search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banners"

    • ஆம் ஆத்மி கட்சியினர் இன்று நூதன போராட்டத்தை நடத்தினர்.
    • சிங்காரவேலர், காமராஜர், அண்ணா, உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மனு கொடுத்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பேனர் தடை சட்டம் இருந்தாலும் சாலை யோரங்கள் தொடங்கி சிக்னல்களை மறைத்து டிஜிட்டல் பேனர்கள் அதிக ளவில் வைக்கப்படுகின்றன.

    டிஜிட்டல் பேனர்களால் நகரின் அழகு குறைந்தாலும், அதிகாரிகள் எவ்வித நட வடிக்கையும் எடுப்பதில்லை.

    இதையடுத்துஆம் ஆத்மி கட்சியினர் இன்று நூதன போராட்டத்தை நடத்தினர்.

    டிஜிட்டல் பேனர்களை சட்டையாக அணிந்து தலைவர்களின் பிறந்தநாள் எங்களுக்கு இறந்த நாளா? தலைவர்களே சிந்தியுங்கள். என்ற வாசகத்துடன் சிங்கார சிலையிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பயணம் காமராஜர் சிலை முன்பு முடிவடைந்தது.

    முடிவாக சிங்காரவேலர், காமராஜர், அண்ணா, உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மனு கொடுத்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.

    • இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
    • கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், அனுமதி இன்றியும் வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், வளைவுகள், மன்றங்கள், எட்டாத உயரத்தில் இருக்கும் கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விளம்பர பதாகைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
    • விளம்பர பதாகைகள் வைத்துக் கொள்ள முறையான அனுமதி பெற வேண்டும்.

    வெள்ளகோவில்:

    பொதுமக்களின் புகாரின் பேரில் வெள்ளகோவில் நகராட்சி செம்மாண்டம்பாளையம் ரோடு பிரிவில் பொதுமக்களுக்காக இடையூறாக நகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் எஸ். வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-

    வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் விளம்பர பதாகைகள் வைத்தாலோ அல்லது நகராட்சி அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தாலோ நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் முறையான அனுமதி பெற்று பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    • பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி பெயரில் வழிநெடுகிலும் பேனர், பதாகைகள் வைக்கப்பட்டது.
    • நயினார் பாலாஜி தலைமையில் பா.ஜ.க. தொண்டர்கள் எஸ்.என். ஹைரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கிய முதல் கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது.

    இன்று மாலை நெல்லைபேட்டை பாறையடி காலனியில் இருந்து தொண்டர் சன்னதி வழியாக டவுன் ஆர்ச் வரை அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொள்கிறார்.

    இதையொட்டி அண்ணாமலை மற்றும் மத்திய மந்திரியை வரவேற்று டவுன் எஸ்.என். ஹைரோடு பகுதியில் பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி பெயரில் வழிநெடுகிலும் பேனர், பதாகைகள் வைக்கப்பட்டது.

    இதையறிந்த போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆவுடையப்பன், காமேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் டவுன் பகுதிக்கு சென்று, அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற உத்தரவிட்டனர். அதன் பேரில் அங்குள்ள ஒரு பேனரை போலீசார் அகற்றினர்.

    இதையறிந்த நயினார் பாலாஜி தலைமையில் பா.ஜ.க. தொண்டர்கள் எஸ்.என். ஹைரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆவுடையப்பன், காமேஸ்வரன் ஆகியோர் சென்று பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனுமதி இல்லாமல் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய முறையில் அனுமதி வாங்க வேண்டும். இல்லையென்றால் அதனை அகற்றுவோம் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பேனர்களுக்கு அனுமதி வாங்கும் ஏற்பாடுகளை தொடங்கினர்.

    • தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பேனர்கள் கிழிந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அவற்றையும் அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது.

     நெல்லை:

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதனை மீறி வைப்பவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை விதித்தல் உள்ளிட்ட நடவடி க்கை களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதனை ஒட்டி நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பதாகைகள் உள்ளிட்ட வற்றை அகற்றும் பணி மாநகராட்சி அதிகாரி களால் மேற்கொள்ளப்பட்டு வருகி றது.

    இந்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மாடி பகுதியில் இரும்பு கம்பிகளால் சட்டங்கள் அமைக்கப்பட்டு அதில் விளம்பர பதாகைகள் வைத்திருப்பவர்கள் உரிமம் பெற்று வைத்துள்ளனரா? அவ்வாறு வைத்திருந்தால் அவர்களுக்கான காலக்கெடு முடிந்து விட்டதா? என்பதையும் அறிந்து அவற்றை கண்காணிக்க கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். மேலும் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் காற்றின் வேகத்தால் பேனர்கள் கிழிந்து சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் நெல்லை மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார் வையில் பேனர்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தச்சை மண்டலத்தில் சுகாதார அலுவலர் சாகுல் அமீது மேற்பார்வையில் சந்திப்பு பகுதியில் வணிக நிறுவனங்கள் மீது அமைக்கப்பட்டுள்ள பேனர்களை அப்புறப் படுத்தும் பணி இன்று நடைபெற்றது. அதேபோல் நெல்லை மண்டலத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் அனுமதி இன்றி வைக்கப் பட்டுள்ள பேனர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • சென்னை மாநகரம் முழுவதும், சாலையோர பகுதிகளில் விளம்பர பலகைகள், பேனர்கள் அதிகரித்து வருகின்றன.
    • அத்துமீறி விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை மற்றும் கோவையில் பேனர்கள் விழுந்து 4 பேர் பலியானார்கள். இதை தடுப்பதற்காக பேனர்கள் வைக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் அபராதம் முதல் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வரை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    மேலும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வைத்தாலும் கட்டிட உரிமையாளரே பொறுப்பு என்பது விதி.

    கடுமையான சட்டங்கள் வந்தும் கூட பேனர் வைக்கும் கலாச்சாரம் கட்டுப்படவில்லை. தலைநகர் சென்னையிலேயே பிரதான சாலைகளில் ஏராளமான பேனர்கள் வரிசை கட்டி வைக்கப்பட்டுள்ளன.

    அண்ணா சாலை, தேனாம்பேட்டை சிக்னல் பகுதிகளில் உயர்ந்த கட்டிடங்களின் மீது ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் மிக முக்கிய சாலையாக, அண்ணா சாலை திகழ்ந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரம் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த சாலையை பல லட்சம் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலையில் தற்போது திடீரென விளம்பர பலகைகள், 'பேனர்'கள் வைக்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை ஏராளமான விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இதில், பெரும்பாலான விளம்பர பலகைகள், பல மாதங்களாக உள்ளன. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அண்ணா மேம்பாலம் அருகில் பல விளம்பர பலகைகள், மாதக்கணக்கில் வைக்கப்பட்டு உள்ளன.

    முக்கிய சாலை பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகைகள் மாநகராட்சியின் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டு உள்ளதா? அல்லது தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்டு உள்ளதா என சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக உள்ள இந்த விளம்பர பலகைகளை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சென்னை மாநகரம் முழுவதும், சாலையோர பகுதிகளில் விளம்பர பலகைகள், பேனர்கள் அதிகரித்து வருகின்றன. விளம்பர பலகைகள், பேனர்களின் எண்ணிக்கை பல மடங்காக பெருகிக்கொண்டு செல்கிறது. சென்னை மாநகரின் முக்கிய பகுதியான அண்ணா சாலையில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பலத்த காற்றில் திடீரென விளம்பர பலகைகள் சரிந்து விழுந்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து உருவாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலித்து, அனுமதி பெறாத விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அத்துமீறி விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.
    • சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 28 வார்டுகளில் பொது மக்களுக்கு இடையூறாக பஸ் நிலையம், முக்கிய வீதி, பஜார், தெருக்களில், சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனை சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

    அதன்படி பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர். மேலும் அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம் விதித்து போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    • தனியார் நிறுவன விளம்பர பேனர்கள் உள்ளிட்ட ஏராளமான பேனர்கள் ஆங்காங்கே மிக உயரமாகவும், மிகவும் நீளமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.
    • இந்த நிலையில், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் 6-ந் தேதி காலைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை அகற்றி கொள்ளுமாறு தெரிவித்திருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள பரமத்தி, வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும், கபிலர்மலை, பரமத்தி, மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளிலும் சாலை ஓரங்களில் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூராகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் கண்ணீர் அஞ்சலி, பிறந்தநாள் வாழ்த்து, கோவில், கட்சி விளம்பரங்கள், தனியார் நிறுவன விளம்பர பேனர்கள் உள்ளிட்ட ஏராளமான பேனர்கள் ஆங்காங்கே மிக உயரமாகவும், மிகவும் நீளமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் 6-ந் தேதி காலைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை அகற்றி கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், சாலை ஓரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு அகற்றப்படாமல் இருந்த அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் நேற்று மாலை வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

    பரமத்தி பேரூராட்சியில் பஸ் ஸ்டாப் அருகில் மற்றும் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. அதேபோல் பரமத்திவேலூர்-ஜேடர்பாளையம் 4 ரோடு சாலைகளிலும், முக்கோண பூங்கா, சுல்தான்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வைத்திருந்த விளம்பர பிளக்ஸ் பேனர்களை வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    அதேபோல் பொத்தனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும், 4 ரோடு சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றினர்.

    இனி வரும் நாட்களில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறியும், பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதி இன்றியும் பேரூராட்சி பகுதிகளில் வைக்கப்படும் விளம்பர பிளக்ஸ் பேனர்களின் உரிமையா ளர்கள் மீது அபராதம் விதித்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பலத்த காற்று மழையால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • பேனர் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் பகுதியில் நேற்று மாலையி லிருந்து நள்ளிரவு வரை திடீர் தொடர் மழையாக பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக சாலை ஓரங்களிலும் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.

    மேலும் இடி மின்னல் இருந்து வந்ததால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக புதுக்குப்பம், பிள்ளையார்குப்பம் பகுதியில் பாதித்திருந்தது. பிறகு அவ்வப்போது மின் துறை ஊழியர்கள் சரி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

    கிருமாம்பாக்கம் கடலூர்-புதுவை ரோட்டில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல கன்னிய கோவில், முள்ளோடை பகுதியிலும் இருந்தது. இது சம்பந்தமாக பொதுமக்கள் சார்பில் போலீசுக்கு, பலத்த காற்று மழையால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் நேற்று இரவு மற்றும் இன்று காலை வரை பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றி வருகின்றனர். பேனர் வைத்ததை அகற்றும் போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு காணப்பட்டது.

    இந்த நிலையில் போலீ சார் பேனர் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

    • மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம், மழை நீர் உயிர் நீர், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான் பவன் சாலையில் நடைபெற்றது. பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் , மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கூடுதல் கலெக்டர் மதுபாலன் , வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தி பேரணி கடலூர் அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன் ஹாலில் வந்து முடிவடைந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் ஊர்வலத்தில் நடந்து வந்தனர். மேலும் பேரணி முழுவதும் தண்ணீர் அவசியத்தை குறித்தும், மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம், மழை நீர் உயிர் நீர், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் வாகனங்களில் தெரிவித்து வந்தனர். அப்போது நகர் நல அலுவலர் (பொறுப்பு)ஜாபர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சரஸ்வதி வேலுசாமி, ஆராமுது, சரிதா, செந்தில் குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி பேனர்கள் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
    • குறிப்பிட்ட சில கட்சிகளின் பேனர்கள் மட்டும் மர்மநபர்களால் கிழிக்கப்பட்டு இருப்பதாக பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி பேனர்கள் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட சில கட்சிகளின் பேனர்கள் மட்டும் மர்மநபர்களால் கிழிக்கப்பட்டு இருப்பதாக பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சென்னல்தா புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த மகாராஜா(வயது 27), அதே பகுதியைச் சேர்ந்த வைகுண்ட ராஜா(28), பழைய வேத கோவில் தெருவை சேர்ந்த சுபாஷ் (27), நாட்டார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பொன்மாரி(24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அகற்றக் கூறிய டிராபிக் ராமசாமியை அரசியல் கட்சியினர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #trafficRamasamy

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிக்கு நேற்று மாலை டிராபிக் ராமசாமி காரில் வந்தார். திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் பேனர்களை கண்டவுடன் டிராபிக் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அங்கிருந்த பேனர்களை தனது செல்போன் மூலம் படம் எடுத்துக்கொண்டு இருந்தார்.

    இதுகுறித்த தகவல் அங்கு பரவியதால் திருவையாறு கடைவீதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி கேள்விப்பட்டதும் திருவையாறு போலீசார், பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது அங்கு பேனருக்காக வைக்கப்பட்டிருந்த கட்டைகளையும், கம்புகளையும் அகற்ற வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்தார். இதனால் பேரூராட்சி பணியாளர்கள் அந்த கட்டைகளை அப்புறப்படுத்த முயன்றனர்.

    அப்போது அங்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் டிராபிக் ராமசாமியை தாக்க முயன்றனர். உடனே அவருடன் வந்த பாதுகாப்பு போலீசார், டிராபிக் ராமசாமியை பத்திரமாக அவரது காருக்கு அழைத்து சென்றார்.

    அப்போது டிராபிக் ராமசாமி ஆவேசமாக, என்னை தாக்க முற்பட்டவர்கள் மீதும், கொலை செய்வதாக கூறியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டை செல்வேன் என்று கூறினார்.

    இந்த சம்பவத்தால் திருவையாறு கடை வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து டிராபிக் ராமசாமி பாபநாசம் பகுதிக்கு சென்றார். ஆனால் அவர் வருவதை தகவல் அறிந்து பாபநாசம் கடை வீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை போலீசாரே இரவோடு இரவாக அகற்றினர். #trafficRamasamy

    ×