக்ஞானந்தா, சரின் நிஹல், சத்வானி ரானக், அதிபன் ஆகியோர் உள்ளனர். இந்திய 'ஏ' அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தை அமெரிக்கா, அஜர்பைஜான் உள்பட 7 அணிகளுடன் பகிர்ந்துள்ளது.

    இந்திய 'சி' அணி 12 புள்ளிகளுடன் 22-வது இடத்தில் உள்ளது. 10-வது சுற்றில் இந்திய 'சி' அணி ஸ்லோவாக்கியாவுடன் மோதுகிறது.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தை போலந்து, கஜகஸ்தான், ஜார்ஜியா ஆகிய அணிகளுடன் பகிர்ந்துள்ளது. நேற்று நடந்த 9-வது சுற்றில் போலந்திடம் இந்திய 'ஏ' அணி தோல்வி அடைந்தது. அந்த அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இந்திய 'ஏ' அணி இன்று 10-வது சுற்றில் கஜகஸ்தானுடன் மோதுகிறது.

    சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய 'ஏ' அணி மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். இதனால் வெற்றி கட்டாயத்துடன் இன்று களம் காணுகிறது. அந்த அணியில் கோனேருஹம், ஹரிகா, தானியா சச்தேவ், வைஷாலி, குல்கர்னி பாக்தி ஆகியோர் உள்ளனர்.

    இந்திய 'பி' மற்றும் 'சி' அணிகள் தலா 13 புள்ளிகள் பெற்று 7 அணிகளுடன் 10-வது இடத்தை பகிர்ந்து உள்ளன. 10-வது சுற்றில் இந்திய 'சி' அணி சுவீடனுடன் மோதுகிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் கடைசி சுற்று நாளை நடக்கிறது. காலை 10 மணிக்கு கடைசி சுற்று தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    • 66-வது காய் நகர்த்தலில் அஜர்பைஜான் வீரரை வீழ்த்தினார்.
    • கிராண்ட் மாஸ்டரானார் தமிழக இளம் செஸ் வீரர் வி.பிரணவ்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியது. நேற்று நடைபெற்ற 9-வது சுற்று ஆட்ட ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் வீரர் துரார்பெய்லி வாசிப்புடன் மோதினார். பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலின் முடிவில் வாசிப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார். 


    இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் வி.பிரணவ். ருமேனியாவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றதும் மூலம் கிராண்ட்மாஸ்டர் தரநிலையை வெற்றிகரமாக அடைந்துள்ளார். இதையடுத்து அவர் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டரானார். தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய 27-வது வீரர் பிரணவ் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி, முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை வென்றது.
    • இந்திய அணியின் இளம் வீரர் குகேஷ் 8வது சுற்றிலும் வெற்றி பெற்று அசத்தினார்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ஓபன் பிரிவில் இந்திய பி அணி, நேற்று நடந்த 7வது சுற்று ஆட்டத்தில் கியூபா அணியை வென்றது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி, முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய பி அணி, 3-1 என வெற்றி பெற்று அசத்தியது. இந்திய அணியின் இளம் வீரர் குகேஷ் பேபியானோ கரானாவை வீழ்த்தினார். இதன்மூலம் குகேஷ் 8 சுற்றுகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ரவுனக் சத்வானி, லீனியர் டொமிங்குவேசை வென்றார். 

    • நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்திய ஏ அணி விளையாட உள்ளது.
    • இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    இன்று நடந்த 6வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'சி' அணியை இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன்பின்னர் 7வது சுற்றில் அசர்பைஜான் அணியுடன் விளையாடியது. இப்போட்டியிலும் இந்திய ஏ அணி வெற்றி வாகை சூடியது.

    இந்தியா ஏ அணியின் முக்கிய வீராங்கனையான ஹம்பி கோனேரு தோல்வியடைந்தார். ஆனால், வைஷாலி மற்றும் டானியா சச்தேவ் ஆகியோர் வெற்றி பெற்றதால், 2.5-1.5 என்ற கணக்கில் அணி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்து உக்ரைன், அர்மீனியா, ஜார்ஜியா தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது.

    இதேபோல் இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இது இந்திய பி அணிக்கு 6வது வெற்றியாகும்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி 11 சுற்றுகளாக சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது.
    • இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி வெற்றி பெற்றுள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    இந்திய 'பி' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து அசத்தி வருகிறார். 6 சுற்றுகளில் விளையாடிய அவர், 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றார். இன்று நடந்த 7வது போட்டியிலும் வெற்றி வாகை சூடினார். இன்றைய போட்டியில், கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை 46 வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

    • ஓபன் பிரிவில் இன்று இந்திய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
    • இந்திய ‘பி’ அணி, கியூபாவுடன் மோதுகிறது.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 187 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் விளையாடி வருகிறார்கள்.

    ஓபன் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 11 சுற்றுகளாக நடந்து வரும் இப்போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் நடந்துள்ளது. நேற்று ஓய்வு நாளாகும். இன்று 7-வது சுற்று போட்டி நடக்கிறது.

    ஓபன் பிரிவில் இன்று இந்திய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. ஹரி கிருஷ்ணா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகாசி, நாராயணன், சசிகரண் ஆகியோர் அடங்கிய இந்திய 'ஏ' அணி, சூர்யசேகர் கங்குலி, சேது ராமன், அபிஜித் குப்தா, முரளி கார்த்திகேயன், அபி மன்பு புரானிக் ஆகியோரை கொண்ட இந்திய 'சி' அணியுடன் மோதுகிறது.

    இந்த சீசனில் இந்திய வீரர்கள் முதல் முறையாக நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்திய 'பி' அணி, கியூபாவுடன் மோதுகிறது. இந்த அணியில் டி.குகேஷ், சரின் நிஹல், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானிரானக் ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ஓபன் பிரிவில் இந்தியாவின் மூன்று அணிகளும் 10 புள்ளிகளுடன் உள்ளன.

    பெண்கள் பிரிவில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்திய 'ஏ' அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    இந்திய 'ஏ' அணி 7-வது சுற்றில் அஜர்பைஜானுடன் மோதுகிறது. அஜர்பைஜான் அணி 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. முதல் 6 சுற்றுகளில் அசத்திய இந்திய 'ஏ' அணி 7-வது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது.

    வந்திகா, பத்மினி, சவுமியா திவ்யா, கோமஸ் மேரி அன் ஆகியோரை கொண்ட இந்திய 'பி' அணி இன்று கிரீஸ் அணியுடன் மோதுகிறது. இந்திய 'சி' அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த அணியில் நந்திதா, வர்ஷினி, ஈஷா கரவாடே, பிரத்யுஷா, விஷ்வா, வஸ்னவாலா ஆகியோர் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் இந்திய பி மற்றும் சி அணிகள் தலா 9 புள்ளிகளுடன் முறையே 15 மற்றும் 19-வது இடத்தில் உள்ளன.

    ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி தனது முதல் 5 சுற்றுகளில் வென்றது. 6-வது சுற்றில் அர்மேனியாவிடம் தோற்றது.

    அந்த அணியில் இடம் பெற்றுள்ள குகேஷ் தான் மோதிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

    • அமெரிக்கா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
    • இந்திய ‘பி’ அணி 15-வது இடத்திலும், இந்திய ‘சி’ அணி 19-வது இடத்திலும் இருக்கின்றன.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 186 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    நேற்று 6-வது சுற்று ஆட்டம் நடந்தது. ஓபன் பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய 'பி' அணிக்கு நேற்று சறுக்கல் ஏற்பட்டது. 1.5-2.5 என்ற கணக்கில் பலம் வாய்ந்த அர்மெனியாவிடம் தோற்றது. இந்த தொடரில் முதல் தோல்வியை தழுவியது.

    இந்த சுற்றில் சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் மட்டுமே வெற்றி பெற்றார். அவர் தொடர்ந்து 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளார். பி.அதிபன், சத்வானி தோல்வியை தழுவினார்கள். சரீன் நிஹால் 'டிரா' செய்தார்.

    இந்திய 'ஏ' அணி உஸ்பெகிஸ்தானுடன் 2-2 என்ற கணக்கில் 'டிரா' செய்தது. இந்திய 'சி' அணி 3.5.-1.5 என்ற கணக்கில் லிதுவேனியாவை வீழ்த்தியது.

    6 சுற்றுகள் முடிவில் அர்மெனியா 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருந்து வந்த இந்திய 'பி' அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு பின் தங்கியது.

    உஸ்பெகிஸ்தான், பிரான்ஸ், இந்தியா 'ஏ', நெதர்லாந்து, கியூபா, இந்தியா 'சி', ஜெர்மனி, கஜகஸ்தான், செர்பியா, பெரு அணிகளும் 10 புள்ளிகளை பெற்று உள்ளது. 'டை' பிரேக்கர் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 4 முதல் 13-வது இடங்களில் உள்ளன. அதாவது இந்தியா 'ஏ' அணி 6-வது இடத்திலும், இந்தியா 'சி' அணி 9-வது இடத்திலும் உள்ளன.

    அமெரிக்கா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தியது. சென்னையை சேர்ந்த வைஷாலி, கோனேரு ஹம்பி ஆகியோர் வெற்றி பெற்றனர். ஹரிகா, தானியா சச்தேவ் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது.

    இந்திய 'பி' அணி 2-2 என்ற கணக்கில் செக்குடிய ரசுடன் 'டிரா' செய்தது. இந்திய 'சி' அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் 6 ரவுண்டுகள் முடிவில் இந்திய 'ஏ' அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. அசர்பெய் ஜான், ருமேனியா தலா 11 புள்ளிகளுடன் முறையே 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

    போலந்து, உக்ரைன், அர்மெனியா, பல்கேரியா, இஸ்ரேல், ஜார்ஜியா, வியட்னாம், நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 4 முதல் 11-வது இடங்களில் உள்ளன.

    இந்திய 'பி' அணி 15-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 19-வது இடத்திலும் இருக்கின்றன.

    இன்று ஓய்வு நாளாகும். இன்னும் 5 சுற்றுகள் எஞ்சியுள்ளன. 7-வது சுற்று நாளை நடக்கிறது.

    • ஓபன் பிரிவில் 5 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி அர்மெனியாவுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளது.
    • நாளை ஓய்வு நாளாகும். 7-வது சுற்று ஆட்டம் 5-ந்தேதி நடக்கிறது.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய 'பி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஸ்பெயினை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது. டி.குகேஷ், பி.அதிபன் ஆகியோர் வெற்றி பெற்றனர். நிகல் 'டிரா' செய்தார். பிரக்ஞானந்தா அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இந்திய 'ஏ' அணி 2.5-2.5 என்ற கணக்கில் ருமேனியாவுடன் 'டிரா' செய்தது. இந்திய 'சி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் சிலியை வீழ்த்தியது.

    ஓபன் பிரிவில் 5 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி அர்மெனியாவுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் டை பிரேக்கரில் இந்திய 'பி' அணி தான் முன்னிலையில் இருக்கிறது. இந்தியா 'ஏ' அணி 9 புள்ளியுடன் 4-வது இடத்திலும், இந்திய 'பி' அணி 8 புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

    இன்று 6-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. இதில் இந்திய 'பி' அணி அர்மெனியாவை எதிர் கொள்கிறது. முன்னிலையில் உள்ள இரு அணிகளும் மோதுவதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய 'ஏ' அணி உஸ்பெகிஸ்தானையும், இந்திய 'சி' அணி லிதுவேனியாவையும் எதிர்த்து விளையாடுகிறது.

    பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 2.5-1.5 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்தது. இந்திய 'பி' அணி 1-3 என்ற கணக்கில் ஜார்ஜாவிடம் தோற்றது.

    இந்திய 'சி' அணி பிரேசிலுடன் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி, ஜார்வியா, ருமேனியா ஆகிய 3 அணிகள் தலா 10 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளன. இந்திய 'பி' அணி 8 புள்ளியுடன் 18-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 7 புள்ளியுடன் 29-வது இடத்திலும் உள்ளன.

    இன்றைய 6-வது சுற்றில் இந்திய 'ஏ' அணி ஜார்ஜியாவுடனும், இந்திய 'பி' அணி செக்குடியரசுடனும், இந்திய 'சி' அணி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகின்றன.

    நாளை ஓய்வு நாளாகும். 7-வது சுற்று ஆட்டம் 5-ந்தேதி நடக்கிறது.

    • 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.
    • செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    ஏற்கனவே, 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.

    இதில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார். பிரேசில் வீராங்கனையை எதிர்கொண்டபோது 32வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றார். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் இந்திய வீரர் அபிமன்யு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், 5-வது சுற்று ஆட்டடத்தில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்துள்ளார். ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவுடன் மோதி பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.

    • 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.
    • செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    ஏற்கனவே, 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார். பிரேசில் வீராங்கனையை எதிர்கொண்டபோது 32வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார்.

    தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் இந்திய வீரர் அபிமன்யு வெற்றி பெற்றுள்ளார்.

    • எங்கள் நாட்டில் தற்போது மோசமான நிலை இருந்தாலும் செஸ் மீதுள்ள ஈடுபாட்டால் விளையாட வந்துள்ளேன்.
    • தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை செஸ்சின் மெக்கா என அழைக்கப்படுகிறது.


    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இலங்கை வீராங்கனை சச்சினி கூறியதாவது:-

    எங்கள் நாட்டில் தற்போது மோசமான நிலை இருந்தாலும் செஸ் மீதுள்ள ஈடுபாட்டால் விளையாட வந்துள்ளேன். நிதி வசதி இல்லாமல் நாங்களே நிதி திரட்டி செஸ் ஒலிம்பியாட்டுக்காக சென்னை வந்தோம். இங்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை செஸ்சின் மெக்கா என அழைக்கப்படுகிறது. இங்கு செஸ் ஒலிம்பியாட் நடப்பது பொருத்தமானது. நாங்கள் முடிந்தவரை வெற்றி பெற போராடுவோம் என்றார்.

    ×