search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதாகைகள்"

    • இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
    • கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், அனுமதி இன்றியும் வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், வளைவுகள், மன்றங்கள், எட்டாத உயரத்தில் இருக்கும் கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விளம்பர பதாகைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
    • விளம்பர பதாகைகள் வைத்துக் கொள்ள முறையான அனுமதி பெற வேண்டும்.

    வெள்ளகோவில்:

    பொதுமக்களின் புகாரின் பேரில் வெள்ளகோவில் நகராட்சி செம்மாண்டம்பாளையம் ரோடு பிரிவில் பொதுமக்களுக்காக இடையூறாக நகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் எஸ். வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-

    வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் விளம்பர பதாகைகள் வைத்தாலோ அல்லது நகராட்சி அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தாலோ நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் முறையான அனுமதி பெற்று பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    • மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம், மழை நீர் உயிர் நீர், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான் பவன் சாலையில் நடைபெற்றது. பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் , மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கூடுதல் கலெக்டர் மதுபாலன் , வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தி பேரணி கடலூர் அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன் ஹாலில் வந்து முடிவடைந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் ஊர்வலத்தில் நடந்து வந்தனர். மேலும் பேரணி முழுவதும் தண்ணீர் அவசியத்தை குறித்தும், மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம், மழை நீர் உயிர் நீர், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் வாகனங்களில் தெரிவித்து வந்தனர். அப்போது நகர் நல அலுவலர் (பொறுப்பு)ஜாபர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சரஸ்வதி வேலுசாமி, ஆராமுது, சரிதா, செந்தில் குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×