search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சரக்கு அடிங்க.. குட்கா போடுங்க.. ஆனா இதுக்கு முக்கியத்துவம் கொடுங்க.. பாஜக எம்பியின் அட்வைஸ்
    X

    சரக்கு அடிங்க.. குட்கா போடுங்க.. ஆனா இதுக்கு முக்கியத்துவம் கொடுங்க.. பாஜக எம்பியின் அட்வைஸ்

    • பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா தண்ணீரை பாதுகாப்பது குறித்து பேசினார்.
    • தண்ணீர் வரி செலுத்துகிறோம், மின்சார வரி உள்பட மீதமுள்ள வரிகளை நீங்கள் தள்ளுபடி செய்யுங்கள்.

    மத்திய பிரதேசம் மாநிலம், ரேவாவில் தண்ணீரைப் பாதுகாப்பது குறித்து ரேவா தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஜனார்தன் மிஸ்ரா சர்ச்சைக்குறிய வினோதமான கருத்தை தெரிவித்துள்ளார்.

    ரேவா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ் கபூர் ஆடிட்டோரியத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா தண்ணீரை பாதுகாப்பது குறித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்று குட்கா சாப்பிடுங்கள், மதுபானம் அருந்துங்கள், திண்ணரை முகருங்கள், சுலேசன் (ஒரு வகையான பிசின்) அல்லது அயோடெக்ஸ் என்று எது வேண்டும் என்றாலும் சாப்பிடுங்கள். ஆனால் தண்ணீரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்.

    எந்த அரசு தண்ணீர் வரியை தள்ளுபடி செய்வதாக அறிவிதாலும், நாங்கள் தண்ணீர் வரி செலுத்துகிறோம், மின்சார வரி உள்பட மீதமுள்ள வரிகளை நீங்கள் தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிஸ்ரா தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவது இது முதல் முறை அல்ல. அவர் செய்யும் எதிர்பாராத மற்றும் விசித்திரமான செயல்கள் மூலம் தலைப்புச் செய்தியில் தொடர்ந்து இடம் பெறுகிறார். சமீபத்தில், அவர் தனது கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×