search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amarnath yatra"

    • இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்த யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.

    இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார்.

    இதில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    • அமர்நாத் பனிலிங்கத்தை ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்கிறார்கள்.
    • இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு விவாதித்தது.

    இதில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 17ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பு, பெருமழையால் தற்காலிக ரத்து செய்யப்பட்டது.
    • சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது.

    ஜம்மு :

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் கடந்த வெள்ளி கிழமை மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. மேகவெடிப்பு ஏற்பட்டதில் சிக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 45 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    படுகாயமடைந்த நபர்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் நடந்த நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர். அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதியருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார், தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன.

    பட்டான் மற்றும் ஷரிபாபாத் பகுதியை சேர்ந்த தலா இரு மோப்ப நாய் படைகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோன்று, காஷ்மீரின் சுகாதார சேவை இயக்ககம், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்பட அனைவரின் விடுமுறையையும் ரத்து செய்தது. அதனுடன், அவர்களை உடனடியாக பணிக்கு வரும்படியும் உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தத்ரி நகரில் குந்தி வனத்தின் மலைபிரதேச பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது.

    இதனால், அந்த பகுதியில் பெருமழை கொட்டியது. இதில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சேற்றில் சில வாகனங்கள் சிக்கி கொண்டன. கார், ஜீப் உள்ளிட்டவற்றின் சக்கரங்கள் மண்ணில் புதையுண்டன. இதனை அடுத்து, வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் இயங்கப்பட்டன.

    இதுவரை நடந்த மீட்பு பணியில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் காயமடைந்து மீட்கப்பட்ட நபர்களில் ஒரு சிலர் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா நேரில் சென்று சந்தித்து அவர்களது உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார். இதன்பின் அவர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

    அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பு மற்றும் பெருமழை ஆகியவற்றால் தற்காலிக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் அடங்கிய குழு ஒன்று ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து புறப்பட்டு தரிசனத்திற்கு சென்றுள்ளனர். இதுபற்றி பக்தர்கள் கூறும்போது, எங்களுக்குள் சக்தி நிறைந்துள்ளது. பாபாவை தரிசிக்காமல் நாங்கள் திரும்பி செல்லமாட்டோம். போலே பாபா மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவரது தரிசனத்திற்காக காத்திருக்கிறோம்.

    அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் பாதுகாப்புடன் பயணிக்க ஏதுவாக சி.ஆர்.பி.எப். மற்றும் பிற பாதுகாப்பு படையினர் எங்களுக்கு வழிகாட்டி வருகின்றனர் என கூறியுள்ளனர். இதற்கு முன், நுன்வான் பகல்காம் பகுதியில் இருந்து அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கும் என ஸ்ரீ அமர்நாத்ஜி கோவில் வாரியம் தெரிவித்து இருந்தது.

    பக்தர்கள் பால்தல் முகாமில் இருந்தும் புறப்பட்டு செல்ல காத்திருக்கின்றனர். இதனை முன்னிட்டு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா பகல்காமில் உள்ள பக்தர்களை நேற்று நேரில் சென்று சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புனித யாத்திரை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணவழிகளை சீர்செய்து உள்ளோம். பக்தர்கள் வரவேண்டும். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து தருவோம் என சின்ஹா உறுதி கூறினார்.

    • தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்று இருந்தனர்.
    • நிலச்சரிவு மற்றும் கன மழையில் சிக்கி இருந்த அவர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    அமர்நாத் குகை கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியது. இந்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அமர்நாத் யாத்திரைக்காக மலை அடிவாரத்தில் கூடாரங்களில் தங்கி இருந்த ஏராளமான பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.

    அங்கு தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் பாதுகாப்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காயம் அடைந்தவர்களையும், வெள்ளத்தில் மீட்கப்பட்டவர்களையும் கொண்டு வர இலகுரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை 16 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர். அங்கு சிக்கி இருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்று இருந்தனர். நிலச்சரிவு மற்றும் கன மழையில் சிக்கி இருந்த அவர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 பெண்கள் உள்பட 25 பக்தர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர்.  அவர்கள் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த 4-ந்தேதி அமர்நாத் சென்றோம். அப்போது அங்கு நல்ல சீதோஷ்ண நிலை இருந்தது. பின்னர் அமர்நாத்துக்கு ஆறு கிலோமீட்டர் முன்னதாக உள்ள பஞ்சதரணி என்ற பகுதிக்கு சென்றோம். அன்று இரவு கூடாரத்தில் தங்கியிருந்தோம். 5-ந்தேதிகாலையில் கோவிலுக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு கீழே இறங்கும்போதே மழை பெய்ய தொடங்கி விட்டது.

    உடனடியாக அமர்நாத்தில் இருந்து கீழே இறங்குவதையும் அமர்நாத்துக்கு மேலே ஏறுவதையும் தடை செய்து விட்டனர். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு தவித்துக் கொண்டு இருந்தோம்.

    அங்குள்ள மக்களிடம் மழை எப்போது ஓயும்? எங்களை எப்போது கீழே இறங்க விடுவார்கள்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் 4 நாட்கள் கூட ஆகலாம். அதுபற்றி உறுதியாக சொல்ல முடியாது என்று கூறிவிட்டனர். 4 மணி நேரத்தில் மழை ஓய்ந்து, வெயில் அடித்ததால் எங்களை கீழே இறங்க அனுமதித்தனர். நாங்களும் அவசரமாக கீழே இறங்கி பஞ்சதரணி வந்தோம்.அங்கிருந்து ஹெலிகாப்டரில் நீல்கிரித் வந்து, நாங்கள் இறையருளால் தப்பித்து வந்து விட்டோம்.

    ஆனால் மீண்டும் 6,7-ந் தேதிகளில் பெய்த பலத்த மழையால், நாங்கள் தங்கியிருந்த பகுதி முழுவதுமே கனமழையில், மண் சரிவு அடித்து செல்லப்பட்டது என்பதை அறிந்தபோது நாங்கள் பெரும் அதிர்ச்சியை அடைந்தோம். 2 மணி நேரத்தில் 31 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. எங்களை இறைவன் தான் காப்பாற்றி இருக்கிறார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அரசு அதிகாரிகளும் பெரிதும் உதவினர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேக வெடிப்பு நிகழ்வால் ஒரு மணி நேரத்தில் 28 மிமீ மழை கொட்டியது.
    • மறு அறிவிப்பு வரும் வரை அமர்நாத் புனித யாத்திரை நிறுத்தம்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை கடந்த 30-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வந்தனர்.

    இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கியது.

    #WATCH | Mountain Rescue Team (MRT) rescue work under progress after a cloud burst occurred in the lower reaches of the Amarnath Cave

    இந்நிலையில், அமர்நாத் குகை அருகே நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு நிகழ்வால் கடும் மழை கொட்டியது. அமர்நாத் குகை கோவிலுக்கு மேலே உள்ள பகுதியில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை 31 மிமீ மழை பெய்ததாக என்று வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் உருவான வெள்ளப்பெருக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த 20க்கு மேற்பட்ட பக்தர்களின் முகாம்களை அடித்துச் சென்றது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 48 பேர் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை காணவில்லை என கூறப்படுகிறது.  

    #WATCH | Rescue operations are being carried out in cloudburst affected area at the lower Amarnath Cave site

    அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் சமூக சமையலறைகள் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதாக, காவல்துறை. அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. இரவு நேரத்திலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.75 மீட்புப் பணியாளர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் இதில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அமர்நாத் புனித யாத்திரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் மேகவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
    • மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. வெள்ளத்தில் பல முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் மாயமாகினர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அமர்நாத் யாத்திரையின்போது மேக வெடிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

    • அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது.
    • தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வருகின்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். கடந்த 2 ஆண்டாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த ஆண்டு கடந்த 30-ந்தேதி முதல் பனிலிங்க யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கியது.

    இந்நிலையில், அமர்நாத் யாத்திரை குகை அருகே இன்று ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த 20க்கு மேற்பட்ட முகாம்களை வெள்ளம் அடித்துச் சென்றது.

    இதில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    தகவலறிந்து இந்தோ திபெத்திய போலீஸ் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பனி நடைபெற்று வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • பக்தர்கள் யாரும் யாத்திரை செல்லமுயற்சி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த 30-ந்தேதி முதல் பனிலிங்க யாத்திரை மீண்டும் தொடங்கியது. வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பக்தர்கள் யாரும் யாத்திரை செல்லமுயற்சி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • அமர்நாத் பனிலிங்க யாத்திரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்கியது.
    • டெல்லியில் இருந்து பக்தர்கள் ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம்.

    ஸ்ரீநகர், காஷ்மீர் அமர்நாத் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் 60 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பனிலிங்கத்தை தரிசித்து செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் பனிலிங்க யாத்திரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூன் 30) தொடங்கியது.

    அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வருடாந்திர அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு டெல்லியில் இருந்து ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம் என்ற தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமர்நாத் கோவில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிதிஷ்வர் குமார் கூறியதாவது:- இந்த ஆண்டு டெல்லியில் இருந்து பக்தர்கள் ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம். இவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகருக்கும் பிறகு ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பஞ்சதாரணி வரையும் சென்று அங்கிருந்து குகைக்கோவிலுக்கு செல்லலாம்.

    அதன்பின்னர், வழிபாட்டுக்குப் பிறகு ஹெலிகாப்டரில் ஸ்ரீநகர் திரும்பினால், அங்கு நள்ளிரவு வரை டெல்லிக்கு விமான சேவை உள்ளது. மாறாக, யாத்ரீகர்கள் ஸ்ரீநகரில் இருந்து நீல்கிராத் சென்றும் யாத்திரையை முடிக்கலாம். இதற்கு முன் 2 இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கப்பட்டது. தற்போது 4 இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கப்படுகிறது. ஸ்ரீநகர் - நீல்கிராத் மற்றும் ஸ்ரீநகர் - பஹல்காம் இடையே ஒரு வழி பயணக் கட்டணம் முறையே ரூ.11,700 மற்றும் ரூ.10,800 ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெற்கு காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு.
    • பயங்கரவாதிகளை எதிர்கொள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி.

    ஸ்ரீநகர்:

    இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தெற்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் புனித யாத்திரை இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ந் தேதிவரை நடைபெறுகிறது.

    முன்னதாக இந்த யாத்திரையில் பங்கேற்கும் முதல் குழுவின் பயணத்தை நேற்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து கவர்னர் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை நிகழ்ச்சியில் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பக்தர்கள் செல்லும் பாதையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக தெற்கு காஷ்மீரின் குல்காம், சோபியான், புல்வாமா மற்றும் அனந்த்நாக் ஆகிய நான்கு மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    மேலும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு மற்றும் ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணும் முறைகளும் பின்பற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாதுகாப்பு படைகளின் தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதல் அணுகுமுறை காரணமாக ஜூன் மாதத்தில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    • அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.
    • கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    ஸ்ரீநகர்:

    தெற்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை நாளை தொடங்குகிறது.

    ஆகஸ்டு 11-ந்தேதி யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்கம் மற்றும் பல்டால் முகாம்களில் புனித யாத்திரை தொடங்குகிறது.

    இந்த நிலையில் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் குழுவின் முதல் பகுதியை இன்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து கவர்னர் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார். யாத்ரீகர்கள் குழு பலத்த பாதுகாப்புடன் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் காஷ்மீரில் உள்ள முகாம்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஜம்மு மேயர் சந்தர்மோகன்குப்தா, பா.ஜனதா தலைவர் தேவேந்தர நாரானா, தலைமை செயலாளர் அருண்குமார் மேத்தா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமா்நாத் புனித யாத்திரை வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.
    • ஜம்மு நகரில் 5,000 போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிப்பதாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை நடைபெறுகிறது.

    அமா்நாத் புனித யாத்திரை வரும் 30-ம் தேதி தொடங்கி 43 நாட்கள் நடைபெற உள்ளது. தெற்கு காஷ்மீாின் பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு வழிகளில் யாத்திரை தொடங்க உள்ளது.

    இந்நிலையில், அமா்நாத் யாத்திரைக்காக ஜம்மு நகா் முழுவதும் 5 ஆயிரம் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். இதுதொடா்பாக போலீசார் கூறியதாவது:

    ஜம்மு நகாில் உள்ள முகாம்கள் மற்றும் யாத்திரையில் பங்குபெறும் பக்தா்கள் தங்கும் முகாம்களில் போதிய அளவு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு பாதுகாப்பு மிகப்பொிய சவாலாக உள்ளது. இந்த பகுதிகளில் பயங்கரவாதிகள் மற்றும் டிரோன்கள் மூலம் வீசப்படும் குண்டுகள் ஆகியவற்றால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது.

    இங்குள்ள பகுதிகளில் 5 பதிவு மையங்கள், 3 டோக்கன் மையங்கள் மற்றும் 32 தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், அமா்நாத் செல்லும் வாகனங்கள் மற்றும் பக்தா்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, விரைவு எதிர்வினை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது என தொிவித்தாா்.

    கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டாக அமா்நாத் புனித யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×