search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bribe"

    • மாடு திருட்டு வழக்கை விசாரிக்க சப்-இன்ஸ்பெக்டர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • அதிகாரிகளில் ஒருவர் பணத்தை மீட்க சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் விரல்களை வைத்து அழுத்தியும் முடியவில்லை.

    பரிதாபாத்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில், மாடு திருட்டு வழக்கில் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். ஆனால், அடுத்து நடந்த சம்பவம் விசாரணை அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தது.

    பரிதாபாத்தைச் சேர்ந்த ஷுப்நாத் என்பவரின் எருமை மாட்டை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். மாட்டை கண்டுபிடிக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என அவரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கூறியிருக்கிறார். முதலில் 6000 ரூபாய் கொடுத்த ஷுப்நாத், மீதமுள்ள தொகையை கொடுப்பதற்கு முன்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார்.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக ஷுப்நாத்தை அனுப்பி பணத்தை கொடுக்க செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பணத்தை வாங்கும்போது சுற்றி வளைத்து பிடித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சப்-இன்ஸ்பெக்டர், லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்தார். வாயில் இருந்த அந்த பணத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இறுதியில் அவரை காரில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து பணத்தை கைப்பற்ற முயற்சிப்பதும், சப்-இன்ஸ்பெக்டர் அவசரம் அவசரமாக பணத்தை விழுங்குவதும் பதிவாகி உள்ளது. பணத்தை மீட்க அதிகாரிகள் போராடுகின்றனர். அதிகாரிகளில் ஒருவர் பணத்தை மீட்க சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் விரல்களை வைக்கிறார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டரோ வாயை திறக்காமல் பணத்தை அப்படியே விழுங்குகிறார். இந்த போராட்டத்தில் தலையிட்ட மற்றொரு நபரை அதிகாரிகள் தடுத்து வெளியே தள்ளிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பல்லடம் : 

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் பசும்பொன் தேவி (வயது 56). இவரை பருவாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அணுகினார். அவர் தனது பெண் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பித்தார்.

    அப்போது பசும்பொன் தேவி ரூ.3ஆயிரம் கொடுத்தால் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார். மீதி ரூ.1500 பணத்தை தருவதாக கூறியுள்ளார்.

    இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது பற்றி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து, செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1500 பணத்தை கொடுத்து அனுப்பினர்.

    அவர் பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார் .அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கினாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார்.
    • மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் பசும்பொன் தேவி (வயது 56). இவரை பருவாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அணுகினார். அவர் தனது பெண் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பித்தார்.

    அப்போது பசும்பொன் தேவி ரூ.3ஆயிரம் கொடுத்தால் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார். மீதி ரூ.1500 பணத்தை தருவதாக கூறியுள்ளார்.

    இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது பற்றி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து, செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1500 பணத்தை கொடுத்து அனுப்பினர்.

    அவர் பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கினாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5,000 லஞ்சமாக பெற்றார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முருகேசன். தற்போது இவர் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த 2009-ல் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் முருகேசன் இன்ஸ்பெக்டராக இருந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண் தான் வேலை செய்த அரிசி ஆலை உரிமையாளர் செல்லையா என்பவர் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5,000 லஞ்சமாக பெற்றார். அப்போது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு கூறினார். ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 7-ன் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், பிரிவு 13 டி பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் பரபரப்பு தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகினார். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம், வேலுச்சாமி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.
    • சுங்கச்சாவடி பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 43). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சந்திரசேகர் (43) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 6-ந்தேதி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

    இதுகுறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் கொடுத்த புகாரின்படி சந்திரசேகரன், அவரது மனைவி பர்வதம், தாயார் சரஸ்வதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த பரமத்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் (55) இந்த வழக்கில் சந்திரசேகர், மனைவி பர்வதம் ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சந்திரசேகரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து பர்வதம் ஈரோட்டை சேர்ந்த தனது சகோதரர் வேலுச்சாமியை வைத்து பேரம் பேசியதில் ரூ.5 ஆயிரம் பெற சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலுச்சாமி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம், வேலுச்சாமி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது சுங்கச்சாவடி பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை கைது செய்தனர்.

    அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • தொகையை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
    • உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது காதல் ஜோடியை சேர்த்து வைக்க பணம் பெற்றதும், பங்கு போடுவதில் தகராறு செய்ததும் உறுதியானது.

    சேலம்:

    சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக மேனகாவும், சிறப்பு எஸ்.ஐ.யாக சுமதி, ஏட்டாக அம்சவள்ளி உள்பட பலர் பணியாற்றி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. போலீஸ் நிலையத்தில் அவர்களது பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய 3 பேரும் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

    இதற்கு லஞ்சமாக ரூ.20 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த தொகையை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதமாக மாறியது. இதனால் போலீஸ் நிலையத்திலேயே காரசாரமாக மோதி கொண்டனர். இந்த தகவல் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சென்றது.

    இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது காதல் ஜோடியை சேர்த்து வைக்க பணம் பெற்றதும், பங்கு போடுவதில் தகராறு செய்ததும் உறுதியானது.

    இதையடுத்து 3 பேரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறை ரீதியதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை
    • தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி, அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது பழுதடைந்து உள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து பழு தடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    ஆனால் டிரான்பார்மரை மாற்றி அமைக்க அதிகாரி ஒருவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ரூ.14 ஆயிரத்தை சில்லரை காசுகளாக சேகரித்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஒத்தவாடை தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் சில்லரை காசுகளுடன் மற்றொரு தட்டில் பூ, பழம் உள்ளிட்ட தாம்பூலத்துடன் மேளதாளத்துடன் வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மின்வாரிய அலுவலகத்தின் நுழைவு வாயில் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மேஜை என இரண்டு இடங்களில் கொண்டு வந்த சில்லரை காசு மற்றும் தாம்பூலத்தட்டை வைத்தனர். இதனை பார்த்து அலுவலகத்தில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து வாக்குவாதம் செய்தனர்.

    பின்னர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க வினர் டிரான்ஸ்பர் மாற்ற முதல் தவணையாக ரூ.14 ஆயிரம் கொடுத்து உள்ளோம், இனியாவது வந்து டிரான்ஸ்பார்மரை மாற்றுங்கள் எனக்கூறி விட்டு அங்கிருந்த மேஜையில் சில்லரை காசை வைத்து சென்றுவிட்டனர். இதனால் அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் விழித்தனர்.

    பழுதடைந்த டிரான்ஸ்பர்மரை மாற்ற அதிகாரிகள் லஞ்சம் கேட்டனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேசன் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் என்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேசன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர் ஆகிய பகுதிகள் தமிழக கர்நாடக எல்லை பகுதியில் அமைந்து உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து சிலர் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அருகில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

    போலீஸ் சோதனையை மீறியும் ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோவில் ஒரு கும்பல் ரேசன் அரிசியை கடத்தியது. இந்த ஆட்டோவை ஆசனூர் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேசன் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் என்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேசன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    இதை ரேசன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானது. போலீசார் மத்தியில் இது பரபரப்பாக பேசப்பட்டது.

    இது பற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ரேசன் அரிசி கடத்தல் கும்பலிடம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்டது உறுதியானது. இது குறித்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கையாக கொடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஆசனூர் தனிப்பிரிவு ஏட்டு ஜெகநாதனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சின்னசேலம் அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கைது செய்யப்பட்டார். இவருடன் கிராம நிர்வாக உதவியாளரும் சிக்கினார்.
    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் வடக்கு காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெயராமன் (வயது 36). விவசாயி. இவரது சகோதரர்கள் ஏழுமலை, நல்லதம்பி. இவர்கள் 3 பேரும் தங்களது பெயரில் உள்ள நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையவழி மூலம் விண்ணப்பித்து, அதற்கான ரசீதையும் பெற்றனர். இதனை தொடர்ந்து அந்த ரசீதை நைனார்பாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து, பட்டா மாற்றம் செய்வதற்காக வழிமுறைகள் குறித்து கேட்டனர். அதற்கு அவர், பட்டா மாற்றம் செய்ய நில அளவையர் நேரில் வந்து அளக்க வேண்டும் என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நைனார்பாளையம் குறுவட்ட நில அளவையராக பணிபுரியும் சேலம் மாவட்டம் ஆறகலூரை சேர்ந்த சூர்யா(29) என்பவரை ஜெயராமன் அணுகினார். அதற்கு நில அளவையர் சூர்யா, பட்டா பெயர் மாற்றம் செய்ய தலா ரூ.8 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் தர வேண்டும். இதற்காக 24-ந் தேதி(அதாவது நேற்று) நிலத்தை அளக்க நேரில் வருவதாகவும், அன்றைய தினமே பணத்தை கொடுத்ததும் நிலத்தை அளந்து தருவதாகவும் கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயராமன், விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய ரூ.24 ஆயிரத்துடன் ஜெயராமன் நேற்று தனது நிலத்தில் காத்திருந்தார். அங்கு வந்த நில அளவையர் சூர்யா, நைனார்பாளையம் கிராம நிர்வாக உதவியாளரான பெரம்பலூர் மாவட்டம் சிறு நிலா பகுதியை சேர்ந்த சுசீலா(35) ஆகியோரிடம் ஜெயராமன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஏட்டுகள் பாலமுருகன், விஜயதாஸ், நரசிம்மராவ் ஆகியோர் பாய்ந்து சென்று நில அளவையர் சூர்யா, கிராம உதவியாளர் சுசீலா ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    வாரிசு சான்று வழங்க லஞ்சம் வாங்கி கைதான வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிவில் சப்ளை கார்ப்பரேசனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 2011-ம் ஆண்டு சுப்பிரமணி இறந்து விட்டார். இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி சிவில் கார்ப்பரேசனில் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தார். அவர்கள் வாரிசு சான்றிதழ் கேட்டனர்.

    இதையடுத்து ராஜேஸ்வரி கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் ஈரோடு கிழக்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய மனோகரன் என்பவரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவர் ரூ.1000 லஞ்சமாக கேட்டார்.

    இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஸ்வரி இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை ராஜேஸ்வரியிடம் கொடுத்து அனுப்பினர்.

    அவர் லஞ்ச பணத்தை வருவாய் ஆய்வாளர் மனோகரனிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மனோகரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதுதொடர்பான வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் மனோகரனுக்கு லஞ்சம் கேட்டதற்கு 1 ஆண்டும், லஞ்சம் வாங்கியதற்கு 2 ஆண்டும் என மொத்தம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து மனோகரன் அபராதத்தை செலுத்தினார். மேலும் 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதித்ததால் அவர் ஜாமீனில் சென்றார்.

    3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற வருவாய் ஆய்வாளர் மனோகரன் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். எனவே இந்த தீர்ப்பு குறித்து நீலகிரி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் மனோகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்.
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, பயிர் காப்பீடு சான்று வழங்க வி.ஏ.ஓ. ரூ.100 லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டபட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்குள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு அடங்கல் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆனால் சான்று வழங்காமல் அங்கு பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர், விவசாயிகளை அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் ஒரு அடங்கல் சான்று வழங்க விவசாயிகளிடம் இருந்து லஞ்சமாக ரூ.100 வசூலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் விவசாயி ஒருவர் பயிர் காப்பீடு அடங்கல் சான்று பெறுவதற்கு சென்றதும் அதற்கு வி.ஏ.ஓ. ரூ.100 லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.

    மேலும் அந்த வீடியோவில் ரூ.100 லஞ்சம் வாங்குவதை கிராம நிர்வாக அலுவலர் ஒப்புக்கொள்ளும் காட்சியும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே வி.ஏ.ஓ. மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைதான வருவாய் ஆய்வாளர் ராசிபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூவிழிராஜா. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் எலச்சிபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் (வயது 48) மனு கொடுத்தார். ஒரு மாத காலமாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் பரமேஸ்வரன் காலம் தாழ்த்தி வந்தார்.

    இதுகுறித்து சூவிழிராஜா வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் கேட்டார். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்க முடியும் என்று கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சூவிழிராஜாவிடம் வழங்கினர். அவர் போலீசார் கூறியப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் ரூ.5 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் வழங்கினார். அதனை அவர் பெற்றுக் கொண்டார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.
    ×