search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மருந்துகள் உட்கொள்ளும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா?
    X

    மருந்துகள் உட்கொள்ளும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா?

    சில கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா என்று சந்தேகம் வரும்.
    ஒரு குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை பெறுவதையும், நல்ல மன வளர்ச்சியை கொண்டிருப்பதையும் அந்த குழந்தை பிறந்தவுடன் அதற்குக் கிடைக்கும் போதிய அளவிலான தாய்ப்பால் உறுதி செய்கிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் முருகன் ஜெயராம் விளக்குகிறார்.

    ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

    அரிய பல சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் வளர உதவுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை தவிர்க்கக் கூடாது. சிலருக்கு மார்பகங்கள் சிறிதாக இருக்கலாம்.

    இதனால், போதிய அளவு தாய்ப்பால் சுரப்பு இருக்குமா என்று சந்தேகப்படுவர். ஆனால், மார்பகங்களின் அளவுகள் ஒரு பிரச்சினையே அல்ல. குழந்தை பிறந்து விட்டால் தாய்ப்பால் ஊறுவது இயற்கையானது.

    சத்துள்ள உணவுகளை உண்ணவில்லை என்றாலும் தாய்ப்பாலில் குழந்தைக்கான சத்துக்கள் நிரம்பியே காணப்படும். சில கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா என்று சந்தேகம் வரும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கலாம். குழந்தைக்கு பாலூட்டும் காலங்களில் எக்காரணம் கொண்டும் கடைகளில் தாங்களாகவே மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.

    குழந்தையின் உதடுகள் பால் குடிப்பது போல் அடிக்கடி சப்புக்கொட்டும். கைகளை அடிக்கடி முகம் மற்றும் வாய் நோக்கி கொண்டு செல்லும். குழந்தையின் இந்த அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தை அழத்தொடங்கும். குழந்தையை தாய் உடலுடன் ஒட்டி அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், குழந்தை பாதுகாப்பாக உணருவதோடு, குழந்தை அமைதியாக இருக்கும். அதன் உடலின் சர்க்கரை அளவு இயல்பாக இருக்கும். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தாயின் தலையும், தோள்பட்டைகளும் சரியான நிலையில் இருக்கும்படி அமர்ந்து தலையணையில் முதுகை சாய்த்து அமர்ந்த நிலையில் தரலாம்.

    டாக்டர் முருகன் ஜெயராம்
    Next Story
    ×