search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ather Energy"

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது 450X மாடல் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
    • முந்தைய தலைமுறை 450X மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மேம்பட்ட மூன்றாம் தலைமுறை 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஏத்தர் 450X Gen 3 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 5 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும்.

    புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து ஏத்தர் 450X Gen 2 மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் Gen 2 மாடலுக்கு மாற்றாக Gen 3 விற்பனையகம் வர உள்ளன. புதிய ஏத்தர் 450X Gen 3 வினியோகம் ஜூலை 20 ஆம் தேதி தொடங்குகிறது. ஏத்தர் 450X Gen 3 மாடலில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய Gen 2 மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


    ஏத்தர் 450X Gen 3 மாடல் முழு சார்ஜ் செய்தால் 146 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. எனினும், நிஜ பயன்பாட்டில் இந்த மாடல் 105 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் புது மாடலில் இருமடங்கு பெரிய ரியர் வியூ மிரர்கள், எம்.ஆர்.எப். மற்றும் ஏத்தர் இணைந்து உருவாக்கிய புது டையர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த ஸ்கூட்டரில் உள்ள புது இண்டர்ஃபேஸ் 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. முந்தைய மாடலில் 1 ஜிபி ரேம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய மாடலில் உள்ள அதிக ரேம் காரணமாக டேஷ்போர்டின் கம்ப்யுடிங் வேகம் அதிகமாக இருக்கும். இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் எதிர்காலத்தில் வழங்குவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இவை தவிர ஏத்தர் 450X Gen 3 மாடலின் டிசைன் மற்றும் சேசிஸ் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடல் இப்போதும் வைட், ஸ்பேஸ் கிரே மற்றும் மிண்ட் கிரீன் என மூன்று வித நிறங்களில் தான் கிடைக்கிறது. 

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலை உருவாக்கி வருகிறது.
    • தற்போதைய ஏத்தர் 450X முழு சார்ஜ் செய்தால் 116 கி.மீ ரேன்ஜ் வழங்குகிறது.

    பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேஸ்லிப்ட் மாடலை ஜூலை 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடலில் பெரிய பேட்டரி மற்றும் அதிக செயல்திறன் வழங்கப்படும் என தெரிகிறது.

    தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 116 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும்.


    புதிய ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலில் 3.66 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் 3 பேஸ் பெர்மணன்ட் மேக்னெட் சின்க்ரோனஸ் எலெக்ட்ரிக் மோட்டார் சிஸ்டம் வழங்கப்படலாம். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 146 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலில் ராப் மோட், ஸ்போர்ட் மோட், ரைடு மோட், ஸ்மார்ட் ஈகோ மோட் மற்றும் ஈகோ மோட் என ஏராளமான டிரைவிங் மோட்கள் வழங்கப்படலாம். இதன் ராப் மோட் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜூன் மாதம் மட்டும் 3 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது.
    • விரைவில் மேம்பட்ட 450X மாடல்களை ஏத்தர் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருவதிலேயே இதனை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு ஏத்தர் நிறுவனமும் இந்திய சந்தையில் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி ஜூன் 2022 மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த மாதத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 3 ஆயிரத்து 231 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையை விட பல மடங்கு அதிகம் ஆகும். 2021 ஜூன் மாதத்தில் ஏத்தர் நிறுவனம் சுமாராக 300 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.


    இந்த நிலையில், ஏத்தர் நிறுவனம் புதிய மேம்பட்ட 450X மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி புதிய மாடலில் 3.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படலாம். இது தற்போதைய மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் 2.6 கிலோவாட் ஹவர் பேட்டரியை விட அதிகம் ஆகும்.

    தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஏத்தர் 450X மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் முறையே 116 கி.மீ. மற்றும் 100 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. அந்த வகையில் புதிய மேம்பட்ட மாடல்கள் அதிக ரேன்ஜ் கொண்டிருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். 

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 450X ஆகும்.
    • இதன் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்தியாவில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர் ஏத்தர் எனர்ஜி. இந்த நிறுவனம் விரைவில் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏத்தர் 450X மாடல் பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

    தற்போது ஏத்தர் நிறுவனம் தனது 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது. ஏத்தர் 450X மாடலில் தற்போது 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 116 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.


    இந்த நிலையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலில் 3.66 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 146 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலில் ராப் மோட், ஸ்போர்ட் மோட், ரைடு மோட், ஸ்மார்ட் ஈகோ மோட் மற்றும் ஈகோ மோட் என பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் ராப் மோட் ஓலா S1 ப்ரோ மாடலுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய ஏத்தர் 450X மாடலை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 3.35 மணி நேரங்கள் ஆகிறது. இத்துடன் டிசி பாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது பத்து நிமிடங்களில் 15 கி.மீ. ரேன்ஜ் கிடைக்கிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தைக்கென குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்குள் இரண்டு புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய தி்ட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இரு ஸ்கூட்டர்களில் ஒன்று குறைந்த விலையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    2021 ஜூன் மாதத்திற்குள் ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ள நிலையில், உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளில் அந்நிறுவனம் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இதற்கு அந்நிறுவனம் அதிக சந்தைகளில் களமிறங்கி, குறைந்த விலையில் வாகனங்களை அறிமுகம் செய்ய வேண்டும். 

    இந்தியாவில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450 ஸ்கூட்டர் விலை ரூ.1.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே அந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடல் ஆகும். இது தற்சமயம் விற்பனையாகும் வழக்கமான 125சிசி ஸ்கூட்டர்களின் விலையை விட இருமடங்கு அதிகம் ஆகும்.



    புதிய குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் விலை குறைந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராப் ஹேன்டில், மிரர் ஸ்டாக், சைடு ஸ்டான்டு உள்ளிட்டவை ஸ்டீல் அல்லது இரும்பு மூலம் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கும் மோட்டார் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் இந்த மோட்டாரின் செயல்திறன் மற்றும் மைலேஜ் போன்றவற்றில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றே தெரிகிறது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கி வருவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
    இந்தியாவில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வாரண்டியை நீட்டித்து வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் ஃபேம் II சான்று பெற்ற ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வாரண்டியை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஃபேம் I சான்றளிக்கப்பட்ட ஏத்தர் 450 வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பதில் இனி மூன்று ஆண்டுகளுக்கு வாரண்டி நீட்டிக்கப்படும். இந்த நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்க இருக்கிறோம். ஃபேம் 2 சான்று பெற்ற அனைத்து ஏத்தர் 450எஸ் ஸ்கூட்டர்களும் மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் கிடைக்கும். இவை மேக் இன் இந்தியா பேட்டரி பேக் உடன் வழங்கப்படுகிறது. என ஏத்தர் எனர்ஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.



    ஏத்தர் 450 மாடல் ஃபேம் II (FAME II) திட்டத்தில் கிடைப்பதால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ.27,000 வரை மானியம் கிடைக்கும். இதன் மூலம் ஏத்தர் 450 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1,23,230 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏத்தர் 450 ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரஷ்லெஸ் டி.சி. மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

    ஏத்தர் 450 கொண்டிருக்கும் மோட்டார் 20.5 என்.ம். டார்க் செயல்திறன் வழங்கும். இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டும்.

    இவற்றுடன் 7-இன்ச் கேபாசிட்டிவ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன் அசிஸ்ட், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, சார்ஜிங் பாயின்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஓவர்-தி-ஏர் மென்பொருள் மற்றும் ஃபம்வேர் அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விநியோகம் செய்ய துவங்கி இருக்கிறது. #Ather



    பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஏத்தர் 450 மாடல் ஃபேம் II (FAME II) திட்டத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ரூ.27,000 வரை மானியம் கிடைக்கும்.

    பெரும்பாலான உற்பத்தியாளர்களை போன்றே, ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் தனது வாகனங்களில் ஃபேம் II தேவைகளை பூர்த்தி செய்யும் வரை விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது.



    புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப ஸ்கூட்டர் அப்டேட் செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து ஏத்தர் நிறுவனம் தனது வாகனங்களின் விநியோகத்தை மீண்டும் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் அடுத்த சில வாரங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் ஸ்கூட்டர் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஏத்தர் 450 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1,23,230 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 450 ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரஷ்லெஸ் டி.சி. மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகள் மூன்று ஆண்டுகள் / வரம்பற்ற கிலோமீட்டர் வாரண்டியுடன் கிடைக்கிறது.

    ஏத்தர் 450 கொண்டிருக்கும் மோட்டார் 20.5 என்.ம். டார்க் செயல்திறன் வழங்கும். இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டும்.



    ஏத்தர் 450 மாடலில் இன்பில்ட் ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டரை பின்புறமாக பார்க் செய்யும் போது மோட்டாரை பின்புறமாக இழுக்கும். மோட்டார் பின்புறம் இழுக்கும் வேகம் மணிக்கு 5 கிலோமீட்டர் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இவற்றுடன் 7-இன்ச் கேபாசிட்டிவ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன் அசிஸ்ட், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, சார்ஜிங் பாயின்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஓவர்-தி-ஏர் மென்பொருள் மற்றும் ஃபம்வேர் அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பெங்களூரு:

    இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு ஜூன் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நீண்ட காலமாக தயாரிப்பு பணிகளில் இருந்த நிலையில் விரைவில் வெளியிடப்படுகிறது.

    ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை ஏத்தர் நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கும் நிலையில் வெளியீட்டின் போது தான் ஸ்கூட்டரின் முழு விவரங்கள் தெரியவரும். புதிய ஸ்கூட்டர் அதிக பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதில் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூருவில் உள்ள தயாரிப்பு ஆலையில் ஏத்தர் எஸ்340 மாடலின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், இதன் விநியோகம் படிப்படியாக துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏத்தர் எஸ்340 ஸ்கூட்டர்கள் பெங்களூருவில் விநியோகம் செய்யப்படுகிறது. வணிக ரீதியிலான தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்குகிறது.

    கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்டு பகுதியில் ஏத்தர் நிறுவன தயாரிப்பு ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவுகள் வெளியீட்டு தினத்தன்று துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    கான்செப்ட் மாடல்களில் இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஏத்தர் எஸ்340 அல்லது 340 மாடல் எதிர்கால வடிவமைப்பு மற்றும் எட்ஜி ஸ்டைலிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்கூட்டரில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே ஸ்கிரீன், கஸ்டம் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    மேலும் புஷ் நேவிகேஷன், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள், பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், வாட்டர்ப்ரூஃப் சார்ஜர், அதிக ரைடிங் மோட்கள் மற்றும் எல்இடி லைட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5kW பிரஷ்லெஸ் டிசி எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம் என்றும் இந்த மோட்டார் 6.4 பிஹெச்பி பவர் மற்றும் 14 என்எம் டார்கியூ கொண்டிருக்கும் என கூப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 72 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். 

    புதிய எஸ்340 ஸ்கூட்டர் மணிக்கு 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடிகளில் செல்லும் என ஏத்தர் தெரிவித்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 சதவிகிதம் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×