search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cesarean"

    சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். இதற்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
    ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என்று சொல்வார்கள். அத்தகைய பெரும்பேறு பெற்றது தாய்மை. தாய்மார்களுக்கு குழந்தையின் வருகை ஒரு அற்புதமான நிகழ்வாகும். அதே சமயம் கடினமானதாகவும் மற்றும் நிறைய பொறுப்புகளும் இருக்கும். தூக்கத்திக்கு நேரம் இருக்காது, உணர்ச்சிகளின் ஏற்ற தாழ்வு அதிகமாக இருக்கும். நீங்கள் அனுபவிப்பது சாதாரணமாக எல்ல தாய்மார்களுக்கும் ஏற்படுவதாகும்.

    ஆனால் சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். தாய்மார்களுக்கு பொதுவாகவே பேபி ப்ளூஸ் அனுபவம் இருக்கும். குழந்தை பிறந்தவுடன் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வினால் மனநிலை அலைபாயும். குழந்தை பிறந்து இரண்டு வாரங்களுக்கு மேல் மனநிலையில் சமநிலை இல்லை என்றால் அவர்கள் பிரசவத்துக்குப்பின் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

    பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கண்ணை பார்த்து பேச மாட்டார்கள். மற்றும் குறைவாகவே புன்னகைப்பார்கள். இந்த கோளாறு மிகவும் குறைவான அளவிலேயே கண்டறியப்படுகிறது. இதற்கான போதுமான விழிப்புணர்ச்சி நம்மிடையே இல்லை. பிரசவத்தின் பொழுது ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வு நிலை குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் சம நிலைக்கு வந்துவிடும். இதற்கான அறிகுறிகள் பிரசவ நேரத்தில் மற்றும் குழந்தை பிறந்த முதல் 12 மாதங்களில் தோன்றும்.

    காரணங்கள் :

    முந்தய பிரசவத்தின் பொழுது மன அழுத்தம்
    குடும்ப பாரம்பரிய மன அழுத்தம்
    கர்ப்பமாக இருக்கும் பொழுது அதிர்ச்சியான சம்பவம்
    பிரசவத்தின் பொழுது சிக்கல் அல்லது குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சினை
    பிரசவத்தை நினைத்து கலக்கம்
    வலுவான ஆதரவு இன்மை

    அறிகுறிகள் :

    குடும்பத்தாரையும் நண்பர்களையும் முற்றிலும் தவிர்த்தல். உங்களையும் குழந்தையையும் பாதுகாக்க முடியாமல் போகுதல், குழந்தையுடன் நெருக்கமாக உணராமல் இருப்பது மற்றும் பிணைப்பு இல்லாமல் இருப்பது, தீவிரமாக மனம் அலை பாய்வது, பதற்றம் மற்றும் பீதி அடைதல்.

    மிக குறைவாக அல்லது அதிகமாக தூங்குவது தினசரி செய்யும் வேலை களில் நாட்டம் இல்லாமல் இருத்தல், குழந்தையை காயப்படுத்துவது போன்ற எண்ணங்கள்.

    தற்கொலையை தூண்டி விடும் எண்ணங்கள், மிக அதிக கோபம் மற்றும் எரிச்சல், குற்ற உணர்வு மற்றும் அவமானம் காரணமே இல்லாமல் அடிக்கடி அழுவது, தன்னை தானே தனிமை படுத்திக்கொள்வது

    புள்ளிவிபரம் :


    குழந்தையை பராமரிக்காமல் இருப்பது, உதாரணமாக பால் புகட்டுவது, டயபர் மாற்றாமல் இருப்பது, உரிய நேரத்தில் சொட்டு மருந்து கொடுக்காமல் இருத்தல், இந்த குழந்தை என்னுடையது இல்லை, போன்ற எண்ணங்கள்.

    7 தாய்மார்களில் ஒருவருக்கு பிரசவத்துக்கு பின் மன அழுத்தம் உள்ளது.

    50 சதவீதம் தாய்மார்களுக்கு இந்த கோளாறு இருக்கிறது என்று தெரியாது.

    20 சதவீதம் தாய்மார்களின் தற்கொலைகள் (இந்த கோளாறினால் பாதிக்கபட்டவர்கள்), தாய்மார்களின் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது.
    10 சதவீதம் தந்தைகள் குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

    முதல் பிரசவத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் இரண்டாம் பிரசவத்தின் பொழுது 50 சதவீதம் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. 49 சதவீதம் தாய்மார்கள் தங்கள் மனஅழுத்தத்துக்கான சிகிச்சை எடுத்து கொள்ள மாட்டார்கள்.

    மகப்பேற்று சுகாதார நிலையை தற்காத்து கொள்ள சில வழிமுறைகள் :

    ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும் மற்றும் , போதுமான தண்ணீர் பருகவும்.

    குழந்தை தூங்கும் பொழுது தூங்குதல், மிதமான நடைப்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி, உங்கள் கணவருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,
    தன்னைத்தானே தனிமை படுத்திக்கொள்ளாமல் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்பில் இருங்கள்.

    உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மன அழுத்தத்தை பற்றி மனம் விட்டு பேசுங்கள். வெளியே இயற்கை சூழலில் சிறிது நேரத்தை செலவிடுங்கள் உங்களை நீங்கள் முதலில் பராமரித்து கொள்வது அவசியம்

    சிகிச்சை

    பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம் மூன்று மாதத்திற்குள் சரி ஆகிவிடும், ஆனால் அன்றாட வாழ்க்கையில் சாதாரண செயல்பாடுகளில் இந்த பிரச்சினை தலையிடும் பொழுது, உடனே மன நல மருத்துவரை அணுகி இதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. கவுன்சிலிங் மற்றும் சைகோதெரபி மூலமாக குணப்படுத்த முடியும். மன அழுத்தம் தீவிரமாக இருந்தால் உங்கள் மன நல ஆலோசகர், மனநல மருத்துவரிடம் பரிந்துரைப்பார். பிரசவத்திற்கு பின் மன அழுத்தத்துக்கு ஆளான 90 சதவீதம் பேர் மருந்துகள் மூலமாக குணம் அடைந்து இருக்கிறார்கள்.

    பிரசவத்துக்கு பின் ஏற்படும் கோளாறு தாய்மார்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, சில தந்தைமார்களுக்கும் ஏற்படும்.

    1-ல் 20 தந்தைமார்கள் மற்றும் 1-ல் 7 தாய்மார்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்த அடுத்த நொடி ஒரு தாயும் பிறக்கிறாள், தாய்மையை போற்றுங் கள், குழந்தையை பெற்ற அனைத்து தாய்மார்களும் ஒரு உயிரை இந்த மண்ணில் அறிமுக படுத்தும் அதிசய பிறவி!!

    vcopevandhana@gmail.com
    கர்ப்ப காலத்தில் தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தால் குழந்தை தாய் ஆரோக்கியம் காக்கப்படும். நான்கு எளிதான மூச்சு பயிற்சிகளை பார்க்கலாம்.
    கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது முக்கியம். கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும். கர்ப்பிணிகள் தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தால் குழந்தை தாய் ஆரோக்கியம் காக்கப்படும். நான்கு எளிதான மூச்சு பயிற்சிகளை பார்க்கலாம்.

    விரிப்பில் கால்களை மடக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு தாடை, தோள்கள், இடுப்பை ரிலாக்ஸ் செய்துவிட்டு ஒரு கையை வயிற்றில் வைத்துவிட்டு மறுகையை அதன்மேல் வைத்துக்கொள்ளுங்கள். பின் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து விடுங்கள். அந்த நிலையில் வயிறு முழுவதும் மூச்சு பரவும் வகையில் 1 முதல் 8 வரை எண்ணுங்கள். பின்னர் மெதுவாக மூச்சை வெளியில் எடுத்துவிடுங்கள். இதை மீண்டும் மீண்டும் செய்யவும். இந்த பயிற்சியை தினமும் பத்து நிமிடங்களுக்கு செய்யவும்.

    பாதங்களை இணைத்து வைத்துக்கொண்டு நேராக நிற்கவும். வாயை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக இழுத்து 10 வரை எண்ணவும். அப்போது கைகளை அழுத்தம் கொடுக்காமல் மார்பில் வைத்துக்கொள்ளுங்கள் நுரையீரல் விரிவடைவதை உணரமுடியும். சில நொடிகள் மூச்சை இழுத்து கொண்டிருந்துவிட்டு மெதுவாக மூசை வெளியே விட்டு 10 வரை எண்ணவும். இதே போல் இந்தப் பயிற்சியை 10 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 7வது மாதத்திற்கு பின் இப்பயிற்சியை செய்வது சிரமமாக இருந்தாலுமு் முடிந்த வரை செய்வது நல்லது.

    மல்லாக்க கீழே படுத்துக்கொண்டு வாயை நன்றாக திறந்து மூச்சை வேகமாக இழுத்து விழுங்க வேண்டும். இதை தொடர்ந்து 5நிமிடங்கள் செய்தால் நுரையீரலுக்கு நல்லது. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆக்ஸிஜன் சீராக கிடைக்கும்.

    உடலை ரீலாக்ஸ் செய்துவிட்டு மூச்சை நன்றாக இழுத்து நிறுத்தவும். ஒரிரு நொடிகள் கழித்து அதேபோல் உட்கொண்ட காற்றை மெதுவாக வெளியேற்றவும். பின் வாயை திறந்து காற்றை இழுத்து விழுங்கி 5 வரை எண்ணவும்.

    பின் வாயை மூடிக்கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து விடவேண்டும். ஒரே நேரத்தில் 5முறை இந்த பயிற்சியைச் செய்யலாம். இந்த பயிற்சியை நின்று கொண்டே செய்யலாம் அல்லது வசதியாக அமர்ந்துகொண்டும் செய்யலாம். 
    பெண்கள் வயதுக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர்களின் கர்ப்பப்பை கர்ப்பம் தரிப்பதற்குத் தயாராகிறது. கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
    முட்டை கருவுறுவதுதான் கர்ப்பப்பையின் முக்கியமான தருணம். கருவுற்ற முட்டை, கர்ப்பப்பையை அடையும்போது முட்டையின் மஞ்சள்பகுதி தீர்ந்துவிடுகிறது. உணர்விகளைப் பயன்படுத்தி முட்டை, கர்ப்பப்பை உள்ளடுக்கில் (எண்டோமெட்ரியம்) ஒட்டிக்கொள்கிறது.

    கர்ப்பத்தின்போது எண்டோமெட்ரிய அடுக்கை `புரொஜெஸ்டிரான்’ பராமரிக்கிறது, சுருக்கங்களைக் குறைத்து, வழக்கத்துக்கு முன்னதாகப் பிரசவ வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வளர்ச்சியையும், பால் சுரப்பையும் தூண்டுகிறது. ஏழாவது மாதத்தின்போதே 96 சதவீத சிசுக்கள் பிரசவத்துக்கு ஏதுவாக தலைகீழான நிலையை எட்டிவிடுகின்றன.

    ஒன்பதாவது மாதத்தில், தொப்புள்கொடி ஓர் ஒரு கிலோ அமைப்பாக வளர்ந்து, சிசுவின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான அமைப்பாகச் செயல்படுகிறது. அதன் சவ்வு வடிகட்டும் அமைப்பு, தாயின் ரத்தத்தையும், குழந்தையின் ரத்தத்தையும் பிரிக்கிறது. நச்சுக்கொடி, சிசுவின் கழிவுகளை வெளியேற்றுகிறது.

    கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் இவை…

    டிஸ்மெனோரியா - மாதவிலக்குப் பிடிப்பு

    பைப்ராய்ட்ஸ் - கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.

    கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் - பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.

    எண்டோமெட்ரியோசிஸ் - கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.

    புரோலாப்ஸ்?- பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.

    எக்டோபிக் கருவுறுதல் - கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக்குழாய் களில் கரு வளர்வது.

    ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது) - கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ், புரோலாப்ஸ், தொடர்ச்சியான ரத்தப்போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.

    கர்ப்பப்பை புற்றுநோய் - மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே

    கண்டுபிடித்துவிட்டால் 90 சதவீதம் குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற

    ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியாகும்.

    பிற அபாய காரணிகள்:

    * கர்ப்பப்பை உள்ளடுக்கின் அசாதாரண வளர்ச்சி

    * குண்டாகுதல்

    * `ஈஸ்ட்ரோஜன் ஒன்லி ஹார்மோன் தெரபி’யை பயன்படுத்துவது

    * மார்பகப் புற்றுநோய் மருந்தான `டாமோக்சிபென்’னை பயன்படுத்துவது

    * இடுப்புப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை

    * குடும்ப பாரம்பரியம்

    * குழந்தை இல்லாத பெண்களுக்கும், 12 வயதுக்கு முன் வயதுக்கு வந்தவர்களுக்கும், 55 வயது தாண்டியவர்களுக்கும் அதிக அபாயம் உண்டு.
    கர்ப்ப காலத்தில் சாதாரண காய்ச்சலைத் தாண்டி, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
    கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வருவது இயல்பானது. ஆனால், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பத்தின் காரணமாக இவற்றின் விளைவுகள் கடுமையாகிவிடும் என்பதால் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது. சாதாரண காய்ச்சல் ஏற்படும்போது கர்ப்பிணிக்கோ, கருவில் வளரும் சிசுவுக்கோ அவ்வளவாக ஆபத்து ஏற்படுவதில்லை. அப்படியே ஆபத்து இருந்தாலும் இன்றைய நவீன சிகிச்சைகளால் அதை எளிதில் எதிர்கொள்ள முடியும்.

    டெங்கு:

    டெங்கு(Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால் ஆபத்துகள் அதிகம். குறைப்பிரசவம் ஆகவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்புண்டு. கர்ப்பிணியிடமிருந்து சிசுவுக்குக் கிருமிகள் பரவி, பிறக்கும் போதே குழந்தைக்கு டெங்கு வரலாம். கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் கோர்த்துக் கொள்ளலாம். கல்லீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் குறைந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து வரலாம்.

    எனவே, தட்டணுக்கள் பரிசோதனை, ரத்த உறைவுக்கான பரிசோதனைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, இந்த விபரீத விளைவுகளைத் தடுப்பதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    பன்றிக்காய்ச்சல்:

    இன்ஃபுளுயன்சா A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் பன்றிக்காய்ச்சல் நோய் வருகிறது. கர்ப்பிணிகளை இது பாதித்தால், காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சிநோய், நிமோனியா, சுவாசத்தடை நோய்(ARDS), மூச்சுச்சிறுகுழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு வந்துவிடும். இது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். குறிப்பாக, கருச்சிதைவு ஏற்படலாம். குறைப்பிரசவம் நேரலாம். குழந்தை இறந்தும் பிறக்கலாம்.

    குழந்தைக்கு நரம்பு மண்டலத்தில் பிறவி ஊனங்கள் உண்டாகலாம். இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க, இந்த நோயுள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கர்ப்பிணிகள் முகத்தை மூடிக்கொள்வதற்கு முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடி அணிந்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.

    வீரியம் குறைக்கப்பட்ட மூவகை நுண்ணுயிரித் தடுப்பூசி(Trivalent inactivated vaccine – TIV) பன்றிக்காய்ச்சலைத் தடுக்கிறது. கர்ப்பம் ஆவதற்கு முன்பும் இதைப் போட்டுக் கொள்ளலாம்; கர்ப்பம் ஆன பிறகும் இதைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இது ஓராண்டுக்குத்தான் நோயைத் தடுக்கும். எனவே, வருடா வருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் எப்போதும் வராது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க ‘நேசல் ஸ்பிரே தடுப்பு மருந்து’ ஒன்று உள்ளது. இதை கர்ப்பிணிகள் பயன்படுத்தக் கூடாது.
    பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.

    ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன

    சிசேரியன் முறை பிரசவம் என்றால் என்ன?

    பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை வர முடியாமலிருக்கும் போதோ அல்லது அப்படி வருவது அபாயகரமானதாக இருக்கும் போதோ அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை வெளிக்கொண்டு வரப்படுகிறது. இதைத்தான் சிசேரியன் முறை பிரசவம் என்கிறார்கள்.

    பிரசவ வலி ஆரம்பிக்கும் போதோ அல்லது பிரசவ வலியின் போதோ சில பிரச்சினைகள் உருவானால், உடனடியாக சிசேரியன் செய்யப்படுகிறது. பொதுவாக பின்வரும் சூழல்களில் தான் சிசேரியன் செய்யப்படுகிறது.

    பிரசவத்தின்போது, குழந்தையின் கீழிருக்கும் பாகம் தலையாக இல்லாமல் குழந்தையின் பின்புறமாகவோ, முகமாகவோ, நெற்றியோ அல்லது தோளாகவோ இருந்தால் சிசேரியன் அவசியப்படும். பல பெண்களுக்கு பிரசவ வலியின் போது, செர்விக்ஸ் (கர்ப்பப்பையின் வாய்ப் பகுதி) விரிவடையத் தொடங்கும்.

    ஆனால், முழுவதும் விரிவதற்கு முன்பு விரிவடைவது நின்றுவிடும். இதற்காக ஆக்ஸிடாசின் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த மருந்து கொடுத்தும் சில பெண்களால் முழுமையாக செர்விக்ஸை விரிக்க இயலாது. அதனால், அவரால் பெண்ணுறுப்பு வழியே பிரசவிக்க முடியாது.

    வேறு சில பெண்களுக்கு செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும். ஆனால், முக்கி குழந்தையை பிறப்புக் குழாய் வழியே வெளியில் தள்ள இயலாது. பிறப்புக் குழாயை விட குழந்தை மிகப்பெரிதாக இருந்தால், இந்த நிலை உருவாகும்.

    பிரசவ வலியின்போது எந்த நேரத்திலும், பிரச்சினைகள் உருவாகி குழந்தையின் இதயத்துடிப்புகள் குறையத் தொடங்கலாம். குழந்தையால் நோர்மல் பிரசவத்தை இதற்கு மேல் தாங்க முடியாது என்பதற்கு இது அறிகுறி. அதனால், உடனடியாக சிசேரியன் செய்யப்படும்.

    சிசேரியனில் தாய்க்கு முழுமையான மயக்கத்துக்கு மருந்து கொடுக்கப்படுகிறது அல்லது குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப்போகவும் மருந்து கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படும்போது, அந்த இடம் மட்டும் மரத்துப்போய் வலி தெரியாது. ஆனால் தாய்க்கு நினைவிருக்கும்.

    பொதுவான மயக்கத்தில் தசைகள் இலகுவாகி தூக்கம் வந்துவிடும். வலி தெரியாது. நினைவும் இருக்காது. கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பதற்காக, தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றை வெட்டுவார் மருத்துவர். பிறகு குழந்தை, நஞ்சுக்கொடி, பிரசவப்பை எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வெட்டப்பட்ட கர்ப்பப்பையையும் அடிவயிற்றையும் தைத்து விடுவார்.
    பலமுறை சிசேரியன் செய்ய நேர்ந்தால் அது வாழ்நாள் முழுவதும் பெண்களை துன்புறுத்தும் தீவிர குறைபாடுகளை அவர் தம் உடலில் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
    பெண்கள் பிரசவ பயத்தால், குழந்தை பெற்றுக் கொள்வதை வெறுத்துவிட கூடாது, அவர்களின் அந்த வலியை எளிதாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டது தான் சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை பிரசவ முறை. இந்த பிரசவ முறை பெண்கள் பிரசவத்தின் பொழுது அனுபவிக்கும் வலியையும் வேதனையையும் குறைக்க கொண்டு வரப்பட்டது.

    இந்த காரணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசவ முறை பெண்களுக்கு பிரசவம் நிகழும் நொடியில் நன்மை செய்வது போல் செய்து, பின்னர் வாழ்நாள் முழுவதும் பெண்களை துன்புறுத்தும் தீவிர குறைபாடுகளை அவர்தம் உடலில் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு பிரசவத்தால் நிகழும் குறைபாடுகள் என்னென்ன என்று இங்கு படித்து அறியலாம்.

    ஒருமுறை சிசேரியன் பிரசவம் மேற்கொண்டாலே, அதனால் ஏற்பட்ட காயம் குணமாக பல காலம் ஆகும். அதாவது சிசேரியன் பிரசவத்தை பெண்கள் மேற்கொண்டால், அதனால் ஏற்பட்ட அறுவை சிகிச்சை காயங்கள் குணமாக 3 முதல் 6 மாத காலம் வரை ஆகும்; ஒரு சில பெண்களுக்கு அதற்கு மேலும் கூட ஆகலாம். மேலும் காயங்கள் ஆறவே இத்தனை மாதங்கள் ஆனால், அறுவை சிகிச்சையால் இழந்த உடலின் பலத்தை மீண்டும் பெற எத்தனை காலமாகும் என்று யோசித்து பாருங்கள்!

    சிசேரியன் அறுவை சிகிச்சையின் பொழுது பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு குழந்தை வெளியில் எடுக்கப்படுகிறது. வயிற்றை சுற்றிய பகுதிகளில் தான் சிறுநீரக உறுப்புகள், மலவாய் உறுப்புகள் மற்றும் பிற ஜீரண உறுப்புகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் திரும்ப திரும்ப பலமுறை சிசேரியன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது, அது சிறுநீரை சேமிக்கும் சிறுநீர் பையை கிழிக்கவோ அல்லது அதில் பாதிப்பு ஏற்படுத்தவோ அதிக வாய்ப்புகள் உள்ளன.

    ஒவ்வொரு முறை சிசேரியன் பிரசவம் நிகழும் பொழுதும் பெண்ணின் உடலில் உள்ள இரத்தம் சிறு சிறு கட்டிகளாக மாறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கட்டிகள் ஏற்படும் நிலை அறியாமல் மீண்டும் மீண்டும் சிசேரியன் செய்து கொண்டே இருந்தால், இந்த பிரசவத்தால் உருவாகும் இரத்தக்கட்டிகள் பெரிதாகி இரத்த பிரவாகத்தில் பயணித்து நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது; இதனை பால்மனரி இன்பெக்ஷன் என்று கூறுகின்றனர்.



    ஒவ்வொரு முறை சிசேரியன் பிரசவம் நிகழும் பொழுது நஞ்சுக்கொடி கீழே செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், நஞ்சுக்கொடி கருப்பையின் உள்ளாக - கருப்பையின் உட்சுவருடன் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. நஞ்சுக்கொடியின் இந்த மாற்றம் பெண்களின் உடலில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    சிசேரியன் பிரசவத்தின் பொழுது பெண்ணின் வயிற்றினை அறுத்து தான் உள்ளே வளர்ந்து வந்த குழந்தையை வெளி உலகிற்கு கொண்டு வருகின்றனர் மருத்துவர்கள்; அந்த சமயத்தில் பெண்ணின் வயிறு அறுக்கப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படும் பொழுது, அது அதிகமான இரத்தப்போக்கை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது; இந்த பிரச்சனை, எந்த ஒரு பெண் தொடர்ந்து சிசேரியன் பிரசவம் செய்து கொள்வாரானால் கண்டிப்பாக அவருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    தொடர்ந்த சிசேரியன் பிரசவங்களை ஒரு பெண் மேற்கொள்ளும் பொழுது பெண்ணிற்கு உடல் பாதிப்புகள் ஏற்படுவதோடு, அவர்களின் உள் வளரும் குழந்தைகளுக்கும் உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சிசேரியன் நடந்து முடிந்த பின் பெண்ணின் உடலில் பலவித உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன; இந்த பாதிப்புகள் அடுத்து அவர்தம் உள்ளே உருவாகப்போகும் குழந்தையை, குழந்தையின் வளர்ச்சியை ஏன் குழந்தை உருவாவதையே கூட தடுத்துவிட வாய்ப்பு உண்டு.

    மேலும் தொடர்ந்த சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்வதால், குழந்தை பிறப்பு நிகழும் பொழுது குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பெண்ணின் வயிறு அறுக்கப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படுவதால், பெண்ணின் உடல் பலவீனம் அடைந்து இருக்கும். பலவீனம் கொண்ட உடல் தான் நோய்கிருமிகள் வாழும். எனவே, சிசேரியன் அறுவை சிகிச்சை நடந்த பெண்களின் உடலில் நோய்த்தொற்றுகளின் தாக்குதல் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை கண்டிப்பாக பெண்ணின் உடலை நோய்கிருமிகள் அடங்கிய நோயாளி உடலாக மாற்றும் வாய்ப்பு உண்டு.!
    இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது. ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

    கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்சனை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்சனை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாதது… அவசியமானதும்கூட!

    சிலருக்கு பிரசவ தேதி கடந்தும், வலி ஏற்படாமல் போகும். இது ஏதோ இன்று பெருகியுள்ள புதுப்பிரச்சனை அல்ல. சென்ற தலைமுறையிலும் இருந்தது. ஆனால், வலியை உண்டாக்கும் ஊசி, ஜெல் என்று அதற்கான வலி ஊக்கிகளின் பயன்பாடு அரிதாக இருந்தது. இன்று அது அதிகரித்திருக்கிறது. இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    இக்கட்டான சூழலில் வலி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல், வலிக்காகக் காத்திருந்தால் தண்ணீரின் அளவு குறையும், குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே சுவாசிக்க ஆரம்பித்துவிடும், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மோஷன் போக வாய்ப்பிருக்கிறது.

    இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கும் பட்சத்தில், ஆபரேஷன் அவசியம் ஆகிறது. பொதுவாக வலி ஊக்கிகள் பயன்படுத்தினாலும், நார்மல் டெலிவரிக்கும் தயாராகவே இருப்போம். சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே ஆபரேஷன் செய்வோம்.’’

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆனால், அதன்பின் ஏற்படும் வலிகள் அதிகம். சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    சுகப்பிரசவத்தில் மூன்று முதல் ஐந்து நாள்களிலே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம். சிசேரியனில் குறைந்தது ஐந்து மாதமாவது ஓய்வு எடுக்கவேண்டும். கடினமான வீட்டு வேலைகள் செய்யக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டிய செயல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    சிசேரியன் என்பது பெண்களின் உடலில் ஒரு பகுதியைக் கிழித்து, குழந்தையை வெளியே எடுக்கும் முறை. சிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆனால், அதன்பின் ஏற்படும் வலிகள் அதிகம்.

    ஆபரேசன் செய்து தையல் போட்ட இடத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறைந்தது ஆறு வாரத்துக்குக் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது, கீழே அடிக்கடி உட்கார்ந்து எழுவது. அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். இயல்பு வாழ்க்கை வேலைகளுக்குக் குறைந்தது 6 வாரத்துக்கு ஓய்வு கொடுத்துப் பின்னர் தொடங்கலாம்.



    நிறைய பெண்களுக்குக் குழந்தைப் பேற்றுக்குப் பிறகு தங்கள் அழகு மற்றும் ஆரோக்கியத்தில் ஈடுபாடு போய்விடுகிறது. அதனால், எடை அதிகரிப்பு ஏற்படும். இதனைத் தடுக்க, சிசேரியனுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனையுடன் அடிவயிற்றுப் பகுதி தசைகளுக்கான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். முதல் மூன்று மாதத்துக்கு நடைப்பயிற்சிகள் மட்டும் போதுமானது. அதன்பின் எளிமையான யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். சிசேரியனுக்குப் பிறகு வயிற்றின் சதையைக் குறைக்க டம்மி பெல்ட் அணிவது அவசியம். மேலும், பிரசவ காலத்தில் ஏற்பட்ட தழும்புகள் மறைய ஆன்ட்டி-ஸ்ட்ரெச் மார்க் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.

    சிசேரியன் செய்தபின் பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு மூன்று மாதங்கள் தேவை. இந்தச் சமயத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால், காயம் அதிகமாவதுடன், கர்ப்பப்பை பிரச்னைகளும் வரலாம். இன்ஃபெக்ஷன், அலர்ஜியம் உண்டாகலாம். எனவே, மூன்று மாதங்களுக்குத் தாம்பத்தியத்தைத் தவிர்ப்பது நல்லது. சில பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் வரை மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. இதுபோன்ற சூழலில் அடுத்த குழந்தை கருவுறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதால், முதலிலே மருத்துவரின் ஆலோசனை பெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லது.

    பெரும்பாலான பெண்கள் இன்று இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். சிசேரியனுக்குப் பிறகு எத்தனை மாதங்கள் டூவீலர் ஓட்டக் கூடாது என்பது பெண்களின் கேள்வியாக உள்ளது. சிசேரியன் முடிந்த 6 மாதத்துக்குப் பிறகு தாராளமாக வண்டி ஓட்டிச்செல்லலாம். அதேசமயம், பொறுமையும் கவனமும் முக்கியம். வண்டி ஓட்டும்போது ஏற்படும் எதிர்பாராத அதிர்வுகள் கர்ப்பப்பையில் காயங்களை ஏற்படுத்தலாம். எனவே, லேசான வலியை உணர்ந்தாலே மருத்துவரை அணுகுவது அவசியம்.

    ×