search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voting percentage"

    • 6 மணிக்கு முன், வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
    • 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

    அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 11.1 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 25.1 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 40 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.03 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 64 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

    2ம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 6 மணிக்கு முன், வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    • நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • அதிகபட்சமாக திரிபுராவில் 79.90 சதவீதம் வாக்குப்பதிவு.

    18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    அதாவது, தமிழ்நாடு (39 தொகுதிகள்), உத்தரகாண்ட் (5), அருணாசல பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிகோபார் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), மராட்டியம் (5), பீகார் (4), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), காஷ்மீர் (1), சத்தீஷ்கார் (1) என 102 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.

    நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

    நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டுவதால், காலையிலேயே அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். பின்னர் நண்பகல் மற்றும் மதிய நேரத்தில் பல இடங்களில் மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்டது. மாலையில் மீண்டும் வேகமெடுத்தது.

    இவ்வாறு விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அதேநேரம் வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.

    இந்த முதற்கட்ட தேர்தலில் கடைசியாக கிடைத்த தகவலின்படி 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக திரிபுராவில் 79.90 சதவீதம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 77.57 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    அதன்படி, நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    நாடாளுமன்ற தேர்தலில் காலை 11 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தல் நடக்கிற 7 மாநிலங்களில் அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி பீகாரில் 21.52%, அரியானாவில் 21.01%, மத்தியப்பிரதேசத்தில் 20.93%, உத்தரப்பிரதேசத்தில் 21.57%, மேற்கு வங்காளத்தில் 37.56%, ஜார்க்கண்டில் 30.23%, டெல்லியில் 15.95 சதவீதம் வாக்குகள்  பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற்ற மூன்றாம்கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 64.66 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று மூன்றாம்கட்ட தேர்தல் நடைபெற்றது.

    இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அசாம் மாநிலத்தில் 78.29% வாக்குகளும் பீகாரில் 59.97% வாக்குகளும் பதிவாகின. கோவாவில் 71.09% வாக்குகளும் குஜராத்தில் 60.21% வாக்குகளும் பதிவாகின. ஜம்மு-காஷ்மீரில் 12.86% வாக்குகளும் கர்நாடகாவில் 64.14% வாக்குகளும் பதிவாகின. கேரளாவில் 70.21% வாக்குகளும் மகாராஷ்டிராவில் 56.57% வாக்குகளும் பதிவாகின.

    ஒடிசாவில் 58.18% வாக்குகளும் திரிபுராவில் 78.52% வாக்குகளும் பதிவாகின. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 57.74% வாக்குகளும் மேற்கு வங்காளத்தில் 79.36% வாக்குகளும் சத்தீஸ்கரில் 65.91% வாக்குகளும் பதிவாகின.



    யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யில் 71.43% வாக்குகளும் டாமன் மற்றும் டியூ-வில் 65.34% வாக்குகளும் பதிவாகின.

    ‏அவ்வகையில், மேற்கண்ட தொகுதிகளில் இன்று ஒட்டுமொத்தமாக 64..66 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #voterturnout
    ×