search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்- அதிகாரிகள் எச்சரிக்கை
    X

    பொன்னேரி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்- அதிகாரிகள் எச்சரிக்கை

    • பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.
    • சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 28 வார்டுகளில் பொது மக்களுக்கு இடையூறாக பஸ் நிலையம், முக்கிய வீதி, பஜார், தெருக்களில், சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனை சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

    அதன்படி பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர். மேலும் அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம் விதித்து போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    Next Story
    ×