search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே  பேனர்களை கிழித்த 4 வாலிபர்கள் கைது
    X

    பாவூர்சத்திரம் அருகே பேனர்களை கிழித்த 4 வாலிபர்கள் கைது

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி பேனர்கள் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
    • குறிப்பிட்ட சில கட்சிகளின் பேனர்கள் மட்டும் மர்மநபர்களால் கிழிக்கப்பட்டு இருப்பதாக பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி பேனர்கள் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட சில கட்சிகளின் பேனர்கள் மட்டும் மர்மநபர்களால் கிழிக்கப்பட்டு இருப்பதாக பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சென்னல்தா புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த மகாராஜா(வயது 27), அதே பகுதியைச் சேர்ந்த வைகுண்ட ராஜா(28), பழைய வேத கோவில் தெருவை சேர்ந்த சுபாஷ் (27), நாட்டார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பொன்மாரி(24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×