search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிகள்"

    • இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
    • கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், அனுமதி இன்றியும் வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், வளைவுகள், மன்றங்கள், எட்டாத உயரத்தில் இருக்கும் கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து மின்கம்பிகளை முழுமையாக மூடி மறைத்துள்ளன.
    • கொடிகள் வழியே மின்சாரம் பாய்ந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கும்.

     மயிலாடுதுறை:

    கொள்ளிடம் கடைவீதியிலிருந்து ஆச்சாள்புரம், ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையிலிருந்து கொள்ளிடம் அக்ரஹார தெருவுக்கு மின் கம்பங்கள் மூலம் மின் கம்பிகள்செல்கின்றன.

    இதில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை முழுமையாக மூடி மறைத்துள்ளன.

    இதன் வழியே அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்சாரம் சென்று கொண்டிருக்கின்றன.தாழ்வாக செல்லும் மின்கம்பியில் கொடிகள் படர்ந்துள்ளதால் மழை நேரங்களில் கம்பிகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் கொடிகள் வழியே மின்சாரம் பாய்ந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கும் அபாய நிலை உள்ளது.

    இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படவும், தீவிபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பிகளை அடர்ந்து சூழ்ந்து மூடி மறைத்துள்ள செடிகளை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • செடி, கொடிகள் மண்டி தற்போது கம்பத்தில் படர்ந்து மின்கம்பியை தொடும் நிலையில் வளர்ந்துள்ளன.
    • செடி கொடிகளை அகற்றி பாதுகாப்பான முறையில் மின்விநியோகம் வழங்க வேண்டும்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மின் பகிர்மான நிலையத்திற்கு சொந்தமான எல்லையில் உள்ள மோளையானூர் பேருந்து நிறுத்தம், வெங்கடமுத்திரத்தில் இருந்து முள்ளிக்காடு செல்லும் பாதை , ஏ. பள்ளிப்பட்டியில் இருந்து சர்க்கரை ஆலை செல்லும் சாலை மற்றும் ஏராளமான இடங்களில் விவசாய நில பகுதியில் உள்ள மின் கம்பங்களில் செடி, கொடிகள் மண்டி தற்போது கம்பத்தில் படர்ந்து மின்கம்பியை தொடும் நிலையில் வளர்ந்துள்ளன.

    சமீபத்தில் பருவமழை பொழிந்ததால் இவை அதிக அளவில் வளர்ந்து மின் கம்பியின் மீது கொடி போல படர்ந்துள்ளது. இதனால் மின் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. விவசாய நிலங்களில் விவசாயிகள் தண்ணீர் விட்டு வயல் வேலையை செய்யும்

    போது மின் விபத்துக்கள் ஏற்படும் என்ற அச்ச உணர்வுடனே தற்போது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்

    எனவே பாப்பிரெட்டிப் பட்டி மின்வாரியம் உடனடியாக தனி கவனம் செலுத்தி மின் கம்பங்களில் சுற்றியுள்ள செடி கொடிகளை அகற்றி பாதுகாப்பான முறையில் மின்விநியோகம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×