search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water conservation"

    • மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்று சிறப்புரையாற்றினார்.
    • சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் நீர் நிர்வாகம், நீர் சிக்கனம், நீர் மூழ்கி மோட்டார் மற்றும் ஆழ்துளை கிணறு பராமரிப்பு பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்று சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக ஆத்மா திட்ட துணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கி ஆத்மா திட்டம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினார்.

    பொறியியல் மற்றும் நிலத்தடி நீர் பிரிவு துணை இயக்குனர் பிரபாகரன் நீர் சிக்கனம் மற்றும் நீர் சேமிப்பு பற்றி விரிவாக விளக்கினார் .

    வேளாண் அதிகாரி ஜீவா ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ,சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மதகடிப்பட்டு, வாதானூர்,திருவாண்டார் கோவில் , கலிதீர்த்தாள் குப்பம்,திருபுவனை,சன்னியாசிக்குப்பம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்நத விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம், மழை நீர் உயிர் நீர், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான் பவன் சாலையில் நடைபெற்றது. பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் , மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கூடுதல் கலெக்டர் மதுபாலன் , வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தி பேரணி கடலூர் அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன் ஹாலில் வந்து முடிவடைந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் ஊர்வலத்தில் நடந்து வந்தனர். மேலும் பேரணி முழுவதும் தண்ணீர் அவசியத்தை குறித்தும், மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம், மழை நீர் உயிர் நீர், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் வாகனங்களில் தெரிவித்து வந்தனர். அப்போது நகர் நல அலுவலர் (பொறுப்பு)ஜாபர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சரஸ்வதி வேலுசாமி, ஆராமுது, சரிதா, செந்தில் குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா தண்ணீரை பாதுகாப்பது குறித்து பேசினார்.
    • தண்ணீர் வரி செலுத்துகிறோம், மின்சார வரி உள்பட மீதமுள்ள வரிகளை நீங்கள் தள்ளுபடி செய்யுங்கள்.

    மத்திய பிரதேசம் மாநிலம், ரேவாவில் தண்ணீரைப் பாதுகாப்பது குறித்து ரேவா தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஜனார்தன் மிஸ்ரா சர்ச்சைக்குறிய வினோதமான கருத்தை தெரிவித்துள்ளார்.

    ரேவா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ் கபூர் ஆடிட்டோரியத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா தண்ணீரை பாதுகாப்பது குறித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்று குட்கா சாப்பிடுங்கள், மதுபானம் அருந்துங்கள், திண்ணரை முகருங்கள், சுலேசன் (ஒரு வகையான பிசின்) அல்லது அயோடெக்ஸ் என்று எது வேண்டும் என்றாலும் சாப்பிடுங்கள். ஆனால் தண்ணீரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்.

    எந்த அரசு தண்ணீர் வரியை தள்ளுபடி செய்வதாக அறிவிதாலும், நாங்கள் தண்ணீர் வரி செலுத்துகிறோம், மின்சார வரி உள்பட மீதமுள்ள வரிகளை நீங்கள் தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிஸ்ரா தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவது இது முதல் முறை அல்ல. அவர் செய்யும் எதிர்பாராத மற்றும் விசித்திரமான செயல்கள் மூலம் தலைப்புச் செய்தியில் தொடர்ந்து இடம் பெறுகிறார். சமீபத்தில், அவர் தனது கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    ×