search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breastfeeding"

    மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
    பெண்களுக்கு என்று இறைவன் ஸ்பெஷலாக கொடுத்த வரம்தான்… தாய்ப்பால். குழந்தை பிறந்த அக்கணமே ஒரு பெண்ணின் மார்பகத்தில் சுரக்கக்கூடியது இது.

    சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

    இன்னும் சில நேரங்களில், சில தாய்மார்களுக்கு குழந்தை பெற்றெடுத்த சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாக குறைந்து விடும்.

    ஏன் அப்படியெல்லாம் நிகழ்கிறது?

    பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்புக்காக அந்தப் பெண் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

    சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாய் எடுத்து வந்தால்தான், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

    அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும். தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.

    மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.

    மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும்.
    தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பது வெறும் கட்டுக்கதையே. மாறாக, உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் மட்டுமே இருக்கின்றன.
    தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பது வெறும் கட்டுக்கதையே. மாறாக, உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் மட்டுமே இருக்கின்றன.

    * தாய்ப்பால் கொடுப்பதால், தாயின் கருப்பை வேகமாகச் சுருங்கும். குழந்தை பேருக்கு முன் இருந்த உடல் போல் மாற அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

    * தாய்ப்பால் கொடுத்தல், உடல் எடை பிரசவத்திற்கு பிறகு மளமளவென ஏறாமல் தடுக்கச்செய்யும்.

    * தாய்ப்பால் கொடுப்பது ஒரு கருத்தடை முறையாகவே பார்க்கப்படுகிறது.

    * அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர் ரத்தஅழுத்த நோய் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர் ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை.

    * அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதால், இதயம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    * தாய்ப்பால் கொடுப்பது கர்ப்பப்பை புற்று நோயிலிருந்தும் மார்பகப் புற்றுநோயிலிருந்தும் காக்கிறது.
    பாலூட்டும் தாய் தனது குழந்தைக்கும் சேர்த்து உணவை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பாலூட்டும் தாய் தனது குழந்தைக்கும் சேர்த்து உணவை சாப்பிட வேண்டும். சத்தான உணவே ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும். தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * ஓட்ஸ், முழு கோதுமை, கீன்வா, பார்லி, ரை மற்றும் இதுபோன்ற பல முழு தானியங்கள் வைட்டமின் பி மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்களின் முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன. குழந்தையைப் பராம ரிப்பதில் உடலுக்கு ஏற்படும் ஆற்றல் இழப்புகளை ஈடுசெய்ய உதவும். இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றமும் மேம்படும். அவை, ரத்த சர்க்கரை அளவுகளைக் குறைத்து, குடல் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதிசெய்யும் - இவை எல்லாமே நல்ல தரமான பால் உற்பத்திக்கு வழி வகுக்கும்.

    * பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளில் விதைகள் மிகவும் சிறந்தவையாகும். இந்திய பாரம்பரிய மரபு வழிமுறைகளில், பால் உற்பத்தியை மேம்படுத்த விதைகள் தலைமுறை தலைமுறையாக முக்கியமான விஷயமாகக் கூறப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில், வெந்தயம், சீரகம், எள் மற்றும் கசகசா போன்றவையும் அடங்கும்.

    இவற்றை உங்களுடைய காலைநேர கஞ்சி, கறி வகைகளின் டாப்பிங்காக சேர்த்து அல்லது தினசரி ஒரு ஸ்பூன் அளவுக்கு அப்படியே சாப்பிட்டு வரலாம். வறுத்துப் பொடியாக்கிக் கொண்டும், மற்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்து குடிப்பது, நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுவதோடு, உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தையின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக்கூடியது.

    சோம்பு, சீரகம் அல்லது வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக்கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து அதன் நிறமும் சுவையும் மாறும் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீரை ஆற வைத்து, வாட்டர் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு குடிக்கலாம். சிறந்த முடிவுகளைப் பெற, இந்த விதைகளை தினமும் ஒருமுறையாவது குடிக்க வேண்டும்.



    * தண்ணீரில் எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல காரணங்களுக்காகத் தண்ணீர் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு அத்தியாவசியமானது. முதலில், நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உங்கள் உடலின் ஆற்றல் குறைந்துப்போகாமல் இருக்கவும் தண்ணீர் தேவை. இரண்டாவதாக, உடலின் பால் உற்பத்தியை தண்ணீர் அதிகரிக்கும். தாகம் எடுத்தால் உடனடியாகத் தண்ணீர் குடித்திடுங்கள், சோம்பல் காரணமாக ஒத்திப்போடவோ, வேறுவேலைகளால் குடிக்காமல் இருக்கவே கூடாது. ஃப்ரெஷ் சூப்கள், பழங்கள், காய்கறிகளின் ஜூஸ்கள் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்றவற்றையும் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

    * சிக்கன் மற்றும் வான்கோழி போன்ற இறைச்சிகள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு புரதச்சத்தை அதிகரிக்க உதவும். ஆனாலும், சிக்கனை அதன் தோல்நீக்காமல்தான் நீங்கள் சமைக்க வேண்டும். சிக்கன் தோலில் நிறையவே நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பார்ஸ்லே, பூண்டு, ஆலிவ் ஆயில் போன்றவற்றால் அதை ஃப்ளேவர் கூட்டி சாப்பிடலாம்.

    புரதத்தின் நல்ல மூலமாக இருப்பதில் முட்டைகளும் மற்றொரு சிறந்த பொருள், புரதத்தைத் தவிர அதில், ஃபோலேட், வைட்டமின் பி12 ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. உங்கள் டயட்டில் போதுமான அளவு பி12 இல்லையென்றால், குழந்தைக்கும் அதேபோல குறைவு ஏற்படும் என்பதை மறக்காதீர்கள். இதை சரிசெய்ய முட்டைகள் சரியான வழிமுறையாகும்.

    * முழுக்கொழுப்பு பால் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்தது. தினமும் இரண்டு கிளாஸ் பாலைக் குடிப்பதால், புரதம் மற்றும் கால்சியம் போன்றவை அதிகரிக்கும். மேலும் இதில் “நல்ல கொழுப்பு” இருப்பதால், உடலில் ஏற்படும் ஆற்றல் குறைபாடுகளை ஈடுசெய்ய மிகவும் உதவுகிறது. மிகவும் சூடான அல்லது குளிர்ந்த பாலை விட, இதமான சூட்டில் உள்ள பால் எப்போதுமே சிறந்தது.

    உங்களுக்கு மாட்டுப்பாலைச் செரிமானம் அடைவதில் சிக்கல் இருந்தால், ஆட்டுப்பாலை முயற்சி செய்து பாருங்கள். வீகன் உணவுமுறையில் இருப்பவர்கள், சோயா பால் அல்லது நட் மில்க் போன்றவற்றை முயற்சி செய்யலாம். இவற்றில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்கும். குழந்தைப் பிறப்பும், பாலூட்டுதலும் எலும்புகளை பலவீனமாக்கும், அதனால் போதுமான அளவு பால் குடிப்பதால், எலும்புகளும் பற்களும் வலிமையாக இருக்கும்.

    மேலும் குழந்தைக்கும் நல்லது. சீஸில் நல்ல கொழுப்புகள் இருக்கின்றன. தினமும் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்க, நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றும் ஒரு பால் தயாரிப்பு நெய் ஆகும். வீட்டில் தயாரிக்கும் நெய்யில், ஒமெகா 3 கொழுப்பு அமிலமான டிஎச்ஏ இருக்கிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. இயற்கையான,கலப்படம் இல்லாத வெண்ணெயையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
    உலகத்திலேயே கலப்படம் இல்லாத பால் தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் சத்து குறைபாட்டில் கஷ்டப்படுகிறார்கள்.
    உலகத்திலேயே கலப்படம் இல்லாத பால் தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் சத்து குறைபாட்டில் கஷ்டப்படுகிறார்கள். ஆண்டுக்கு 2 1/2 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 40 சதவீத குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. 8 சதவீத குழந்தைகள் மிகவும் மெலிந்தும், எலும்பும் தோலுமாக பிறக்கின்றன. 30 சதவீத குழந்தைகள் உயரம் குறைவாக பிறக்கின்றன.

    தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தாய்ப்பால் அவசியம் அதன் நன்மைகள் குறித்து கூடுதல் பேராசிரியரும், குழந்தைகள் நல மருத்துவருமான டி.குணசிங் விளக்கம் அளித்துள்ளார். அவை வருமாறு:

    தாய்ப்பாலூட்டுவது என்றால் முதல் 6 மாதத்திற்கு (180 நாட்கள்) தாய்ப்பால் மட்டுமே தருவதும் பின் இணை உணவுகளுடன் இரண்டு வயது வரை அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து தாய்ப்பாலூட்டுவதுமேயாகும். தாய்ப்பால் எல்லா சத்துக்களும் உடைய ஒரு முழுமையான உணவாகும். தாய்ப்பாலில் நோயை எதிர்க்க கூடிய சக்தி உள்ளதால் குழந்தையை எந்த நோயும் நெருங்காது. தாய்ப்பாலில் மூ­ளை வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் உள்ளன. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் அறிவுள்ள குழந்தைகளாக விளங்குகிறது.

    தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிப்பது எப்போது?

    குழந்தை பிறந்தவுடன் ஈரத்தை துணியால் துடைத்து விட்டு தாயிடம் கொடுக்க வேண்டும். தாய் குழந்தையை உடலோடு சேர்த்து அனைத்து பிறந்தவுடன் பால் தர வேண்டும். பிறந்தவுடன் தாய்ப்பால் தர முடியாத சூழ்நிலையில் அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் தரவேண்டும். பிறந்தவுடன் குழந்தையை குளிப்பாட்டக்கூடாது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னரே குளிப்பாட்ட வேண்டும்.

    ஏன் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?


    குழந்தை பிறந்தவுடன் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும், பால் சப்புவதற்கு ஆவலாகவும் இருக்கும். எனவே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது எளிதாகிறது. பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் குழந்தை தூங்கி விடும். அதன்பின் பால் கொடுப்பதற்கு சிரமம் ஏற்படும்.

    குழந்தை பிறந்தவுடன் குளுக்கோஸ் தண்ணீர், தேன், கழுதைப்பால் போன்றவை கொடுக்கலாமா?

    குழந்தை பிறந்தவுடன் சுரக்கும்பால் “சீம்பால்” என்று கூறுகிறோம். இது மஞ்சள் நிறத்தில், கட்டியாக இருக்கும். இதில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் முழுமையாக உள்ளது. முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு சுரக்கும் சீம்பால் குழந்தைக்கு போதுமானதாகும். குளுக்கோஸ், தேன் போன்றவைகள் கொடுப்ப தால் குழந்தைக்கு தொற்று நோய் வருவதற் கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. மேலும் குழந்தைக்கு பசி அடங்கி பால் சப்பிட மறுத்து விடும். இதனால் தாய்க்கு பால் கட்டி பிரச்சினைகள் ஏற்பட்டு தாய்ப்பால் கொடுப்பதற்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றது. ஆகவே பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

    சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பது?

    தாய் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து அறைக்கு வந்தவுடன் மயக்கம் தெளிந்த நிலையில் தாய் படுக்கையில் படுத்த நலையிலேயே செவிலியர், உறவினர்கள் குழந்தையை மார்போடு அனைத்து தாய்ப்பால் கொடுக்க உதவி செய்ய வேண்டும். அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் கட்டாயம் கொடுக்க வேண்டும். வேறு எந்தவித உணவும், பாலும் கொடுக்கக்கூடாது.

    குழந்தைக்கு தண்ணீர், கிரைப்வாட்டர் கொடுக்கலாமா?


    குழந்தை பிறந்த 6 மாதங்கள் முடியும்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலிலே குழந் தைக்கு வேண்டிய தண்ணீர் உள்ளது. ஆகவே குழந்தைக்கு கோடை காலத்தில் கூட தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கிரைப்வாட்டர் ஜீரணத்திற்காக கொடுக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தாய்ப்பால் மிகவும் எளிதில் ஜீரணமாகின்ற ஒரு உணவாகும். ஆகவே கிரைப்வாட்டர் கொடுப்பதால் எந்த பயனும் கிடையாது. மேலும் அது கொடுப்பதால் பாக்டீரியா தொற்று வருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.



    குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தர வேண்டும்?

    குழந்தைக்கு குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முறையாவது தாய்ப்பால் தரவேண்டும். அழும்போதெல்லாம் மற்றும் இரவு பகல் எல்லா நேரத்திலும் தர வேண்டும். இரவில் குறைந்தது 2 முறையாவது தர வேண்டும். குழந்தை 4 மணி நேரத்திற்கு மேல் தூங்கிக் கொண்டிருந்தால் அதை எழுப்பி பால் கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் குறைவான முறைகளும் சில குழந்தைகள் 15 தைல் 20 முறைகளும் பால் குடிக்கும்.

    குழந்தை தேவையான அளவு தாய்ப் பால் குடிக்கிறதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

    ஒரு நாளில் குழந்தைக்கு குறைந்தது 8 முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை குறைந்தது ஆறு முறையாவது சாதாரண நிறத்தில் சிறுநீர் கழித்தால், தாய்ப்பால் போதிய அளவு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். குழந்தை மாதா மாதம் குறைந்தது 500 கிராம் எடை கூடினாலும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    குறைமாத குழந்தை, எடை குறைவான குழந்தைக்குக்கூட 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதா?

    ஆம், குறை மாத குழந்தை மற்றும் எடை குறைவான குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதாகும்.

    தாய் நோய்வாய் பட்டிருக்கும் போது மற்றும் மருந்துகள் சாப்பிடும் போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

    பெரும்பான்மையான சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலாம். அதுதான சமயங்களில் (உதாரணம்: தாய் புற்று நோய்க்கு மருந்து சாப்பிடுதல்) மட்டுமே தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். இச்சமயங்களில் தாய்ப்பாலூட்டு பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று நடந்து கொள்ள வேண்டும்.

    குழந்தைக்கு பேதி ஏற்படும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

    கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தையை பேதியிலிருந்து காப்பாற்றும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றால் என்ன செய்வது?

    தாய்ப்பால் போதவில்லை என்பது பேதைமையே. தைலில் தாய்ப்பால் கிடைக்கிறதா என சரி பார்க்க வேண்டும். சரியான அளவில் (500 கிராம் மாதம்) எடை கூடி உள்ளதா என சரிபார்க்க வேண்டும். குறைந்தது 6 முறையாவது சிறுநீர் கழிக்கிறதா என சரிபார்க்க வேண்டும். (வேறு எந்த உணவோ, பாலோ, தண்ணீரோ கொடுக்காத நிலையில்) தாய்ப்பால் சரியான அளவு கிடைக்கவில்லை எனில், கீழ்க்கண்டவற்றை சரிபார்க்க.

    * குறைந்தது 8 முறையாவது சப்புகிறதா?
    * பகல்-இரவு எல்லா நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறதா?
    * புட்டிப்பால், சூப்பான் உபயோகிக்கப்படுகிறதா?
    * வேறு பாலோ, உணவோ கொடுக்கப்படுகிறதா?



    * குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது சரியான நிலையில் சப்பும் நிலை மற்றும் ஒட்டுதல் உள்ளதா?

    மேற்கூறியவற்றில் பிரச்சனை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். தாய்க்கு ஒரு சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். தாய்க்கு தன்னம்பிக்கை கொடுப்பது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.

    தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு என்ன செய்வது?

    குழந்தை எவ்வளவு சப்புகிறதோ அந்த அளவு பால் ஊறும். ஆகவே குழந்தை அதிக அளவு சப்ப வைத்தால் அதிக அளவு ஊறும். மேலும் தாய் நம்பிக்கையுடன் கொடுத்தால் தாய்ப்பால் கட்டாயம் தேவையான அளவு சுரக்கும்.

    குழந்தை பால் போதாமல் அழுது கொண்டே இருக்கிறதே?

    குழந்தை பசிக்காக மட்டுமே அழுவதில்லை. வேறு பல காரணங்களுக்காகவும் அழுகின்றது. ஆகவே ஏற்கனவே கூறியபடி தாய்ப்பால் போது மானதாக கிடைக்கிறதா என சரி பார்க்கவும். தாயிடம் குழந்தை எடை தேவையான அளவு கூடியிருப்பதை கூறி தாய்ப்பால் தேவையான அளவு கிடைப்பதை சொல்லி நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

    குழந்தை அழுகையை நிறுத்துவதற்கு குழந்தை தாலாட்டவும், தோளில் போட்டு தட்டி கொடுக்கவும், வயிற்றில் கையால் சிறிதாக அழுத்தவும், உடை மாற்றவும், மற்றும் இடத்தை மாற்றி பார்க்கவும் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் வயிற்றுவலி மருந்து கொடுக்கலாம்.

    புட்டிபால் கொடுக்கலாமா?

    கட்டாயம் கொடுக்க கூடாது. இதனால் குழந்தைக்கு சப்புவதில் குழப்பம் ஏற்பட்டு சிறிது நாளில் தாய்ப்பால் குடிப்பதை படிப்படியாக குறைத்து நிறுத்தி விடும். குழந்தை சப்பாத நிலையில் தாய்ப்பால் சுரப்பது படிப்படியாக குறைந்து நின்று விடும். மேலும் புட்டிபால் கொடுப்பதால் கிருமி தொற்று, பேதி, நிமோனியா ஏற்படவும் வாய்ப் புள்ளது. ஆகவே புட்டிப்பால் வேண்டவே வேண்டாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பாலாடையோ, கரண்டியோ உபயோகிக்கலாம்.

    தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடுமா?

    தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு அழகு குறையாது. அழகு கூடத்தான் செய்யும். உடல் மெலிந்து ‘சிலிம்’ஆக காணப்படுவார்கள். தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்தால் மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் நோய் பாதிப்பில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், குழந்தைகளுக்கு பாலூட்டும் போது குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உண்மை.
    குழந்தைகளுக்கு பாலூட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள் நிச்சயமாக புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிடுதல் வேண்டும் என ஒரு ஆய்வு தெரவிக்கின்றது.

    பிறந்த குழந்தைகளுக்கு பால் ஊட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள், புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் கொண்டிருக்கும் பட்சத்தில் அது அவர்களது குழந்தைகளை தான் பாதிக்கும் என ஆய்வின் முடிவு ஒன்று கூறுகிறது.

    அமெரிக்கன் அகெடமி ஆம் பீடியாட்ரிக்ஸ் நடத்திய இந்த ஆய்வில் பாலூட்டும் தாய்மார்கள் புகைப்பிடித்தால் அது அவர்களின் குழந்தைகளின் அறிவாற்றல் திறமைகளை பாதிக்கும் என தெரிவித்துள்ளது. பொதுவாக பெண்கள் தாய்மை அடைந்த பிறகு புகைப்பழக்கத்திற்கு அடிமையாகுவதில்லை., எனினும் புகைபிடிக்கும் பெண்கள் தாய்மை அடைவர் என்பது யதார்த்தம் தானே!..

    பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் அவர்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் என்பது அவர்களின் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், தாய்மை பருவத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் கொடுக்கும் பால் குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உண்மை.

    புகைப்பிடிக்கும் தாய்மார்கள் ஊட்டும் தாய்பாலின் பாதிப்பு குழந்தைகளிடம் ஆரம்பகட்டத்தில் காண்பிப்பதில்லை என்ற போதிலும் குழந்தைகளின் 6 முல் 7 வயதுகளில் அவர்களின் அறிவாற்றல் திறமைகளை குறிவைத்து தாக்குகிறது.

    கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் தால் ஊட்டச்சத்து என்பது பல அறிஞர்களின் கூற்று என்னும் போது அந்த தாய்பாலையே விஷமாக மாற்றும் திறமை அந்த தாய்மார்களிடமே உள்ளது. அதனை மாற்றாமல் இருக்க வேண்டும் எனில் பெண்கள் புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்களை கைவிடுதல் அவசியமாகிறது.
    தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

    குழந்தைக்கு ஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில நேரங்களில் 12 முறை வரை கூட சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது இருக்கும். இது இயற்கையானது தான். பொதுவாக, குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பால் ஊட்ட வேண்டும் என்ற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது. குழந்தைக்கு பசி இருப்பது தெரியவந்தால் பால் ஊட்ட வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை பால் குடிப்பதே போதுமானதாக இருக்கும். சில குழந்தைகளுக்கு பல முறை உணவு தேவைப்படும். எனவே, பால் கொடுப்பதில் வரைமுறை எதுவும் இல்லை. சில குழந்தைகள் சில நேரங்களில் பாலை அடிக்கடி துப்பி விடும். இதுவும் இயற்கையானது தான். கவலைப்படத் தேவை இல்லை.

    பொதுவாக, பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் எதையும் தரக்கூடாது. 6 மாதத்திற்கு மேல் மருத்துவரின் ஆலோசனைப்படி சில உணவுகளைக் கொடுக்கலாம்.

    குழந்தை கருப்பாக மலம் கழித்தாலும், குழந்தை சரியான அளவில் சிறுநீர் கழிக்கவில்லை என்றாலும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து விட்டு பிறகு தாய்ப்பாலைத் தொடரவும். 
    சில கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா என்று சந்தேகம் வரும்.
    ஒரு குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை பெறுவதையும், நல்ல மன வளர்ச்சியை கொண்டிருப்பதையும் அந்த குழந்தை பிறந்தவுடன் அதற்குக் கிடைக்கும் போதிய அளவிலான தாய்ப்பால் உறுதி செய்கிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் முருகன் ஜெயராம் விளக்குகிறார்.

    ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

    அரிய பல சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் வளர உதவுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை தவிர்க்கக் கூடாது. சிலருக்கு மார்பகங்கள் சிறிதாக இருக்கலாம்.

    இதனால், போதிய அளவு தாய்ப்பால் சுரப்பு இருக்குமா என்று சந்தேகப்படுவர். ஆனால், மார்பகங்களின் அளவுகள் ஒரு பிரச்சினையே அல்ல. குழந்தை பிறந்து விட்டால் தாய்ப்பால் ஊறுவது இயற்கையானது.

    சத்துள்ள உணவுகளை உண்ணவில்லை என்றாலும் தாய்ப்பாலில் குழந்தைக்கான சத்துக்கள் நிரம்பியே காணப்படும். சில கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா என்று சந்தேகம் வரும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கலாம். குழந்தைக்கு பாலூட்டும் காலங்களில் எக்காரணம் கொண்டும் கடைகளில் தாங்களாகவே மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.

    குழந்தையின் உதடுகள் பால் குடிப்பது போல் அடிக்கடி சப்புக்கொட்டும். கைகளை அடிக்கடி முகம் மற்றும் வாய் நோக்கி கொண்டு செல்லும். குழந்தையின் இந்த அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தை அழத்தொடங்கும். குழந்தையை தாய் உடலுடன் ஒட்டி அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், குழந்தை பாதுகாப்பாக உணருவதோடு, குழந்தை அமைதியாக இருக்கும். அதன் உடலின் சர்க்கரை அளவு இயல்பாக இருக்கும். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தாயின் தலையும், தோள்பட்டைகளும் சரியான நிலையில் இருக்கும்படி அமர்ந்து தலையணையில் முதுகை சாய்த்து அமர்ந்த நிலையில் தரலாம்.

    டாக்டர் முருகன் ஜெயராம்
    மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
    நாளை (ஆகஸ்டு 1-ந் தேதி) உலக தாய்ப்பால் தினம்.

    குழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்ட வேண்டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய மனநலம், சத்துணவு, தண்ணீர், போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பாலை ஊட்டத் தொடங்கலாம். குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும்.

    குழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும். ஒவ்வொரு முறையும் முதலில் சில மணித்துளிகளே குடிக்கும். பிறகு 15 முதல் 20 மணித்துளிகள் தொடர்ந்து பால் அருந்தும். பசிக்காகக் குழந்தை அழுதால் குழந்தைக்குப் பால் கொடுப்பதில் தவறில்லை. சில குழந்தைகள் இரவு நேரங்களிலும் பாலுக்காக அழும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்பழக்கம் தானே நின்று விடும்.

    இயல்பாகவே குழந்தைகள் தாமாகவே தமக்கென்ற ஒரு நெறிமுறைக்கு வந்துவிடும். இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இரண்டு, மூன்று மாதத்திற்கு மேல் இரவில் பால் அருந்துவதையும் நிறுத்தி நிம்மதியாக உறங்கும்.

    ஒவ்வொரு பக்கமாகக் குழந்தைக்கு முழுமையாகப் பால் ஊட்ட வேண்டும். குழந்தை ஒழுங்காகப் பாலை உறிஞ்சுமானால் பால் சுரப்பது எளிதாகும். ஒவ்வொரு முறையும் முழுமையாக உறிஞ்சிப் பாலுண்ணும் திறனை இயல்பாகவே குழந்தைக்குக் கற்பிக்கலாம். குழந்தைக்குப் போதுமான வசதியான உடை அணிவது அவசியம். குழந்தையை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    போதுமான சத்துணவும், அடிக்கடி பாலூட்டும் பழக்கமும் பால் சுரப்பதைப் பெருக்குகின்றன. பால் உற்பத்தியை மருந்துகள் மூலம் அதிகமாக்க முயல்வது தேவையற்றது. பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதால் மனத்தெளிவையும் பெறுவர்.

    சில குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்தவுடனே தூங்கி விடும். அக்குழந்தைகளை எழுப்பி வயிறு நிறையப் பாலூட்ட வேண்டும். குழந்தை பாலை குடிக்கும்வரை அளவுக்கதிகமான பால் சுரப்பினால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். அப்போது சில வினாடிகள் இடைவெளிவிட்டுக் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்.

    குழந்தை பாலைக் குடிக்கும்பொழுது காற்றையும் உறிஞ்சிவிடும். அதனால் குழந்தையை முதுகில் தட்டி ஏப்பமிட வைக்க வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால் குழந்தை குடித்த பாலை உடனே வாந்தி எடுத்துவிடும். இந்த வாந்தி எடுத்த பொருள் சுவாசப் பைக்குள் போகவும் நேரிடும். குழந்தை ஏப்பம் விட்டபிறகு குழந்தையை அதன் வலது பக்கத்திலோ குப்புறவோ படுக்க வைக்கவேண்டும். இவ்வாறு படுக்க வைப்பதால் உணவு குடல் வழியே செல்ல வசதியாகவுமிருக்கும்.

    குறைமாதக் குழந்தைகளாலும் பிளவுபட்ட உதடுகளுடைய குழந்தைகளாலும் தொடக்கத்தில் பாலை உறிஞ்சிக் குடிக்க இயலாது. அப்பொழுது தாய் தன் பாலைக் கையால் கறந்து கொடுக்கவேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும் மகளிர் கையால் கறந்த பாலைப் புட்டிகளில் சேகரித்துக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துத் தேவைப்படும்போது குழந்தைக்குப் புகட்டச் செய்யலாம்.

    எப்போதும் தாய்ப்பால் தான் ஊட்ட வேண்டுமென்று அனைவரும் இப்போது வலியுறுத்தி வருவதால் எவ்வாறேனும் முயற்சி செய்து தாய்ப்பாலைச் சுரக்க வைப்பதுதான் ஒரு தாயின் இன்றியமையாத கடமையாகும். ஒரு குவளை பால் பழச்சாறோ வேறு சுவை நீர்களையோ தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒரு தாய் அருந்தவேண்டும்.



    தாய்ப்பால் கொடுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் குழந்தைக்கு அவ்வப்போது பாலூட்டு முறையைக் கடை பிடிக்க வேண்டும். முதலிலிருந்தே இரு பக்க மார்பகங்களில் இருந்தும் பாலூட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பால் உருவாக்கத்துக்குக் குழந்தை, தாய் ஆகிய இருவருடைய ஒத்துழைப்பும் தேவை. குழந்தை மட்டும் உறிஞ்சிக் கொண்டிருந்தால் சிறிதளவு பாலிற்கு மேல் அதற்குக் கிடைக்காது. அதே போல, ஒரு தாய் தன்னால் தேவையான பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைத்தாலோ, அஞ்சினாலோ பால் சுரப்பது குறைந்துவிடும். ஆகையால் அத்தாய் எந்த வகையான மனச்சோர்வுமில்லாமல் நெஞ்சுரத்தோடு திகழவேண்டும்.

    குழந்தை நல மருத்துவர், மருத்துவக்கல்லூரிகள், தாய்சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் தாய்பால் தவிரப் பிற செயற்கைப் பாலால் நேரும் கேடுகளை வலியுறுத்த வேண்டும். பள்ளிக்கூட அளவிலேயே தாய்ப்பாலின் பெருமையைப் பரப்ப வேண்டும். வளமான நாடுகளில் தாய்மார்கள் தாய்ப்பாலின் சிறப்பை உணர்ந்து குப்பிப் பாலைத் தவிர்ப்பது போலவே வறுமையில் அகப்பட்டுத் தவிக்கும் நாடுகளைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இக்கருத்தை ஊட்டவேண்டும்.

    கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல எளியவர்கள் வறுமையாளர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துத் தாய்மார்களுக்கும் இயல்பாய்ச் சுரக்கும் தாய்ப்பாலைப் போற்றும் எண்ணம் உருவாக வேண்டும். அலுவலக வாழ்க்கை வாழும் தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதில் இடையூறுகள் நேரலாம். அலுவலக அன்னையர் தாய்ப்பால் அளிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.

    நீண்ட பேறுகால விடுப்பை கருவுற்ற தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். இத்தாய்மார்களுக்கு கணவன்மார்களின் ஒத்துழைப்பும் தேவையாகும். அவர்களும் குழந்தை வளர்ப்பில் ஆர்வம் கொண்டு மனைவி மனநிறைவுடன் செயல்பட உதவ வேண்டும்.

    அதே போல, மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தாய்ப்பால் புகட்டும் இயல்பைப் போற்றும் நெறி வளர்ந்திருப்பதையும் நாம் ஊட்டிய தாய்ப்பால் மானத்தையும் வீரத்தையும் ஒருசேர ஊட்டும் உரமுடையதென்பதை ஒரு தாய் புறநானூற்றில் சூளுரைக்கும் காட்சியையும் நினைத்து மகிழலாம்.

    உலகளாவிய நிலையில் தாய்மையைப் போற்றும் நெறியில் தமிழகம் பலருக்கு வழிகாட்டியாக விளங்கியது; தொடர்ந்தும் விளங்க வேண்டும் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

    நம் நாட்டில் குழந்தை பிறந்தபோது, 80 முதல் 90 சதவீதம் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள், ஆறாவது மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் கூட தாய்ப்பால் குடிப்பதில்லை என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதனால் இன்னும் நம் நாட்டில் குழந்தைகளின் வளர்ச்சியும் நோயின்மையும் அறிவுடைமையும் போதிய முன்னேற்றம் அடையாமலிருப்பதை அறிந்து திகைப்படைகிறோம்.

    அனைத்து மக்களுக்கும் இச்செய்தியை ஆழமாக அறிவுறுத்தித் தாய்ப்பாலையே ஓராண்டு வரையிலாவது குழந்தைகள் அருந்தினால் எதிர்காலத் தமிழ்நாடு இளையச் செல்வங்கள் ஆற்றலோடும் அறிவுத்திறனோடும் நாட்டின் நன்மணிகளாக மிளிர்வார்கள். இந்த நற்போக்கு நன்கு வளர்க!

    மருத்துவர் தாரா நடராசன், முன்னாள் முதல்வர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி
    தாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம்.
    தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் இவ்வுலகில் வேறு எந்த உணவிலும் இல்லை. தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல; தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்குப் பயன்படுகிறது.

    தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தாலே, விட்டமின் மருந்துகள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அந்தளவுக்கு அனைத்துச் சத்துக்களையும் கொண்டது இந்த உயிர்ப்பால். தாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம்.

    * தாய்ப்பால் ஓர் இயற்கை உணவு.
    * இயற்கையான முதல் நோய்த் தடுப்பு மருந்து.
    * தாய்ப்பால் அருந்துவதால், குழந்தை உடலின் வெப்பநிலை சரியான அளவில் வைக்கப்படும்.
    * சோடியம் குறைவாக இருப்பதால், குழந்தையின் சிறுநீரகத்துக்கு நல்லது.



    * வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சருமநோய், காதில் சீழ் வடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கும். தாய்ப்பால் தரவல்ல தரமும், சத்தும், பாதுகாப்பும் இதில் இருக்காது.

    பசும்பால் அல்லது பால் பவுடரை கொதிக்க வைத்து, பாட்டில் மற்றும் ரப்பரை சுத்தமாகக் கழுவி, வெதுவெதுப்பான சூடுநீரில் சுத்தப்படுத்தி, அதன் பிறகு டப்பாவில் பால் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பது, என இந்தச் செய்முறைகளில் ஏதேனும் சுகாதாரக் குறைவு ஏற்பட்டால், அது குழந்தைக்கு நோயை உண்டாக்கும். மேலும், இவற்றை தயார் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரமும் அதிகம். அதற்குள், குழந்தையின் பசியும் அழுகையும் அதிகமாகி விடும்.

    பால் பவுடர் டப்பாவின் காலாவதி தேதியைச் சரிபார்க்காமல் கொடுப்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

    சில பெண்கள், தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டு விடும் என்பதால் தாய்ப்பால் கொடுக்காமல், அல்லது குறுகிய காலத்திலேயே தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி விடுவார்கள். சிலருக்கு அழகு பற்றிய எண்ணம் இருக்காது. ஆனால், தாய்ப்பால் கொடுக்க அலுப்பு, தூக்கத்தில் எழ சோம்பேறித்தனம் போன்ற காரணங்களால் குழந்தைக்கு பசும்பால் கொடுப்பார்கள்.

    தாய்ப்பாலால் குழந்தைக்குக் கிடைக்கும் இணையற்ற நோய் எதிர்ப்பு சக்தி, சத்துக்கள், சீரான உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றைவிட, அழகும், அலுப்பும் முக்கியத்துவம் பெற்று விடுமா என்பதை ஒருகணம் சிந்தித்தால், குறைந்தது 6 மாதம், அதிகபட்சம் 1 வயதுவரை தங்கள் குழந்தைக்குப் பாலூட்ட தாய்மார்கள் உறுதியேற்று விடுவார்கள்.
    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    தாய்ப்பால் குடிப்பது ஒவ்வொரு குழந்தையின் கடமை. அதைக்கொடுப்பது தாயின் கடமை. அன்னையை நடமாடும் தெய்வம் என்று சொல்கிறோம். ஒரு குழந்தைக்கு தாயார் 6 மாதம் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவ்வாறு 6 மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் சதவீதம் தமிழகத்தில் 50 சதவீதம்தான் இருக்கிறது.

    இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலை போன்ற காரணங்களால் குழந்தை பெற்ற தாய்மார்கள் காலையில் சீக்கிரமே வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தடைபடுகிறது. இதனால் டப்பா பால், பவுடர் பால் போன்றவற்றை குழந்தைகளுக்கு புகட்டும் நிலை உருவாகிறது.

    தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள்தான் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். தடிமன் குறைவாக இருக்கும். டப்பா பால், பவுடர் பால் கொடுத்து குழந்தைப் பருவத்தில் தடிமனாக இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ரத்தக்குழாய் அடைப்பு, சர்க்கரை வியாதி போன்றவை வர வாய்ப்புள்ளது. தாய்ப்பால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாதது.



    தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய், வாந்தி-பேதி, நிமோனியா, ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற நோய்கள், பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அதேபோல தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மேலும் அவர்களது உடல் வாகு, மனது இலகுவாகும். பெண்களின் அழகும் அதிகரிக்கும்.

    அரசு துறைகளில் பணிபுரியும் தாய்மார்களுக்கு பிரசவ கால விடுப்பாக முதலில் 6 மாதம் வழங்கப்பட்டது. தற்போது 10 மாதம் விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    வேலைக்கு செல்லும்போதும் இடைவேளை நேரங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தாய்ப்பாலை எடுத்து 6 முதல் 8 மணி நேரம் வரை சாதாரண தட்ப-வெப்ப நிலையில் வைத்திருந்தும் குழந்தைகளுக்கு புகட்டலாம்.

    பிரசவத்துக்குப்பிறகு பதற்றம், இனம்புரியாத பயம், மன அழுத்தம், சந்தேகம் போன்றவற்றின் காரணமாக பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருக்கிறது. அதனால் பிரசவமான பெண்கள் மன அழுத்தம், பயம் போன்றவற்றுக்கு உள்ளாகாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

    ×