search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ather Energy"

    • புதிய ஏத்தர் 450S மாடலில் எல்சிடி டேஷ் போர்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
    • ஏத்தர் நிறுவனம் சற்றே குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய முடிவு.

    ஏத்தர் 450S மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 3-ம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஏத்தர் 450S மாடலின் விலை ரூ. 1.3 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சற்றே சிறிய பேட்டரி பேக் உடன் வழங்கப்படுகிறது.

    முந்தைய ஏத்தர் 450X மாடலில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. புதிய ஏத்தர் 450S மாடலில் எல்சிடி டேஷ் வழங்கப்படுகிறது. இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு, ஒன் டச் வசதி வழங்கப்படவில்லை.

     

    சமீபத்தில் ஃபேம் 2 திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திடீர் மாற்றம் காரணமாக ஏத்தர் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை அதிகரித்தது. இதன் காரணமாக ஏத்தர் நிறுவனம் சற்றே குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய ஏத்தர் முடிவு செய்துள்ளது.

    ஏத்தர் 450S மாடலும் 450X போன்றே மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 115 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. எனினும், இந்த மாடலில் 6.2 கிலோவாட் திறன் கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களை விட குறைந்த விலை வேரியண்ட் ஆகும்.
    • தோற்றத்தில் புதிய ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X போன்றே காட்சியளிக்கிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது புதிய 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்களை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தொகை சமீபத்தில் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய 450S மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களை விட குறைந்த விலை வேரியண்ட் ஆகும். புதிய மாடல் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 115 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி திறன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. எனினும், இது ஏத்தர் 450X மாடலில் இருப்பதை விட அளவில் சிறியதாகவே இருக்கும் என்று தெரிகிறது. தோற்றத்தில் புதிய ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் வழக்கமான 125சிசி பெட்ரோல் மாடலுக்கு இணையான எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய ஏத்தர் 450S மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஃபேம் 2 திட்ட பலன்களை சேர்த்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏத்தர் 450S மாடலுக்கான முன்பதிவு ஜூலை மாத வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது. இதன் வினியோகம் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 

    • டாட் சார்ஜரை பயனர்கள் வீட்டில் உள்ள சார்ஜிங் மையத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
    • குறுகிய காலத்திற்கு டாட் சார்ஜர் வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 450X பேஸ் வேரியண்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்துவோரின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடிவு செய்து இருக்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் பிரபலமான டாட் சார்ஜர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கி வருகிறது.

    தற்போது ஏத்தர் 450X பேஸ் வேரியண்டை 0 முதல் 100 சதவீதம் வரை முழுமையாக சார்ஜ் செய்ய 14 முதல் 15 மணி நேரங்கள் வரை ஆகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்ய இது நீண்ட நேரம் ஆகும். தற்போது டாட் சார்ஜரை ரூ. 7 ஆயிரத்து 500 எனும் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்குகிறது. டாட் சார்ஜரை பயனர்கள் வீட்டில் உள்ள சார்ஜிங் மையத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும்.

    டாட் சார்ஜர் ஒரே இடத்தில் நிரந்தரமாக இன்ஸ்டால் செய்யப்படும் ஒன்றாகும். டாட் சார்ஜர் கொண்டு ஏத்தர் வாடிக்கையாளர்கள் தங்களின் 450X பேஸ் வேரியண்டை 5 மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடயும். குறுகிய காலத்திற்கு டாட் சார்ஜர் வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாட் சார்ஜர் கொண்டு வாடிக்கையாளரின் சொந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். ஒருவரின் டாட் சார்ஜரை மற்றவர்களால் பயன்படுத்தவே முடியாது. 

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450X மாடல் புதிய வேரியண்ட் 6.2 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது.
    • புதிய ஏத்தர் 450X வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450X புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஏத்தர் 450X வேரியண்ட் 146 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. எனினும், எண்ட்ரி லெவல் மாடல் என்பதால், இதில் ஃபாஸ்ட் சார்ஜிங், ரைட் மோட்கள், கனெக்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

    எண்ட்ரி லெவல் ஏத்தர் 450X மாடல் ஒலா S1 ஏர், டிவிஎஸ் ஐகியூப் மற்றும் ஆம்பியர் பிரைமஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதை அடுத்து ஏத்தர் 450 பிளஸ் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.

     

    அம்சங்களை பொருத்தவரை ஏத்தர் 450X மாடலில் பெருமளவில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் 6.2 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 143 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    குறைந்தவிலை மாடல் என்பதால் இதில், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ரைட் மோட்கள், பார்க் அசிஸ்ட், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ் நேவிகேஷன், லைவ் டிராக்கிங், ஒடிஏ அப்டேட்கள் மற்றும் கலர் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை. இந்த அம்சங்கள் அனைத்தும் ஏத்தர் நிறுவனத்தின் உயர் ரக ஸ்கூட்டர்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஏத்தர் 450X புதிய பேஸ் வேரியண்ட் விலை ரூ. 98 ஆயிரத்து 079 எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் ட்ரூ ரெட், காஸ்மிக் பிளாக், ஸ்பேஸ் கிரே, லூனார் கிரே, சால்ட் கிரீன் மற்றும் ஸ்டில் வைட் என ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இந்த சலுகைகள் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ஏத்தர் எனர்ஜி அறிவிப்பு.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான, ஏத்தர் எனர்ஜி தனது ஃபிளாக்ஷிப் ஏத்தர் 350 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகைகள் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

    இந்தியா முழுக்க சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றஇ வரும் ஊழியர்களுக்கு இந்த சலுகை பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையின் கீழ் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 4 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் நிதி திட்டத்தின் கீழ் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு வரி சேமிப்பு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.

    இவை தவிர ஏத்தர் 450X மாடலை வாங்கும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 8 ஆயிரத்து 259 மதிப்புள்ள இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து வழங்கி வரும் இரண்டு ஆண்டுகள் பேட்டரி வாரண்டி நிறைவு பெற்றதும், அமலுக்கு வரும்.

    இத்துடன் வாடிக்கையாளர்கள் பணியாற்றும் பகுதிகளில் இலவசமாக சார்ஜிங் உள்கட்டமைப்புகளை நிறுவும் வசதியை ஏத்தர் எனர்ஜி வழங்கி வருகிறது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகைகளை முன்னணி இந்திய நிறுவனங்களில் பணியாற்றி வருவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக உள்ளது.
    • இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி, தனது உற்பத்தி ஆலையில் இருந்து ஒரு லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஒரு லட்சமாவது யூனிட்டாக ஜென் 3 450X மாடல் ட்ரூ ரெட் நிற வேரியண்ட் அமைந்தது. உற்பத்தி மைல்கல் மட்டுமின்றி ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் மாத விற்பனையில் அசத்தி இருக்கிறது.

    ஜனவரி மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற ஏத்தர் கம்யுனிட்டி டே நிகழ்வில் ஜென் 3 ரக ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி அறிமுகம் செய்தது. மேலும் ஜனவரி மாதத்தில் ஏத்தர் எனர்ஜி இந்திய சந்தையில் விற்பனை செய்த மொத்த வாகனங்கள் எண்ணிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி வருடாந்திர அடிப்படையில் ஏத்தர் எனர்ஜி வாகன விற்பனை 330 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 2 ஆயிரத்து 825 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

    இந்த நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 12 ஆயிரத்து 149 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 9 ஆயிரத்து 324 யூனிட்கள் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ஏத்தர் வாகனங்கள் விற்பனை 32.24 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஆகஸ்ட் 2022 வாக்கில் ஏத்தர் எனர்ஜி உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது.

    ஏத்தர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைப்பதை அடுத்து ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை திறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்த நிதியாண்டின் இறுதியில் இந்த ஆலை முழுமையாக பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. ஓசூரில் புதிதாக திறக்கப்பட இருக்கும் உற்பத்தி ஆலை மூலம் ஏத்தர் எனர்ஜி வாகனங்கள் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும்.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
    • புது அப்டேட் படி ஏத்தர் ஸ்கூட்டர்கள் புது நிறங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கிடைக்கும்.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பெங்களூரு நகரில் கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில் ஏத்தர் கம்யுனிட்டி கடந்த முறையை விட இந்த ஆண்டு எந்த அளவுக்கு விசேஷமாக மாறி இருக்கிறது என்பதை தெரிவித்தது. கடந்த கம்யுனிட்டி நிகழ்வில் 6 ஆயிரம் பயனர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த முறை 80 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இதுவரை ஏத்தர் வாகனங்கள் 500 மில்லியன் கிலோமீட்டர்களை கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் ஒரு பில்லியன் கிலோமீட்டர்களை கடக்க முடியும் என ஏத்தர் எனர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுதவிர ஏத்தர்ஸ்டேக் 5.0 பெயரில் மென்பொருள் சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பயனர்களுக்கு புது யூசர் இண்டர்ஃபேஸ் வழங்குகிறது.

    புது யூசர் இண்டர்ஃபேஸ் சிறப்பான ஸ்வைப் மற்றும் டச் ரெகக்னிஷன் கொண்டுள்ளது. இது முன்பை விட அதிக சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதுதவிர ப்ளூடூத் மற்றும் நெட்வொர்க் போன்ற ஐகான்கள் மொபைல் போனில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. கூகுள் மேப்ஸ் சேவை கொண்ட உலகின் முதல் ஸ்கூட்டர் ஏத்தர் 450X ஆகும். தற்போது வெக்டார் மேப் சேவை வழங்கப்படுவதாக ஏத்தர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    ஏத்தர் 450X மற்றும் 450 பிளஸ் பயனர்களுக்கு நேரலை போக்குவரத்து விவரங்கள் வழங்கப்படுகிறது. இது மொபைலில் உள்ள கூகுள் மேப்ஸ் போன்றே செயல்படும். இவைதவிர ஆட்டோஹோல்டு எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இது வழக்கமான ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கும் மெக்கானிக்கல் பிரேக் லாக் வசதியை வழங்கும். இந்த அம்சம் கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்டிங் செய்யப்பட்டு வந்தது.

    இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், கிரால் கண்ட்ரோல் மற்றும் மேம்பட்ட ரிஜென் போன்ற வசதிகளை வரும் மாதங்களில் வழங்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டு வருகிறது. இதுவரை 900 ஃபாஸ்ட் சார்ஜிங் க்ரிட் பாயிண்ட்களை ஏத்தர் இன்ஸ்டால் செய்து இருக்கிறது. மேலும் மார்ச் 2023-க்குள் நாடு முழுக்க 1300 சார்ஜிங் க்ரிட் பாயிண்ட்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இவற்றில் 3.3 கிலோவாட் சர்வதேச ஏசி சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கார்களையும் சார்ஜ் செய்யும்.

    450X மாடலுக்காக புது சீட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய சீட்-ஐ விட அதிக சவுகரியமாக இருக்கிறது. கம்யுனிட்டி டே நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருக்கும் சீட் இலவசமாக மாற்றிக் கொடுக்கப்படுகிறது. இதுதவிர ஏத்தர் 450X மாடலுக்கு- லூனார் கிரே மற்றும் ரெட் அக்செண்ட்கள், காஸ்மிக் பிளாக் மற்றும் அக்வா புளூ அக்செண்ட்கள், ட்ரூ ரெட் மற்றும் வைட் அக்செண்ட்கள், சால்ட் கிரீன் மற்றும் ஆர்ஞ்சு அக்செண்ட்கள் என நான்கு புது நிறங்களில் கிடைக்கிறது.

    • ஏத்தர் நிறுவனம் டிசம்பர் மாத விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
    • 2022 நவம்பர் மாதத்துடன் டிசம்பர் மாத விற்பனையில் ஏத்தர் எனர்ஜி 26 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர், ஏத்தர் எனர்ஜி 2022 டிசம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. டிசம்பர் 2022 மாதத்தில் மட்டும் ஏத்தர் நிறுவனம் 9 ஆயிரத்து 187 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் மூலம் வருடாந்திர விற்பனையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 389 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

    வாடிக்கையாளர்களுக்கு ஏராள பலன்களை வழங்கும் வகையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் டிசம்பர் திட்டத்தை அறிவித்து இருந்தது. மேலும் நாட்டில் தனது சில்லறை விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், 14 புதிய எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை ஏத்தர் எனர்ஜி திறந்தது. இவை நெல்லூர், கரிம்நகர், உடுப்பி, நொய்டா, கோட்டயம் மற்றும் ஷிமோகா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட துவங்கி உள்ளன.

    "இருசக்கர வாகனங்கள் சந்தையில் விற்பனை சரிவடைந்த நிலையிலும், கடந்த ஆண்டை மிகச் சிறந்த விற்பனையுடன் நிறைவு செய்து இருக்கிறோம். நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டிசம்பர் மாத விற்பனை 26 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. மேலும் சில்லறை விற்பனை மையங்கள் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்தி இருக்கிறோம். தற்போது நாட்டின் 70 நகரங்களில் 89 எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் உள்ளன," என்று ஏத்தர் எனர்ஜி நிறுவன மூத்த வியாபார பிரிவு அதிகாரி ரன்வீத் சிங் பொகேலா தெரிவித்து இருக்கிறார்.

    விற்பனை தவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜனவரி 7 ஆம் தேதி இந்தியாவில் ஏத்தர் கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்த இருக்கிறது. இது பற்றிய அதிக தகவல்களை ஏத்தர் எனர்ஜி வெளியிடவில்லை. எனினும், 450X மாடலின் புது நிறம் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக மேக்சி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க ஏத்தர் பல்வேறு விஷயங்களில் விலை குறைப்பு செய்திருப்பதாக தெரிகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜனவரி 7, 2023 அன்று கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் புது வாகனத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி அதிக தகவல்கள் வெளியாகவில்லை. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏத்தர் 450X மாடலின் குறைந்த விலை வெர்ஷனாகவோ அல்லது முற்றிலும் புது வெர்ஷனாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தற்போது ஏத்தர் நிறுவனம் இந்திய சந்தையில் 450 பிளஸ் மற்றும் 450X என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களும் சற்றே அதிக விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏத்தர் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் மிக எளிய உகபரணங்கள், அதாவது டியுபுலர் ஸ்டீல் பயன்படுத்தப்படலாம்.

    சமீபத்தில் தான் ஏத்தர் நிறுவனம் புது வாகனத்திற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. அதன்படி புது வாகனம் மேக்சி ஸ்கூட்டர் போன்று காட்சியளித்தது. சவுகரிய அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபிளாட் சீட் வழங்கப்படலாம். முந்தைய 450X மாடலில் ஸ்டெப்டு யூனிட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏத்தர் அறிமுகம் செய்யும் வாகனம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    அந்த வகையில், குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது முற்றிலும் புதிய ஸ்கூட்டர் தவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450 பிளஸ் அல்லது 450X மாடல்களின் புது நிறங்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இவை தவிர 450X சீரிஸ் 1 போன்றே புதிதாக லிமிடெட் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    Photo Courtesy: Autocarindia

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் விரிவாக்கம் பற்றி புது தகவல் தெரிவித்துள்ளது.
    • எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் விளங்குகிறது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்னமும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் சார்ஜிங் நெட்வொர்க்-ஐ முடிந்த வரை அதிகப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

    அந்த வரிசையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் இன்ஸ்டால் செய்து இருக்கும் சார்ஜிங் நெட்வொர்க் எண்ணிக்கையில் புது மைல்கல் எட்டியுள்ளது. பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி 580-வது ஏத்தர் க்ரிட் பாஸ்ட் சார்ஜிங் மையத்தை வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    நாடு முழுக்க 56 நகரங்களில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் பாஸ்ட் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 60 சதவீத பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்குகள் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ளன. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் 820 பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்குகளை அமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த சார்ஜிங் நெட்வொர்க் எண்ணிக்கை 1400 ஆக அதிகரிக்கும்.

    ஏத்தர் நிறுவன சார்ஜிங் மையங்களில் அனைத்து எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். சார்ஜ் செய்வதற்கான கட்டணம் டிசம்பர் 2022 வரை இலவசம் ஆகும். சமீபத்தில் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா வி1 மாடலை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்தது. இந்த மாடலுக்கு ஏத்தர் சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • இந்த ஸ்கூட்டரின் சோதனை நடைபெற்று வருவதை உணர்த்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் ஏத்தர் 450x மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் நிலையில், இதன் வெளிப்புற தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் ஸ்கூட்டர்களை போன்றே காட்சியளிக்கிறது.


    விலை குறைவாக வைக்க 450X ஜென் 3 மாடலில் அளவில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும். இது தவிர ஏத்தர் நிறுவன வழக்கப்படி இந்த ஸ்கூட்டரில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்படலாம். இதில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஒடிஏ அப்டேட்கள், நேவிகேஷன் மற்றும் ஏராளமானவை அடங்கும்.

    புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் மூலம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஒலா எலெக்ட்ரிக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த ஒலா S1 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தலாம். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் திரும்பப் பெறப்பட இருப்பதை ஒட்டி வரும் நாட்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது. இந்த சூழலில் புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் ஏத்தர் நிறுவன விற்பனை சரிவதை தடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Source: ZigWheels

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது வாகன உற்பத்தியில் புது மைல்கல் எட்டி அசத்தி உள்ளது.
    • ஏத்தர் நிறுவன வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது வாகன உற்பத்தி 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையில் ஏத்தர் எனர்ஜி வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. மைல்கல் மட்டுமின்றி ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜூன் மாத விற்பனையில் 800 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2022 ஜூன் மாத வாக்கில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 3 ஆயிரத்து 200-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    இந்திய சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர கடந்த ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன துறையில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி காரணமாக பலர் இவற்றை வாங்க துவங்கி உள்ளனர். வழக்கமான பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மாடல்கள் மாறி வருகின்றன.


    முன்னதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எளிய நிதி சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பலர் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிக நிதி சிக்கல் இன்றி வாங்கி வருகின்றனர்.

    சமீபத்தில் தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450X ஜென் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.66 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×