search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airtel"

    • ஏர்டெல் நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகை பலன்களை ஏர்டெல் அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவச 5ஜி டேட்டாவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் அனுபவிப்பதை ஊக்குவிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

    இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா பெறுவது எப்படி?

    ரூ. 239 மற்றும் இதை விட அதிக தொகை கொண்ட பிரீபெயிட் சலுகை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தகுதியுடைய பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் ஆப் (Airtel Thanks App) சென்று இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

    பயனர்கள் இனி அதிவேக, பாதுகாப்பு நிறைந்த 5ஜி பிளஸ் சேவையை அனுபவிக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அனைத்து சலுகைகளிலும் டேட்டா கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டதால், பயனர்கள் டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இன்றி பயன்படுத்தலாம்.

    • ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி வெளியீட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • 5ஜி வெளியீடு மட்டுமின்றி பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.

    ஏர்டெல் நிறுவனம் இரண்டு புது பிரீபெயிட் சலுகைகளை இந்திய பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புது சலுகைகளின் விலை ரூ. 489 மற்றும் ரூ. 509 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் முறையே 50 ஜிபி மற்றும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இவற்றின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

    புதிய ரூ. 489 ஏர்டெல் சலுகைகள் 30 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 50 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஏர்டெல் ரூ. 509 சலுகையில் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், 60 ஜிபி அதிவேக டேட்டா, 300 எஸ்எம்எஸ், ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இரு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாட்டை கடந்ததும், எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ. 1, 1MB டேட்டாவுக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

    இதுதவிர இரு சலுகைகளிலும் ஏர்டெல் தேங்ஸ் பலன்களான மூன்று மாதங்களுக்கு அப்போலோ 24|7 சர்கிள் சந்தா, ஃபாஸ்டேகிற்கு ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன் மற்றும் வின்க் மியூசிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மற்றும் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

    • பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை தொடர்ச்சியாக மாற்றியமைத்து வருகிறது.
    • விலை உயர்வு தவிர நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளிலும் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த விலை பிரீபெயிட் சலுகைகளின் விலையை உயர்த்தி இருக்கிறது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஒன்பது டெலிகாம் வட்டாரங்களில் விலை உயர்வை அமலுக்கு கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஹரியானா மற்றும் ஒடிசாவில் குறைந்த விலையில் கிடைத்த பிரீபெயிட் சலுகை விலையை 57 சதவீதம் அதிகரித்தது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் குறைந்த பட்ச பிரீபெயிட் சலுகை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏர்டெல் ரூ. 99 சலுகை விலை தற்போது ரூ. 155 ஆக அதிகரித்துள்ளது.

    ஏர்டெல் ரூ. 99 விலை சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி, 200MB டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் போன்ற பலன்களை வழங்கியது. தற்போது புதிய குறைந்த விலை பிரீபெயிட் சலுகையான ரூ. 155 வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

    இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இவை எந்தெந்த பகுதிகள் என்ற விவரம் தற்போது மர்மமாகவே உள்ளது.

    "சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எங்களின் குறிக்கோளை அடையும் வகையில், நாங்கள் மீட்டர்டு சலுகையை நிறுத்திவிட்டு, ரூ. 155 விலையில் எண்ட்ரி லெவல் சலுகையை அறிவித்து இருக்கிறோம். இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் உள்ளன. இது பயனர்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்கும்," என ஏர்டெல் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

    • வீட்டில் பொழுதுபோக்கிற்கு அத்தியாவசிய சாதனமாக ஸ்மார்ட் டிவி-க்கள் மாறி விட்டன.
    • குறைந்த செலவில் ஸ்மார்ட் டிவி அனுபவத்தை வழங்கும் அசத்தல் திட்டத்தை ஏர்டெல் அறிவித்து இருக்கிறது.

    ஏர்டெல் இந்தியா நிறுவனம் பயனர்கள் தங்களின் சாதாரண டிவி-யை ஸ்மார்ட் டிவி-யாக மாற்றிக் கொள்ளும் வசதியை ரூ. 1500-க்கு வழங்குகிறது. வீட்டில் பொழுதுபோக்கிற்கான அத்தியாவசிய சாதனமாக ஸ்மார்ட் டிவி-க்கள் மாறி வருகின்றன. சமீப காலங்களில் ஒடிடி சேவை அதிக பிரபலம் அடைந்து விட்ட நிலையில், பல்வேறு வீடுகளில் ஒன்றாக அமர்ந்து டிவி பார்க்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

    அந்த வகையில், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் பயனர்களின் சாதாரண டிவி-யை ஸ்மார்ட் டிவி-யாக மாற்றுகிறது. எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் கொண்டு ஒடிடி தரவுகளை டிவி-யில் ஸ்டிரீம் செய்து பார்க்க முடியும். ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் சாதனமான ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் விலை ரூ. 1500 என மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 650 ஆகும். எனினும், தற்போது இதன் விலை ரூ. 1500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இதனுடன் ஏர்டெல் மற்ற சேவைகளான ஏர்டெல் பிளாக் ஒருங்கிணைத்து பெற முடியும். ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் சோனி லிவ், அமேசான் பிரைம், இரோஸ் நௌ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் பல்வேறு ஒடிடி தளங்களை கொண்ட செட் டாப் பாக்ஸ் ஆகும். இதில் 5 ஆயிரத்திற்கும் அதிக செயலிகள் உள்ளன.

    மேலும் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், 500-க்கும் அதிக டிவி சேனல்கள், கூகுள் அசிஸ்டண்ட் மூலம் சர்ச் வசதி, ஆண்ட்ராய்டு டிவி 9 உள்ளது. இந்த செட் டாப் பாக்ஸ் தரவுகளை 4K ரெசல்யூஷனிலும் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் ரிமோட் பல்வேறு ஒடிடி தளங்களுக்கான ஹாட்கீ கொண்டுள்ளது. ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது அருகாமையில் உள்ள ரிடெயில் ஸ்டோர் சென்று ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ்-ஐ வாங்கிக் கொள்ளலாம்.

    • பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • இது மட்டுமின்றி தனது பிரீபெயிட் சலுகை மற்றும் அதன் பலன்களையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே வருகிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை உயர்த்தி இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட குறைந்தபட்ச ஏர்டெல் சலுகை விலை தற்போது 57 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய விலை ரூ. 155 என மாறி இருக்கிறது. இந்த சலுகை விவரங்கள் ஏர்டெல் ஹரியானா மற்றும் ஒடிசா மாநில வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.

    மேற்படி ரூ. 99 விலையில் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகையை ஏர்டெல் அதிரடியாக நீக்கி இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 200MB டேட்டா, அழைப்புகள் நொடிக்கு 2.5 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது. தற்போது ஹரியானா மற்றும் ஒடிசாவில் ஏர்டெல் குறைந்தபட்ச ரிசார்ஜ் விலை ரூ. 155 ஆகும். இதில் 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.

    தற்போது சோதனை அடிப்படையில் இந்த சலுகை இரு பகுதிகளில் மட்டும் வழங்கப்படுகிறது. சோதனை முடிவுக்கு ஏற்ப இந்த சலுகை நாடு முழுக்க வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 155-க்கும் குறைந்த விலையில் 28 நாட்கள் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா பலன்களை வழங்கும் அனைத்து சலுகைகளையும் நீக்க ஏர்டெல் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய மாற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் எண்ணை ஆக்டிவேட் செய்த நிலையில் வைத்திருக்க ரூ. 155 விலையில் ரிசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். மாதாந்திர சலுகையில் எஸ்எம்எஸ் சேவையை பெறவாவது ரூ. 155 விலை சலுகையை ரிசார்ஜ் செய்வது அவசியமாகி விடும். 

    • இந்திய டெலிகாம் சந்தையில் புதிய தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி வெளியிடப்பட்டு வருகின்றன.
    • முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை பல்வேறு நகரங்களில் அறிமுகம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளன.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு இந்திய நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் தற்போது குருகிராமில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மேற்கு வங்கம் முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் முதலில் 5ஜி வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து வடக்கு வங்கம், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 5ஜி வழங்கப்பட இருக்கிறது.

    இதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் கொல்கத்தா முழுக்க 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    குருகிராம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, ஐதராபாத், வாரனாசி, சென்னை, சிலிகுரி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் பானிபட் போன்ற பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. குருகிராம் முழுக்க ஏர்டெல் 5ஜி இன்னும் வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது.

    நாடு முழுக்க பத்து நகரங்களில் ஏர்டெல் 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோ 5ஜி சேவைகள் எட்டு நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ஏர்டெல் நிறுவனம் 2024 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 5ஜி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போது 5ஜி சேவையை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்குள் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்குவதாக வி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை 5ஜி வெளியீடு பற்றி வி எந்த தகவலையும் வழங்கவில்லை.

    • ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் சில சலுகைகளை அதிரடியாக நீக்கியது.
    • நீக்கிய சலுகைகளுக்கு மாற்றாக சிலவற்றை ஏர்டெல் மாற்றியமைத்து வருகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் ரூ. 199 விலை சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது. முன்னதாக சில பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக நீக்கிய ஏர்டெல் சிலவற்றின் பலன்களை மாற்றியமைத்து மீண்டும் அதே விலையில் அறிவித்து வருகிறது.

    ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஏர்டெல் ரூ. 199 விலை சலுகையில் தினமும் 1ஜிபி டேட்டா, 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. பின் இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டியும் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    ஏர்டெல் ரூ. 199 சலுகையில் தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி, 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச ஹெலோ டியூன்ஸ், வின்க் மியூசிக் சந்தா, உள்ளூர் எஸ்எம்எஸ் ரூ. 1, எஸ்டிடி எஸ்எம்எஸ் ரூ. 1.5 பைசாவுக்கு வழங்கப்படுகிறது.

    நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் 1MB-க்கு ரூ. 50 பைசா வசூலிக்கப்படும். மொத்தத்தில் 300 எஸ்எம்எஸ் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. எனினும், இது தினமும் அதிகபட்சம் 100 ஆகவே நிர்ணயம் செய்யப்பட்டு உளள்ளது. சலுகை தீர்ந்ததும், அதன் பலன்கள் தானாகவே காலாவதியாகி விடும். 

    • ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் எந்தெந்த மாடல்களில் ஏர்டெல் 5ஜி கனெக்டிவிட்டி கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
    • இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுக்க எட்டு நகரங்களில் 5ஜி கனெக்டிவிட்டியை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. 5ஜி சேவை வெளியீட்டை தொடர்ந்து எந்தெந்த மாடல்களில் ஏர்டெல் 5ஜி சேவைகளை பயன்படுத்த முடியும் என்ற பட்டியலையும் ஏர்டெல் வெளியிட்டு உள்ளது.

    ஏர்டெல் மட்டுமின்றி ஒப்போ நிறுவனமும் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் அனைத்து 5ஜி மாடல்களிலும் 5ஜி கனெக்டிவிட்டியை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரனாசி நகரங்களில் வசிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள நெட்வொர்க் செட்டிங்ஸ்-ஐ ஏர்டெல் 5ஜி-க்கு மாற்றிக் கொண்டு அதிவேக 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.

    ஒப்போ நிறுவனம் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்வில் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி எக்ஸ்பீரியன்ஸ் அனுபவத்தை ஒப்போ வழங்கியது. இது தவிர முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் மேற்கொண்ட சோதனையில் 1Gbps வரையிலான இணைய வேகத்தை ஒப்போ சாதனங்கள் பதிவு செய்தன.

    • பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
    • ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் விரைவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக பாரதி ஏர்டெல் விளங்குகிறது. 5ஜி சேவைகளை பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பாரதி ஏர்டெல் 5 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கி வருகிறது. பிரீபெயிட் பயனர்கள் மட்டும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் லாக்-இன் செய்ய வேண்டும்.

    ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் பயனர்கள் ரிவார்டுகளை பெறுவது, மின் கட்டணம் செலுத்துவது, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியை இயக்குவது, மொபைல் ரிசார்ஜ் என ஏராளமான சேவைகளை பெறலாம். குறிப்பாக தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் 5 ஜிபி டேட்டா 1 ஜிபி வீதம் ஐந்து வவுச்சர்களாக வழங்கப்பட உள்ளன.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் புதிய பிரீபெயிட் பயனர்களுக்கு 5 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குகிறது. இதற்கு பயனர்கள் புதிதாக ஏர்டெல் இணைப்பை பெற வேண்டும். அதன் பின் ஏர்டெல் தேங்ஸ் செயலியை இன்ஸ்டால் செய்து ஏர்டெல் மொபைல் நம்பர் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். பின் செயலியின் மை கூப்பன்ஸ் பகுதியில் 5 ஜிபி டேட்டா வழங்கும் வவுச்சர்கள் மூலம் இலவச டேட்டாவை பெறலாம்.

    புதிதாக ஏர்டெல் சேவையில் இணையும் பிரீபெயிட் பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் லாக்-இன் செய்ததும் இலவச டேட்டா வழங்கப்பட்டு விடும். இந்த இலவச டேட்டா ஐந்து வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படும். ஒவ்வொரு வவுச்சரிலும் 1 ஜிபி டேட்டா வழங்கும். இந்த வவுச்சர்களை 90 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இது மட்டுமின்றி வெற்றிகரமாக மற்றவர்களையும் ஏர்டெல் சேவையில் இணைய வைக்கும் பட்சத்தில் ரூ. 100 வரை பெற முடியும். ஏர்டெல் தேங்ஸ் செயலியில் ஏர்டெல் பிரீபெயிட் சிம்-ஐ நண்பருக்கு பரிந்துரை செய்யும் இணைய முகவரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏர்டெல் சிம் வாங்க நண்பர் நீங்கள் அனுப்பிய இணைய முகவரியை பயன்படுத்தினால், ரூ. 100 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும்.

    • ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்து புதிதாக இரண்டு சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இரண்டு புது சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 519 மற்றும் ரூ. 779 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவை தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன. இத்துடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகின்றன.

    பயனர்கள் மத்தியில் அதிக பிரபலம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால் புது சலுகைகள் பற்றிய அறிவிப்பு நல்ல வரவேற்பை பெறும். சமீப காலங்களில் ரிசார்ஜ் கட்டணங்கள் அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், குறைந்த விலை சலுகைகள் சற்றே ஆறுதலாக அமைந்துள்ளன.

    ரூ. 519 மற்றும் ரூ. 779 பிரீபெயிட் சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள், மூன்று மாதங்களுக்கு 24\7 சர்கிள் சந்தா, இலவச ஹெலோ-டியுன்கள் மற்றும் இதர பலன்களை வழங்குகின்றன.


    ஏர்டெல் ரூ. 519 பலன்கள்:

    புதிய ஏர்டெல் ரூ. 519 சலுகை அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. இத்துடன் 90 ஜிபி டேட்டா, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

    ஏர்டெல் ரூ. 779 பலன்கள்:

    ஏர்டெல் ரூ. 779 சலுகையும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. இத்துடன் 135 ஜிபி டேட்டா, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

    இரண்டு புதிய சலுகைகளுடன் ஏர்டெல் தேங்ஸ் பலன்கள், மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24\7 சர்கிள் சந்தா, பாஸ்டேக் மீது ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோ-டியுன்கள், விண்க் மியூசிக் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்த போதிலும் 64Kbps வேகத்தில் இணைய சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம். இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் செயலி மற்றும் ஏர்டெல் வலைதளத்தில் கிடைக்கின்றன.

    • ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • மேலும் இந்தியாவில் 5ஜி சேவை எப்போது வெளியிடப்படும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் 5ஜி சேவைகளை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. அடுத்த தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டியை நாடு முழுக்க அறிமுகம் செய்ய ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. 2024 வாக்கில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவைகளை வழங்க ஏர்டெல் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    5ஜி வெளியீடு குறித்து ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 5ஜி வெளியீடு பற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார். 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடும் நாட்டின் முதல் நிறுவனமாக ஏர்டெல் இருக்கும் என கூறப்படுகிறது.


    ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபல் விட்டல், இந்தியாவில் 5ஜி சேவைகள் இந்த மாதமே வெளியிடப்படும் என தெரிவித்து இருக்கிறார். சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 050 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது.

    இந்தியாவில் 5ஜி சேவைகளை 5 ஆயிரம் நகரங்களில் இருந்து துவங்க திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் சிஇஒ தெரிவித்து இருக்கிறார். 2024 வாக்கில் நாட்டின் ஊரக பகுதிகளிலும் 5ஜி சேவைகளை வெளியிட ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது. இதனுடன் 17 ஒ.டி.டி. சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.


    ஏர்டெல் நிறுவனம் மூன்று புது பிராட்பேண்ட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஜியோஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய கனெக்டெட் வீடுகளுக்கான பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது என ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

    புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகள் விலை முறையே ரூ. 699, ரூ. 1099 மற்றும் ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை முறையே 40Mbps, 200Mbps மற்றும் 300Mbps வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றுடன் 14 பிரீமியம் ஒ.டி.டி. சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ரூ. 1099 சலுகையுடன் அமேசான் பிரைம் வீடியோ, ரூ. 1599 சலுகையுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.

     ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை

    ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சேவையில் சோனிலிவ், லயன்ஸ்கேட், ஹொய்சொய், மனோரமாமேக்ஸ், ஷீமாரூ, அல்ட்ரா, ஹங்காமாபிளே, டிவோடி.வி., க்ளிக், நம்மஃப்ளிக்ஸ், டாலிவுட் மற்றும் ஷார்ட்ஸ் டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸ்-இல் 350-க்கும் அதிக டி.வி. சேனல்களை ஒற்றை சாதனம் மற்றும் ரிமோட்டில் வழங்குகிறது. இந்த பாக்ஸ்-க்கான கட்டணம் ரூ. 2 ஆயிரம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

    பிராட்பேண்ட் சலுகைகளுடன் 3333GB டேட்டா வழங்கப்படும். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதல் மாதத்திற்கான வாடகையை மற்றும் இன்ஸ்டாலேஷனை இலவசமாக வழங்குகிறது.
    ×