search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Cup 2022"

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 193 ரன்களை குவித்தது.
    • முகமது ரிஸ்வான், பகர் சமான் அரை சதமடித்து அசத்தினர்.

    ஷார்ஜா:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    ஷார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடந்த 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்துள்ளது. ரிஸ்வான் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பகர் சமான் 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய குஷ்தில் ஷா 5 சிக்சர் உள்பட 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே ஹாங்காங் அணி விக்கெட்டுகள் விழுந்தன.

    அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். உதிரியாக கிடைத்த 10 ரன்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதியில், ஹாங்காங் அணி 38 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

    பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 4 விக்கெட்டும், முகமது நவாஸ் 3 விக்கெட்டும், நசீம் ஷா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 193 ரன்களை குவித்தது.

    ஷார்ஜா:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    ஷார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பாபர் அசாம் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய பகர் சமான், முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். பகர் சமான் 53 ரன்னில் அவுட்டானார். கடைசி ஓவரில் குஷ்தில் ஷா 4 சிக்சர் அடித்து அசத்தினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்துள்ளது. ரிஸ்வான் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்குகிறது.

    • வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஆசிப் உசைன் 39 ரன்கள் விளாசினார்.
    • இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய ஆசிப் உசைன் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.. மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது. இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    • சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் ஆறு பவுண்டரி ஆறு சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார்.
    • தொடக்கத்திலேயே பேட்டிங் நன்றாக இருந்ததாக ரோகித் சர்மா பாராட்டு

    துபாய்:

    ஆசிய கோப்பை போட்டியில் ஆங்காங்கை வீழ்த்தி இந்திய அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றது. துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது.

    சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 68 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்), வீராட் கோலி 44 பந்தில் 59 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), லோகேஷ் ராகுல் 36 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஆங்காங் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 40 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    பாபர் ஹயாத் அதிகபட்சமாக 35 பந்தில் 41 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) கின்ஷிட் ஷா 30 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, அவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    தொடக்கத்திலேயே எங்களது பேட்டிங் நன்றாக இருந்தது. இறுதியில் நல்ல ஸ்கோரை குவித்தோம். பந்து வீச்சு பொறுப்பான முறையில் இருந்தது. பந்து வீச்சில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்து இருக்கலாம்.

    சூர்யகுமார் யாதவின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. அவரை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை. தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் பேட்டிங் செய்கிறார். அவர் ஆடிய ஷாட்கள் ஒவ்வொன்றும் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு விளையாடி வருகிறார்கள்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    • முதலில் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.
    • விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ்

    68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கே.எல்.ராகுல் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. பாபர் ஹயாத் 41 ரன்னும், கிஞ்சித் ஷா 30 ரன்னும், செஷான் அலி 26 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஹாங்காங் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

    • விராட் கோலி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
    • சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று, துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. ராகுல் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    அவரைத் தொடர்ந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்டு, ஹாங்காங் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.

    விராட் கோலி

    விராட் கோலி

    விராட் கோலி இந்த தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 40 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். சர்வதேச டி20 போட்டிகளில் அவருக்கு இது 31வது அரை சதமாகும். மறுமுனையில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார்.

    மிக குறைந்த பந்துகளில் அதாவது 22 பந்துகளில் அரைசதம் அடித்து ஆச்சரியப்படுத்திய சூர்யகுமார் யாதவ், அடுத்த பந்திலும் சிக்சர் அடித்து, ஹாட்ரிக் சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 5வது பந்திலும் ஒரு இமாலய சிக்சரை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் அவர் 6 சிக்சர் உள்பட 26 ரன்கள் விளாசினார்.

    20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோலி 59 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்குகிறது. 

    • துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஹாங்காங் அணி முதலில் பந்து வீச முடிவு
    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஹாங்காங் அணி பந்து வீசுவதற்கு முன்னுரிமை அளித்திருக்கிறது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

    ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), பாபர் ஹயாத், யாசிம் முர்தாசா, கிஞ்சித் ஷா, ஸ்காட் மெக்கெக்னி (கீப்பர்), ஹாரூண் அர்ஷாத், அய்சாஸ் கான், ஜீஷன் அலி, எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்பர்.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது.

    • 2 வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறியது.
    • வீராட் கோலி 50 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்து 30 வெற்றியை பெற்றுள்ளார்.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இதன் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. 2-வது போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

    நேற்று நடந்த 3-வது 'லீக்' ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

    2 வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி 'சூப்பர்4' சுற்றுக்கு முன்னேறியது. வங்காளதேசம்-இலங்கை அணிகள் நாளை மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 'பி' பிரிவில் இருந்து 'சூப்பர்4' சுற்றுக்கு தகுதி பெறும் 2-வது அணியாக இருக்கும்.

    துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது 'லீக்' ஆட்டத்தில் இந்தியா-ஆங்காங் அணி கள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் செயல்பாடு அந்த ஆட்டத்தில் சிறப்பாக இருந்தது.

    பலவீனமான ஆங்காங்குக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று 'சூப்பர் 4' சுற்றுக்கு செல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ரோகித் சர்மா 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ள இந்திய கோப்டன்களில் வீராட் கோலி சாதனையை முறியடிப்பார்.

    வீராட் கோலி 50 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்து 30 வெற்றியை பெற்றுள்ளார். 16 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவு இல்லை. 2 போட்டி 'டை' ஆனது. ரோகித் சர்மா 36 போட்டியில் 30 வெற்றி பெற்று சமநிலையில் உள்ளார். 6 ஆட்டத்தில் மட்டுமே தோல்வி ஏற்பட்டது.

    ஆங்காங்கை வீழ்த்தினால் ரோகித் சர்மா 31 வெற்றியுடன் 2-வது இடத்துக்கு முன்னேறுவார். கோலி 3-வது இடத்துக்கு பின் தங்குவார்.

    டோனி 72 போட்டியில் 41 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரது தலைமையில் 28 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவில்லை. ஒரு போட்டி 'டை' ஆனது.

    ஆனால் வெற்றி சதவீதத்தை பொறுத்த வரை ரோகித் சர்மா தான் முன்னிலையில் இருக்கிறார். அவர் 83.33 சதவீதத்துடன் உள்ளார். டோனியின் வெற்றி சதவீதம் 59.28 ஆகவும், வீராட் கோலிக்கு 64.58 ஆகவும் இருக்கிறது

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
    • இதன் 4வது லீக் போட்டியில் இந்தியாவும், ஹாங்காங்கும் இன்று மோதுகிறது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்குடன் 2 முறை மோதி இருக்கிறது. இதில் 2008-ம் ஆண்டில் 256 ரன்கள் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்குக்கே அனுகூலமாக இருப்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீசுவதற்கே முன்னுரிமை அளிக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவி பிஷ்னோய் அல்லது அஸ்வின், ஆவேஷ்கான், அர்ஷ்தீப் சிங்.

    ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), யாசிம் முர்தசா, பாபர் ஹயாத், கின்சித் ஷா, ஸ்காட் மெக்கன்சி, அய்ஜாஸ் கான், இசான்கான், ஆயுஷ் சுக்லா, ஜீஷன் அலி, முகமது ஹசான்பர், ஹரூன் அர்ஷாத்.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 127 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    சார்ஜா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தார். மொசாடெக் உசைன் 30 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரஹமான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கர்பாஸ் 11 ரன்னிலும், ஷஷாய் 23 ரன்னிலும், கேப்டன் முகமது நபி 8 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இப்ராகிம் சட்ரான் நிதானமாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா சட்ரான் அதிரடியாக ஆடி 17 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 43 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் நுழைந்தது. ஆட்ட நாயகன் விருது முஜிபுர் ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டது.

    • மொசாடெக் உசைன் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளிக்க, அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜிப்பூர் ரஹ்மான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    சார்ஜா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஆப்கானிஸ்தானின் அதிரடி பந்துவீச்சில், வங்காளதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர். 53 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய வங்காளதேச அணி அதன்பின்னர் சற்று நிதானமாக ஆடியது. ஆறுதல் அளித்த மஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    முஜிப்பூர் ரஹ்மான்

    முஜிப்பூர் ரஹ்மான்

    மறுமுனையில் மொசாடெக் உசைன் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளிக்க, அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. தொடர்ந்து ஆடிய மொசாடெக், 30 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி  7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜிப்பூர் ரஹ்மான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கும் ஷகிப் அல்-ஹசனுக்கு இது 100-வது டி20 போட்டியாகும்.
    • சார்ஜா மைதானம் சிறியதாகும். இருப்பினும் அங்கு தற்போது நிலவும் கடுமையாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. சார்ஜா, 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் சார்ஜாவில் இன்று இரவு நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கைக்கு அதிர்ச்சி அளித்து அபார வெற்றி பெற்றது.

    105 ரன்னுக்குள் இலங்கையை சுருட்டிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது. ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், முகமது நபியும், பந்து வீச்சில் பாசல்ஹக் பரூக்கி, முஜீப் ரகுமான், ரஷித் கானும் நல்ல நிலையில் உள்ளனர்.

    வங்காளதேச அணியை பொறுத்தமட்டில் சமீபகாலங்களில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்த அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்றது. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் ஆடாத ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதேபோல் சபிர் ரகுமான், முகமது நைம் ஆகியோரும் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் வருகை அந்த அணியின் பலத்தை அதிகரிக்கும்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கும் ஷகிப் அல்-ஹசனுக்கு இது 100-வது 20 ஓவர் சர்வதேச போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க லீக் ஆட்டத்தில் வென்ற நம்பிக்கையுடன் களம் காணும் ஆப்கானிஸ்தான் அணி 2-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்றுக்குள் நுழைய ஆர்வம் காட்டும்.

    அதே நேரத்தில் போட்டியை வெற்றியுடன் தொடங்க வங்காளதேச அணி வரிந்து கட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 8 இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆப்கானிஸ்தான் 5 ஆட்டத்திலும், வங்காளதேசம் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    சார்ஜா மைதானம் சிறியதாகும். இருப்பினும் அங்கு தற்போது நிலவும் கடுமையாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும். இந்த ஆடுகளம் வழக்கம் போல சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். இரு அணியிலும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அங்கம் வகிப்பதால், இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்ஷாய், நவீன் உல்-ஹக், முஜீப் ரகுமான், பாசல்ஹக் பரூக்கி.

    வங்காளதேசம்: முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), அபிப் ஹூசைன், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, சபிர் ரகுமான், மெஹதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ×