search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of advertising"

    • தனியார் நிறுவன விளம்பர பேனர்கள் உள்ளிட்ட ஏராளமான பேனர்கள் ஆங்காங்கே மிக உயரமாகவும், மிகவும் நீளமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.
    • இந்த நிலையில், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் 6-ந் தேதி காலைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை அகற்றி கொள்ளுமாறு தெரிவித்திருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள பரமத்தி, வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும், கபிலர்மலை, பரமத்தி, மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளிலும் சாலை ஓரங்களில் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூராகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் கண்ணீர் அஞ்சலி, பிறந்தநாள் வாழ்த்து, கோவில், கட்சி விளம்பரங்கள், தனியார் நிறுவன விளம்பர பேனர்கள் உள்ளிட்ட ஏராளமான பேனர்கள் ஆங்காங்கே மிக உயரமாகவும், மிகவும் நீளமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் 6-ந் தேதி காலைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை அகற்றி கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், சாலை ஓரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு அகற்றப்படாமல் இருந்த அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் நேற்று மாலை வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

    பரமத்தி பேரூராட்சியில் பஸ் ஸ்டாப் அருகில் மற்றும் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. அதேபோல் பரமத்திவேலூர்-ஜேடர்பாளையம் 4 ரோடு சாலைகளிலும், முக்கோண பூங்கா, சுல்தான்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வைத்திருந்த விளம்பர பிளக்ஸ் பேனர்களை வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    அதேபோல் பொத்தனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும், 4 ரோடு சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றினர்.

    இனி வரும் நாட்களில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறியும், பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதி இன்றியும் பேரூராட்சி பகுதிகளில் வைக்கப்படும் விளம்பர பிளக்ஸ் பேனர்களின் உரிமையா ளர்கள் மீது அபராதம் விதித்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×