search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arunachaleswarar Temple"

    • சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கியது.
    • இன்று இரவு 11.33 மணிக்கு சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரகுப்தருக்கு சன்னதி உள்ளது.

    சித்ரா பவுர்ணமியன்று மட்டும் சிதிரகுப்பருக்கு எருமை பால் அபிஷேகம் செய்யபடும். அதன்படி சித்ரா பவுர்ணமியான இன்று அம்மன் சன்னதி அருகே உள்ள சித்திர குப்தருக்கு எருமை மாட்டு பால் அபிஷேகமும் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.***திருவண்ணாமலை, மே.5-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.

    சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் இன்று இரவு 11.33 மணிக்கு சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது. இதனால் நேற்று இரவு முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப் படவில்லை. அவைகள் நகர எல்லையில் உள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர். மேலும் ஆட்டோக்களும் இயக்கப் பட்டன. நகரமெங்கும் சிறு சிறு வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    கற்பூரம் மற்றும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அவர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 110 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.


    திருவண்ணாமலை நகரம் இன்று காலை பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

    14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கி செல்கின்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பாதுகாப்புக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவச நிலையில் அண்ணாமலையாரை வணங்கிய படி செல்கின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. அங்கு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.* * *திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை செய்தனர். இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.* * *சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.* * *திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சித்திரை வசந்த உற்வசத்தையொட்டி மன்மத தகனம் நிகழ்ச்சி நடந்தது.

    • பவுர்ணமி இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று இரவு பவுர்ணமி தொடங்குவதால் வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மேலும் இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று மூலவரை தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். இதை தவிர்க்க அண்ணாமலையார் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி குங்குமம் வழங்குவதை தவிர்த்து வேறு பகுதியில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    சாமி தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்கள் வழக்கமாக கோபுரம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் திருமஞ்சன கோபுரம் வழியாகவும் பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுரம் பகுதியில் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்களின் உடமைகள் முழுமையான சோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    110 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் கிரிவல பாதைகளில் தற்காலிக கழிவறை குடிநீர் வசதி மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுரம் பகுதியில் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

    பௌர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று இரவு பௌர்ணமி தொடங்குவதால் வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மேலும் இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி அன்று மூலவரை தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். இதை தவிர்க்க அண்ணாமலையார் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி குங்குமம் வழங்குவதை தவிர்த்து வேறு பகுதியில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    சாமி தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்கள் வழக்கமாக கோபுரம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் திருமஞ்சன கோபுரம் வழியாகவும் பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுரம் பகுதியில் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்களின் உடமைகள் முழுமையான சோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    பக்தர்கள் வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 1958 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன திருவண்ணாமலை நகரத்தை சுற்றி 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. பஸ் நிலையங்களுக்கு செல்ல இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது.

    11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்த வசதியாக 55 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. 110 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    கோவில் வளாகத்தில் டாக்டர்கள் அடங்கிய 3 சிறப்பு மருத்துவ குழுக்கள் கிரிவல பாதைகளில் 85 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கோவிலுக்கு வந்து செல்ல ஆட்டோக்களுக்கான சிறப்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் கிரிவல பாதைகளில் தற்காலிக கழிவறை குடிநீர் வசதி மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளது.

    5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் 362 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சித்ரா பவுர்ணமி வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 11.59 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

    இதனால் 5-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் என்றும், அன்றைய நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.
    • திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.

    வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகைத்தருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

    இதற்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் , ரூ .50-க்கான சிறப்பு தரிசனம் என இரண்டு பிரிவுக்கும் பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.

    வரிசையாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், பேகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் பகுதிகளில் தூய்மை பணிகள் நடக்கிறது.

    கிரிவலபாதை மற்றும் கோவில் பகுதிகளில் அனுமதி பெற்ற பிறகு அன்னதானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் ஆகியவை நிறுத்த அனுமதியில்லை.

    சாலையோர சிறுவணிகர்கள் அனுமதி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமே சிறு வணிக கடைகள் அமைக்க வேண்டும்.

    இந்த ஆண்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு திட்டி வாசல் வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான சோதனை முறையும் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    குற்ற நிகழ்வகள் ஏதும் நடைபெறாமல் இருக்க பக்தர்கள் பொது மக்களின் பாதுகாப்பிற்காக 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 14 கி.மீ கிரிவலப்பாதையில் தூய்மைப் பணிகள், தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகிறது.

    அவசரகால உதவிக்காக மருத்துவக்குழு 108 அவசர கால ஊர்தி மேலும் பல்வேறு மருத்துவ சேவைகளை தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது. சித்ரா பவுர்ணமியொட்டி தமிழகம் முழுவதும் இருந்து 1,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதற்காக திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ் நிலையங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் எ.வ வேலு சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கிரிவலப் பாதையில் பாதுகாப்பு பணிகள் தற்போதே தொடங்கப்பட்டுள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் அனைத்து வசதிகளுடன் மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் தற்காலிக பஸ் நிலையங்களிலிருந்து கோவிலுக்கும், மற்ற பஸ் நிலையங்களுக்கும் ஆட்டோக்களில் செல்வர்.

    இதனால் திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி ஆட்டோக்களில் தனி நபர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

    மேலும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04175 232266 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி கட்டணமில்லா பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு வருவதற்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    முக்கியமான இடங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 20 கட்டணமில்லா பஸ்கள் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகம் மூலம் கட்டணமில்லா பள்ளி வாகனங்கள் இயக்கப்பட உள்ளது.

    பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 4-ந்தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
    • 4-ந்தேதி இரவு 10 மணியளவில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை வசந்த உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 24-ந் தேதி மாலை கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.

    விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி முதல் வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) வரை காலையில் அருணாசலேஸ்வருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், இரவில் 3-ம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகில் உள்ள பன்னீர் மண்டபத்தில் அம்பாளுடன் சாமி எழுந்தருளி பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் முக்கிய நிகழ்வான 5-ம் விழாவான நேற்று முன்தினம் இரவு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி மற்றும் ஒளிவு உற்சவம் நடந்தது.

    சிவபெருமான் ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் போது உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நின்று இருள் சூழ்ந்து விடுவதால் அந்த தியானத்தை கலைப்பதற்காக தேவர்கள் மன்மதனை சாமி மீது அம்பு விட அனுப்பி வைக்கின்றனர். மன்மதன் இருளில் மறைந்து இருக்கும் சிவபெருமானை 2 முறை தேடி அம்பு விட முயற்சி செய்யும் நிகழ்வே ஒளிவு உற்சவம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஒளிவு உற்சவத்தை யொட்டி அம்பாளுடன் சாமி வண்ண மலர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் மன்மதன் சாமியை தேடுவது போன்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சாமி மீது பொம்மை போடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.

    சித்திரை வசந்த உற்சவத்தின் நிறைவாக வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவிலில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
    • பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடந்து வருகிறது.

    முதல் நாளான நேற்று கோவிலில் அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள பன்னீர் மண்டபத்தில் சுவாமி அம்பாளுடன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளினர்.

    இதனை தொடர்ந்து அண்ணாமலையார் மகிழ மரத்தை 10 முறை தொடர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பொம்மை பூ போடும் வைபவம்

    அப்போது பாவை பொம்மை பூ போடும் வைபவம் நடந்தது.

    அண்ணாமலை யாரையும் உண்ணாமுலை அம்மனையும் சந்தோசப்படுத்தும் விதத்தில் பாவை வடிவிலான பொம்மை ஒவ்வொரு சுற்று முடிவிலும் பூ கொட்டியது.

    இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகின்ற 4-ந் தேதி வரை அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் இரவு நேரங்களில் மூன்றாம் பிரகாரத்தில் 10 முறை வலம் வரும் உற்சவம் நடக்கிறது.

    • இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.
    • 4-ந் தேதி மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை வசந்த உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.

    விழாவையொட்டி சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பந்தக்காலிற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மங்கள வாத்தியங்கள் முழங்க நடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. பின்னர் 3-ம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகில் உள்ள பன்னீர் மண்டபத்தில் அம்பாளுடன் சாமி எழுந்தருள பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் நிறைவாக வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவிலில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • மே 4-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
    • மே 4-ந்தேதி இரவு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, வருகிற 24-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது.

    அதையொட்டி, அன்று மாலை 4 மணி முதல் மாலை 5.25 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மூகூர்த்தம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, 25-ந் தேதி முதல் மே 4-ந் தேதி வரை தினமும் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இரவு சுவாமிக்கு மண்டகபடி, வீதிஉலா நடை பெறும்.

    விழாவின் நிறைவாக, மே 4-ந்தேதி காலை 10 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடக்கிறது.

    மேலும் அன்று நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் 3-ம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலை சுற்றும் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பவுர்ணமியன்றும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். சமீப நாட்களாக தினமும் பலர் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 10.17 மணியளவில் தொடங்கி நேற்று காலை 10.57 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கிரிவலப்பாதையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் கிரிவலப்பாதையில் செங்கம் சாலை சந்திப்பு பகுதியில் இருந்து அண்ணா நுழைவு வாயில் வரையில் பக்தர்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாத வகையில் தரைக்கடைகள், டீக்கடைகள், இளநீர் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சில டீக்கடைக்காரர்கள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளில் தங்கள் கடை முன்பு இருக்கைகளை போட்டு வைத்து இருந்தனர். இதனால் சாலையில் கூட்டத்துடன் நடக்க முடியாத முதியவர்கள் மற்றும் பக்தர்கள் நடைபாதையிலும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் ஈசான்ய மைதானத்தில் இருந்து ஈசான்ய லிங்கம் கோவில் வரை நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத வகையில் வரிசையாக கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் கண்டு கொள்ளவில்லை என்று பக்தர்கள் வேதனையாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக நேற்று பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோடை வெயில் தொடங்கிய காரணத்தினால் வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. கோவிலுக்குள் பொது மற்றும் கட்டண தரிசன வழி மட்டுமின்றி கோவிலுக்கு வெளியிலும் சாலை வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்று வர போக்குவரத்து துறையின் மூலம் பஸ் வசதி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் திடீரென பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் ரெயில் வந்ததும் பக்தர்கள் ஒருவரை, ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்.

    இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • பவுர்ணமி இன்று காலை 10.57 மணி வரை இருக்கிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை சுமார் 10.17 மணியளவில் தொடங்கியது. பங்குனி உத்திரம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்தவாறே இருந்தது.

    கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே கிரிவலம் செல்ல தொடங்கினர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பக்தர்கள் தரை சூட்டினால் ஓட்டமும், நடையுமாக சென்றனர்.

    கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதனிடையே மாலையில் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத படி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) காலை 10.57 மணி வரை இருந்ததால் இன்று காலை வரை விடிய, விடிய ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    • திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.56 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ×